கஜகஸ்தான் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விதவை பெண் வாழ்ந்து வந்தாள். வளுக்கு மூன்று மகள்கள். வாலிப வயதை அடைந்த அவர்கள் சுயமாய் சம்பாதித்து, தாயை காப்பாற்றினர். அவர்களில் ஒருத்தி இராட்டையில் நூல் நூற்றாள். மற்ற இருவரும் துணி நெய்து, ஆடைகளை வடிவமைத்து தைத்தனர். தாய் அவைகளை சந்தையில் விற்று வந்தாள்.
ஒருநாள் அவர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அந்த தெரு வழியாக ஒரு குறத்தி வந்தாள். அவள் கைரேகை பார்த்து சோதிடம் சொல்பவள். சகோதரிகள் மூவரும் அவளை அழைத்து, தங்கள்
கைகளைப் பார்த்து சோதிடம் சொல்லு மாறு கேட்டனர்.
குறத்தி அவர்கள் கைகளில் தனது சிறிய கோலை வைத்து, அவர்கள் எதிர்கால வாழ்க்கையைக் கூறினாள். மூத்தவள் கணவன் ஒரு கிணற்றில் இருப்பதாகவும், இரண்டாமவள் புருஷன் கல்லறையில் இருப்பதாகவும், மூன்றாமவள் துணைவன் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறிச் சென்றாள். அதைக் கேட்டு மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறிது காலத்துக்குப் பிறகு-
ஒருநாள் நூல் நூற்றுக் கொண்டிருக்கும் போது அக்காளின் இராட்டையில் ஊசி முறிந்தது. நூலைச் சுற்றும் வட்டு உருண்டு சென்றது. அதன் பின்னால் ஓடிச் சென்றும், அதை கைப்பற்ற முடியவில்லை. அந்த வட்டு உருண்டு சென்று ஒரு கிணற்றில் விழுந்தது.
தங்கைகள் அக்காளை ஒரு கயிற்றில் கட்டி கிணற்றின் உள்ளே இறக்கினர். அவள் உள்ளே இறங்கித் தேடினாள். அங்கு கிணற்றுச் சுவரில் ஓர் இரும்பு கதவு காணப்பட்டது. அவள் அதைத் திறந்து உள்ளே சென்றாள். உள்ளே அவள் கண்ட காட்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
அங்கே ஓர் இளைஞனும், பெண்ணும் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த இளைஞனின் அருகில் ஒரு கூர்மையான சக்தி வாய்ந்த கத்தி கிடந்தது. அவள் அதை எடுத்து தனது இடுப்புக் கச்சையில் சொருகி கொண்டாள். பிறகு அந்த அறையை விட்டு வெளியே வந்ததும், இரும்புக் கதவை சாத்தினாள்.
பின்னர் கயிற்றை அசைத்து தன்னை மேலே தூக்குமாறு தெரிவித்தாள்.
உடனே சகோதரிகள் இருவரும் கயிற்றை இழுத்து அவளை வெளியே எடுத்தனர். ""ஏன் இவ்வளவு நேரம்?'' என்று தங்கை கேட்டாள்.
""எனது வட்டையும், ஊசியையும் தேடிக் கண்டு பிடிக்க நேரமாயிற்று,'' என்றாள். அவள் பதிலால் திருப்தி அடைந்த சகோதரிகள் வீட்டுக்கு சென்றனர்.
கிணற்றில் இருந்த இளைஞன் ஒரு செல்வந்தரின் மகன். அவனுடன் இருந்த பெண் ஒரு தேவதை.
அவர்கள் இருவரும் அந்தக் கிணற்றில் சந்தித்துக் கொள்வது வழக்கம்.
அந்த தேவதை கண் விழித்ததும், அந்த கத்தியை பார்த்தது. அது இல்லாமல் போகவே, அவனிடம், ""இங்கே ஒரு மானுடப் பெண் வந்திருக்கிறாள். அவள் யார்?'' என்று கேட்டது.
அவனால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே, தேவதை அவனிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்து, பறந்து மறைந்தது.
சக்தி வாய்ந்த கத்தி தன்னிடம் இல்லாததை அறிந்த இளைஞன், தன்னிடம் தேவதை இனிமேல் வராது, என்று தெரிந்துக் கொண்டான். பின்னர் அங்கு வருவதையும் நிறுத்திக் கொண்டான்.
"கத்தியை யார் எடுத்துச் சென்றிருப்பர்' என்று அவன் சிந்தித்தான். பின்னர் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது என்று தீர்மானித்தான்.
அவன் மொத்த விற்பனைக் கடைக்கு சென்று ஏராளமான பொருட்களை கொள்முதல் செய்தான். பின்னர் அவைகளைச் சுமந்தபடி தெருத் தெருவாகச் சென்றான். அவன் பொருட்களை காசுக்கு விற்கவில்லை. ஆனால், பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களைக் கொடுத்தான். குறிப்பாக, பழைய கத்தி, வாள் போன்ற பொருட்களை விரும்பித் தேடினான்.
ஒருநாள் அவன் அந்த மூன்று சகோதரிகள் வசிக்கும் தெருவுக்கு வந்தான்.
