தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில், இது ஏதோ புதிய சினிமாவின் பெயர் என்றோ அல்லது அடிதடி நாயகனின், "பஞ்ச் டயலாக்' என்றோ தான், இன்றைய இளைஞர்கள் எண்ணுவர். மிகச் சரியாக, 70 ஆண்டுகளுக்கு முன், இதே ஆகஸ்ட் 8ம் தேதி, "செய் அல்லது செத்து மடி' என்ற இந்த எழுச்சிக் குரல், ஆவேச அறைகூவல், இடியோசையாய் வந்து இறங்கியது.
இதை ஒரு புரட்சியாளன், ஒரு போர் வீரன் சொல்லியிருந்தால், பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கக் கூடும். ஆனால், இதைச் சொன்னவன், சுத்த சுயம் பிரகாசமான, அப்பழுக்கற்ற, ஓர் உண்மையான அகிம்சாவாதி. ஆம்... அன்பின் வடிவம், அறநெறியின் உருவகம், கருணா மூர்த்தி, மகாத்மா காந்தி தான், "செய் அல்லது செத்து மடி' என்ற கோஷத்தை, 1942, ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைத்தார்!
உலகம் மொத்தத்தையும், தன் குடையின் கீழ் கொண்டு வந்து விட்டதாய் இறுமாப்புடன் இருந்த இங்கிலாந்து, மகாத்மாவின் இந்த பிரகடனத்தை எதிர்கொள்ள வழி தெரியாமல் திணறியதும், நம் தேசத் தந்தையின் இந்த அறைகூவலே, ஒரு புதிய விடியலுக்கான பூபாளமாக அமைந்ததும், வரலாறு நமக்குச் சொல்கிற அழியாத உண்மைகள். இது நடந்து, 70 ஆண்டுகளுக்குப் பின், சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளுக்கு அப்புறமும், இந்த கோஷம், "உயிர்ப்பு'டன் இருப்பதை வெற்றி எனக் கொள்வதா; வீழ்ச்சி எனச் சொல்வதா? அரசியல், ஆன்மிகம், இலக்கியம், கலை, பண்பாடு, பொருளாதாரம், சுகாதாரம் என்று ஒவ்வொரு துறையிலும், நாம் காண்கிற சீர்குலைவு, "செய் அல்லது செத்து மடி' என்று, ஓங்கி ஓங்கி சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஆனால், "வேண்டப்பட்டவர்களின்' காதுகளை, அது எட்டியதாகவே தெரியவில்லை! ஒரே ஒரு மனிதனின் குரல், இங்கிலாந்து வரை குலுக்கியது; இன்று...? எத்தனை லட்சம் பேர், கரடியாய் கத்தினாலும், என்ன தான் உயிர் போகிற பிரச்னையாக இருந்தாலும், "கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா' கதை தான்! வணிகம் செய்ய வந்தவர்கள் தாம்; ஆனால், 347 ஆண்டுகள் ஆயிற்று, அவர்களின் ஆட்டத்தைத் தடுத்து நிறுத்த. இதோ, இன்றும் நம் வீட்டு வாசலில், எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து விடத் தயாராக, "வால்மார்ட்கள்' மற்றும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒபாமாக்கள்! "வெள்ளையனே வெளியேறு' போராட்டம் தொடங்கிய, 71வது ஆண்டு நினைவு நாளில், கட்டுக்கோப்பான நம் உள்நாட்டுப் பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டிக் காக்க வேண்டியதன் அவசர, அவசியத்தை, நாம் உணர்ந்து செயல்பட்டால், அனைவருக்கும் நல்லது.
இது ஒரு அரசியல் கோரிக்கை அல்ல; அன்றாடங் காய்ச்சிகளின் அடிமனக் குமுறல். ஆத்மாவை விற்று விட்டு, ஆகாயத்தில் பறக்க எத்தனிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனம்? கிராம நிர்வாகம், கிராம முன்னேற்றம், கிராமத்து மக்களின் பொருளாதார சுய நிறைவு... இதுவே காந்தியத்தின் அடித்தளம்; ஆதார சுருதி. இதை நோக்கி வைக்கிற ஒவ்வொரு அடியும், நிரந்தர நன்மை தரும். மாறான எந்த ஒரு திட்டமும், சாமான்யனின் மீது, அடி மீது அடியாகவே விழும். இதைப் புரிந்து நடந்து கொண்டால், "செய் அல்லது செத்து மடி' என்ற கோஷம் அவசியமின்றி, அர்த்தமின்றிப் போகும்.
இதுதான், நம் ஆகஸ்ட் புரட்சியின், 70 ஆண்டு நிறைவில், நம் அனைவருக்கும் நிறைவைத் தருகிற நற்செய்தியாக இருக்கும். "சப்கோ சன்மதி தே பகவான்!' இது மகாத்மாவுக்கு மிகவும் பிடித்த வரி; பொருள் வேறு ஒன்றும் இல்லை - எல்லாருக்கும் நல்ல புத்தியைக் கொடு, ஆண்டவனே!
