கேள்வி: கடவுளே... எங்கள் திருப்திக்காக, உங்களுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து கொள்கிறோமே... அதில் என்ன தவறிருக்கிறது?
கடவுள்: அடேய் மானிடா!... நீ அர்ச்சனை, அபிஷேகம் செய்வதால் நான் உயர்வடையப் போவதில்லை. உன்னை வடிவமைத்த என்னை நீ சாதாரணமாக அடையாளப் படுத்தாதே! "கடவுள் இல்லை" என்று சொன்னால் உனக்கு எவ்வளவு கோபம் வருகிறது? உறவு, நட்பு என்று கூட பார்க்காமல் எத்தனை எடுத்தெறிந்து பேசுகிறாய்? ஆனால், அண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் அதிகாரத்தில் இருக்கும் என்னை வாழைப் பழத்திற்கும், தேங்காய்க்கும் பிச்சை எடுப்பது போல் கேவலப் படுத்துகிறாயே?... அதைப் பார்த்து நான் எவ்வளவு ஆத்திரப்பட வேண்டும்? எவ்வளவு கொந்தளிப்பு அடைய வேண்டும்?...
இந்தப் பிரபஞ்சம் எனக்கானது... என்னுடைய தேவைக்காக படைக்கப்பட்ட சிறிய மானிடப் பூச்சிகள்தான் நீங்கள். இங்கே உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. வானத்தில் பறக்கிறோம், வின்வெளிக்கு ராக்கெட் அனுப்புகிறோம் என்று மமதையில் ஆடாதீர்கள்! இந்த பிரபஞ்சத்தில் ஒரு எல்லை வரை மட்டுமே உங்களுக்கு அனுமதி... எல்லையைத் தாண்ட முயற்சித்தால்... பூமியையே இரண்டாகப் பிளந்தெரிந்து விடுவேன்! அதனால் யாருக்கு என்ன விளைவு என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்!! பூகம்பங்களையும், சுனாமிகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கச் செய்து விடாதீர்கள்!!
"கடவுளும் நானும்" தொடரில் இருந்து....
- எழுத்ததிகாரன்.
கடவுள்: அடேய் மானிடா!... நீ அர்ச்சனை, அபிஷேகம் செய்வதால் நான் உயர்வடையப் போவதில்லை. உன்னை வடிவமைத்த என்னை நீ சாதாரணமாக அடையாளப் படுத்தாதே! "கடவுள் இல்லை" என்று சொன்னால் உனக்கு எவ்வளவு கோபம் வருகிறது? உறவு, நட்பு என்று கூட பார்க்காமல் எத்தனை எடுத்தெறிந்து பேசுகிறாய்? ஆனால், அண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் அதிகாரத்தில் இருக்கும் என்னை வாழைப் பழத்திற்கும், தேங்காய்க்கும் பிச்சை எடுப்பது போல் கேவலப் படுத்துகிறாயே?... அதைப் பார்த்து நான் எவ்வளவு ஆத்திரப்பட வேண்டும்? எவ்வளவு கொந்தளிப்பு அடைய வேண்டும்?...
இந்தப் பிரபஞ்சம் எனக்கானது... என்னுடைய தேவைக்காக படைக்கப்பட்ட சிறிய மானிடப் பூச்சிகள்தான் நீங்கள். இங்கே உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. வானத்தில் பறக்கிறோம், வின்வெளிக்கு ராக்கெட் அனுப்புகிறோம் என்று மமதையில் ஆடாதீர்கள்! இந்த பிரபஞ்சத்தில் ஒரு எல்லை வரை மட்டுமே உங்களுக்கு அனுமதி... எல்லையைத் தாண்ட முயற்சித்தால்... பூமியையே இரண்டாகப் பிளந்தெரிந்து விடுவேன்! அதனால் யாருக்கு என்ன விளைவு என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்!! பூகம்பங்களையும், சுனாமிகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கச் செய்து விடாதீர்கள்!!
"கடவுளும் நானும்" தொடரில் இருந்து....
- எழுத்ததிகாரன்.