""பழைய சாமானுக்கு புதிய சாமான்,'' என்ற அவனது கூவல் சகோதரிகளைக் கவர்ந்தது. அவர்கள் அவனிடம் பொருட்கள் வாங்கினர். அவன் பழைய சாமானுக்கு புதிய சாமான் கொடுப்பதால், அக்காக்காரி அந்த பழைய கத்தியை எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள்.
அவளை பார்த்த அவன், அவள் அழகில் மயங்கினான். பிறகு அந்த கத்தியை பார்த்தான். அந்தக் கத்தி தன்னுடையது என்பதை அவன் அடையாளம் தெரிந்துக் கொண்டான். உடனே வீட்டுக்கு சென்று, தன் அன்னையிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அவன் அன்னை சகோதரிகளின் வீட்டுக்கு சென்றார்.
அவர் அந்த விதவைத் தாயை சந்தித்துப் பேசினார். நடந்ததை அறிந்த தாய் திருமணத்திற்கு சம்மதித்தார். பின்னர் சில நாட்களில் மூத்த சகோதரிக்கும், அந்த இளைஞனுக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.
மற்ற சகோதரிகள் இருவரும் தாயுடன் இருந்தனர். வழக்கமான கைத்தொழிலைச் செய்தனர்.
ஒருநாள் அக்காளும், தங்கையும் பெண்களுக்கான நீச்சல் குளத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் மகிழ்ச்சியாக நீந்திக் களித்தனர். பின்னர் தங்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றிருப்பர். அதற்குள் கடைசித் தங்கை காணாமல் போய்விட்டாள். அக்கா பல இடங்களில் தேடினாள். ஆனால், அவள் எத்திசையில் சென்று மறைந்தாள்? அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ள
முடியவில்லை.
அவள் தங்கையைத் தேடி அந்தப் பகுதி முழுவதும் நடந்தாள். அவளைப் பார்த்ததாக யாரும் சொல்லவில்லை. அவள் சென்றதற்கான அடையாளமும் இல்லை. அவளால் துன்பப்படத்தான் முடிந்ததே ஒழிய தங்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவள் நகரத்திலிருந்து வெகுதூரம் வரை வந்துவிட்டாள். ஆனாலும் தங்கையைக் காணமுடியவில்லை. அவள் எங்கு சென்றிருக்கக் கூடும் என்பதையும் அறிய முடியவில்லை. நடந்து நடந்து அவள் கால்கள் வலித்தன. அவளால் மேலும் நடக்கவும் முடியவில்லை. எனவே, அருகில் இருந்த ஒரு கட்டடத்தின் முன் இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்தாள். அமர்ந்தவள் களைப்பு மிகுதியால் அப்படியே உறங்கினாள்.
-1 தொடரும்.
தினமலர்.
ஒருநாள் அவர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அந்த தெரு வழியாக ஒரு குறத்தி வந்தாள். அவள் கைரேகை பார்த்து சோதிடம் சொல்பவள். சகோதரிகள் மூவரும் அவளை அழைத்து, தங்கள்
கைகளைப் பார்த்து சோதிடம் சொல்லு மாறு கேட்டனர்.
குறத்தி அவர்கள் கைகளில் தனது சிறிய கோலை வைத்து, அவர்கள் எதிர்கால வாழ்க்கையைக் கூறினாள். மூத்தவள் கணவன் ஒரு கிணற்றில் இருப்பதாகவும், இரண்டாமவள் புருஷன் கல்லறையில் இருப்பதாகவும், மூன்றாமவள் துணைவன் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறிச் சென்றாள். அதைக் கேட்டு மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறிது காலத்துக்குப் பிறகு-
ஒருநாள் நூல் நூற்றுக் கொண்டிருக்கும் போது அக்காளின் இராட்டையில் ஊசி முறிந்தது. நூலைச் சுற்றும் வட்டு உருண்டு சென்றது. அதன் பின்னால் ஓடிச் சென்றும், அதை கைப்பற்ற முடியவில்லை. அந்த வட்டு உருண்டு சென்று ஒரு கிணற்றில் விழுந்தது.
தங்கைகள் அக்காளை ஒரு கயிற்றில் கட்டி கிணற்றின் உள்ளே இறக்கினர். அவள் உள்ளே இறங்கித் தேடினாள். அங்கு கிணற்றுச் சுவரில் ஓர் இரும்பு கதவு காணப்பட்டது. அவள் அதைத் திறந்து உள்ளே சென்றாள். உள்ளே அவள் கண்ட காட்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
அங்கே ஓர் இளைஞனும், பெண்ணும் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த இளைஞனின் அருகில் ஒரு கூர்மையான சக்தி வாய்ந்த கத்தி கிடந்தது. அவள் அதை எடுத்து தனது இடுப்புக் கச்சையில் சொருகி கொண்டாள். பிறகு அந்த அறையை விட்டு வெளியே வந்ததும், இரும்புக் கதவை சாத்தினாள்.
பின்னர் கயிற்றை அசைத்து தன்னை மேலே தூக்குமாறு தெரிவித்தாள்.