இதை ஒரு புரட்சியாளன், ஒரு போர் வீரன் சொல்லியிருந்தால், பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கக் கூடும். ஆனால், இதைச் சொன்னவன், சுத்த சுயம் பிரகாசமான, அப்பழுக்கற்ற, ஓர் உண்மையான அகிம்சாவாதி. ஆம்... அன்பின் வடிவம், அறநெறியின் உருவகம், கருணா மூர்த்தி, மகாத்மா காந்தி தான், "செய் அல்லது செத்து மடி' என்ற கோஷத்தை, 1942, ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைத்தார்!
உலகம் மொத்தத்தையும், தன் குடையின் கீழ் கொண்டு வந்து விட்டதாய் இறுமாப்புடன் இருந்த இங்கிலாந்து, மகாத்மாவின் இந்த பிரகடனத்தை எதிர்கொள்ள வழி தெரியாமல் திணறியதும், நம் தேசத் தந்தையின் இந்த அறைகூவலே, ஒரு புதிய விடியலுக்கான பூபாளமாக அமைந்ததும், வரலாறு நமக்குச் சொல்கிற அழியாத உண்மைகள். இது நடந்து, 70 ஆண்டுகளுக்குப் பின், சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளுக்கு அப்புறமும், இந்த கோஷம், "உயிர்ப்பு'டன் இருப்பதை வெற்றி எனக் கொள்வதா; வீழ்ச்சி எனச் சொல்வதா? அரசியல், ஆன்மிகம், இலக்கியம், கலை, பண்பாடு, பொருளாதாரம், சுகாதாரம் என்று ஒவ்வொரு துறையிலும், நாம் காண்கிற சீர்குலைவு, "செய் அல்லது செத்து மடி' என்று, ஓங்கி ஓங்கி சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஆனால், "வேண்டப்பட்டவர்களின்' காதுகளை, அது எட்டியதாகவே தெரியவில்லை! ஒரே ஒரு மனிதனின் குரல், இங்கிலாந்து வரை குலுக்கியது; இன்று...? எத்தனை லட்சம் பேர், கரடியாய் கத்தினாலும், என்ன தான் உயிர் போகிற பிரச்னையாக இருந்தாலும், "கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா' கதை தான்! வணிகம் செய்ய வந்தவர்கள் தாம்; ஆனால், 347 ஆண்டுகள் ஆயிற்று, அவர்களின் ஆட்டத்தைத் தடுத்து நிறுத்த. இதோ, இன்றும் நம் வீட்டு வாசலில், எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து விடத் தயாராக, "வால்மார்ட்கள்' மற்றும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒபாமாக்கள்! "வெள்ளையனே வெளியேறு' போராட்டம் தொடங்கிய, 71வது ஆண்டு நினைவு நாளில், கட்டுக்கோப்பான நம் உள்நாட்டுப் பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டிக் காக்க வேண்டியதன் அவசர, அவசியத்தை, நாம் உணர்ந்து செயல்பட்டால், அனைவருக்கும் நல்லது.
இது ஒரு அரசியல் கோரிக்கை அல்ல; அன்றாடங் காய்ச்சிகளின் அடிமனக் குமுறல். ஆத்மாவை விற்று விட்டு, ஆகாயத்தில் பறக்க எத்தனிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனம்? கிராம நிர்வாகம், கிராம முன்னேற்றம், கிராமத்து மக்களின் பொருளாதார சுய நிறைவு... இதுவே காந்தியத்தின் அடித்தளம்; ஆதார சுருதி. இதை நோக்கி வைக்கிற ஒவ்வொரு அடியும், நிரந்தர நன்மை தரும். மாறான எந்த ஒரு திட்டமும், சாமான்யனின் மீது, அடி மீது அடியாகவே விழும். இதைப் புரிந்து நடந்து கொண்டால், "செய் அல்லது செத்து மடி' என்ற கோஷம் அவசியமின்றி, அர்த்தமின்றிப் போகும்.
இதுதான், நம் ஆகஸ்ட் புரட்சியின், 70 ஆண்டு நிறைவில், நம் அனைவருக்கும் நிறைவைத் தருகிற நற்செய்தியாக இருக்கும். "சப்கோ சன்மதி தே பகவான்!' இது மகாத்மாவுக்கு மிகவும் பிடித்த வரி; பொருள் வேறு ஒன்றும் இல்லை - எல்லாருக்கும் நல்ல புத்தியைக் கொடு, ஆண்டவனே!
-சென்னையிலிருந்து பாஸ்கர பாரதி, ராஜாஜி பொது நல மைய செயலர்,
நன்றி
தினமலர்