உடனே சகோதரிகள் இருவரும் கயிற்றை இழுத்து அவளை வெளியே எடுத்தனர். ""ஏன் இவ்வளவு நேரம்?'' என்று தங்கை கேட்டாள்.
""எனது வட்டையும், ஊசியையும் தேடிக் கண்டு பிடிக்க நேரமாயிற்று,'' என்றாள். அவள் பதிலால் திருப்தி அடைந்த சகோதரிகள் வீட்டுக்கு சென்றனர்.
கிணற்றில் இருந்த இளைஞன் ஒரு செல்வந்தரின் மகன். அவனுடன் இருந்த பெண் ஒரு தேவதை.
அவர்கள் இருவரும் அந்தக் கிணற்றில் சந்தித்துக் கொள்வது வழக்கம்.
அந்த தேவதை கண் விழித்ததும், அந்த கத்தியை பார்த்தது. அது இல்லாமல் போகவே, அவனிடம், ""இங்கே ஒரு மானுடப் பெண் வந்திருக்கிறாள். அவள் யார்?'' என்று கேட்டது.
அவனால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே, தேவதை அவனிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்து, பறந்து மறைந்தது.
சக்தி வாய்ந்த கத்தி தன்னிடம் இல்லாததை அறிந்த இளைஞன், தன்னிடம் தேவதை இனிமேல் வராது, என்று தெரிந்துக் கொண்டான். பின்னர் அங்கு வருவதையும் நிறுத்திக் கொண்டான்.
"கத்தியை யார் எடுத்துச் சென்றிருப்பர்' என்று அவன் சிந்தித்தான். பின்னர் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது என்று தீர்மானித்தான்.
அவன் மொத்த விற்பனைக் கடைக்கு சென்று ஏராளமான பொருட்களை கொள்முதல் செய்தான். பின்னர் அவைகளைச் சுமந்தபடி தெருத் தெருவாகச் சென்றான். அவன் பொருட்களை காசுக்கு விற்கவில்லை. ஆனால், பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களைக் கொடுத்தான். குறிப்பாக, பழைய கத்தி, வாள் போன்ற பொருட்களை விரும்பித் தேடினான்.
ஒருநாள் அவன் அந்த மூன்று சகோதரிகள் வசிக்கும் தெருவுக்கு வந்தான்.
""பழைய சாமானுக்கு புதிய சாமான்,'' என்ற அவனது கூவல் சகோதரிகளைக் கவர்ந்தது. அவர்கள் அவனிடம் பொருட்கள் வாங்கினர். அவன் பழைய சாமானுக்கு புதிய சாமான் கொடுப்பதால், அக்காக்காரி அந்த பழைய கத்தியை எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள்.
அவளை பார்த்த அவன், அவள் அழகில் மயங்கினான். பிறகு அந்த கத்தியை பார்த்தான். அந்தக் கத்தி தன்னுடையது என்பதை அவன் அடையாளம் தெரிந்துக் கொண்டான். உடனே வீட்டுக்கு சென்று, தன் அன்னையிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அவன் அன்னை சகோதரிகளின் வீட்டுக்கு சென்றார்.
அவர் அந்த விதவைத் தாயை சந்தித்துப் பேசினார். நடந்ததை அறிந்த தாய் திருமணத்திற்கு சம்மதித்தார். பின்னர் சில நாட்களில் மூத்த சகோதரிக்கும், அந்த இளைஞனுக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.
மற்ற சகோதரிகள் இருவரும் தாயுடன் இருந்தனர். வழக்கமான கைத்தொழிலைச் செய்தனர்.
ஒருநாள் அக்காளும், தங்கையும் பெண்களுக்கான நீச்சல் குளத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் மகிழ்ச்சியாக நீந்திக் களித்தனர். பின்னர் தங்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றிருப்பர். அதற்குள் கடைசித் தங்கை காணாமல் போய்விட்டாள். அக்கா பல இடங்களில் தேடினாள். ஆனால், அவள் எத்திசையில் சென்று மறைந்தாள்? அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ள
முடியவில்லை.
அவள் தங்கையைத் தேடி அந்தப் பகுதி முழுவதும் நடந்தாள். அவளைப் பார்த்ததாக யாரும் சொல்லவில்லை. அவள் சென்றதற்கான அடையாளமும் இல்லை. அவளால் துன்பப்படத்தான் முடிந்ததே ஒழிய தங்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவள் நகரத்திலிருந்து வெகுதூரம் வரை வந்துவிட்டாள். ஆனாலும் தங்கையைக் காணமுடியவில்லை. அவள் எங்கு சென்றிருக்கக் கூடும் என்பதையும் அறிய முடியவில்லை. நடந்து நடந்து அவள் கால்கள் வலித்தன. அவளால் மேலும் நடக்கவும் முடியவில்லை. எனவே, அருகில் இருந்த ஒரு கட்டடத்தின் முன் இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்தாள். அமர்ந்தவள் களைப்பு மிகுதியால் அப்படியே உறங்கினாள்.
-1 தொடரும்.
தினமலர்.