கேள்வி: தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஏதாவது சொல்லுங்களேன்.
பதில்: அவங்களே பெயிலான வருத்தத்துல இருக்காங்க. அவங்களுக்கு நாம என்ன சொல்லுறது....
கேள்வி: அட சும்மா ஆறுதலா ஏதாவது சொல்லுங்க...
பதில்: நான் சொல்லுறது அவங்களுக்கு எப்படி தெரியப்போகுது?..
கேள்வி: பய புள்ளைங்க எல்...லாம் பேஸ் புக்குலதானே சுத்திகிட்டு இருக்குதுங்க. அதனாலதான் பெயிலா போயிருக்கும்-னு நினைக்கிறேன்.
பதில்: தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கையிலேயே தோல்வியடைந்து விட்டதாக அர்த்தம் இல்லை. நாம் படித்த கேள்வி தேர்வில் கேட்கப்படவில்லை என்றுதான் பொருள்!
கேள்வி: சரி ஒரு கஷ்டப்படுற குடும்பத்துப் பொண்ணு இந்தத் தேர்வில் வெற்றி பெற்று இருக்கு அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
பதில்: குடும்ப கஷ்டத்துக்கும் தேர்வில் வெற்றி பெறுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஏன்னா குழந்தைகளுக்கு கஷ்டம் தெரியாது. மதிப்பெண் அதிகமாக எடுத்தால் மட்டும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட முடியாது.
கேள்வி: அப்படின்னா தேர்வு என்பதே தேவை இல்லைன்னு சொல்ல வரீங்களா?
பதில்: என்னைப் பொருத்தவரையில் பள்ளிக்கூடம் என்பதே தேவை இல்லை!
கேள்வி: என்னங்க இப்படி சொல்லிடீங்க?...
பதில்: இன்றைய நிலையில் கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான ஒரு கருவியாக மட்டுமே கருதப்படுகிறது. ஆனால், எந்த வேலையை செய்வதற்கும் கல்வித்தகுதி அவசியமே இல்லை. கம்ப்யூட்டரில், ரைட் கிளிக் செஞ்சு டெலீட் அழுத்தினால் ஒரு பைல் நீக்கப்பட்டுவிடும். இதை தெரிந்துகொள்ள கணினி அறிவு அவசியம் இல்லை. காதுகேட்கும் திறன் இருந்தால் போதும். அதாவது சொல்லிக் கொடுத்தால் யாராலும் எதையும் செய்ய முடியும்.
கேள்வி: படிக்கவில்லை என்றால் DELETE என்பதை ஒருவன் எப்படி தெரிந்து கொள்வது?
பதில்: நான் பள்ளிக் கூடம்தான் தேவை இல்லைன்னு சொன்னேனே தவிர, படிக்கவே கூடாதுன்னு சொல்லலியே....
ஆனா......,
"ஹலோ.... டெலீட்-னா, ரைட் கிளிக் செஞ்சதும் கீழே இருந்து மூணாவது இருக்குறது தானே?"
"ஆமா.."
"ஓகே சார், டெலீட்!"
----------------------------------
"சார்... சிகப்பா இண்ட் (X) போட்டு என்னமோ சொல்லுதே. அப்படின்னா எர்ரர் தானே?"
"ஆமா..."
"ஓகே சார், ரீஸ்டார்ட்!"
"சார், நீங்க சொல்லிக் குடுத்த கூகுள் Translate ரொம்ப யூஸ் புல்லா இருக்கு. கஸ்டமர் கெல்லாம் English-ல தான் மெசேஜ் அனுப்புறேன்......
---------------------------------
அப்படின்னு போன்ல கேட்டுகிட்டு மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கும் சிலரை நான் உருவாக்கியிருக்கின்றேன்!
So, கல்வி என்பது பள்ளிக்கூடத்தில் மட்டும் இல்லை. வேலை வாய்ப்பு என்பது கல்வியால் மட்டும் வருவதில்லை. திறமையும், தன்னம்பிக்கையும், துணிவும் மட்டுமே இருந்தால் போதும். யாராலும், எதையும் செய்ய முடியும்!
"To a brave heart, Nothing is impossible!"
-எழுத்ததிகாரன்.
பதில்: அவங்களே பெயிலான வருத்தத்துல இருக்காங்க. அவங்களுக்கு நாம என்ன சொல்லுறது....
கேள்வி: அட சும்மா ஆறுதலா ஏதாவது சொல்லுங்க...
பதில்: நான் சொல்லுறது அவங்களுக்கு எப்படி தெரியப்போகுது?..
கேள்வி: பய புள்ளைங்க எல்...லாம் பேஸ் புக்குலதானே சுத்திகிட்டு இருக்குதுங்க. அதனாலதான் பெயிலா போயிருக்கும்-னு நினைக்கிறேன்.
பதில்: தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கையிலேயே தோல்வியடைந்து விட்டதாக அர்த்தம் இல்லை. நாம் படித்த கேள்வி தேர்வில் கேட்கப்படவில்லை என்றுதான் பொருள்!
கேள்வி: சரி ஒரு கஷ்டப்படுற குடும்பத்துப் பொண்ணு இந்தத் தேர்வில் வெற்றி பெற்று இருக்கு அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
பதில்: குடும்ப கஷ்டத்துக்கும் தேர்வில் வெற்றி பெறுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஏன்னா குழந்தைகளுக்கு கஷ்டம் தெரியாது. மதிப்பெண் அதிகமாக எடுத்தால் மட்டும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட முடியாது.
கேள்வி: அப்படின்னா தேர்வு என்பதே தேவை இல்லைன்னு சொல்ல வரீங்களா?
பதில்: என்னைப் பொருத்தவரையில் பள்ளிக்கூடம் என்பதே தேவை இல்லை!
கேள்வி: என்னங்க இப்படி சொல்லிடீங்க?...
பதில்: இன்றைய நிலையில் கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான ஒரு கருவியாக மட்டுமே கருதப்படுகிறது. ஆனால், எந்த வேலையை செய்வதற்கும் கல்வித்தகுதி அவசியமே இல்லை. கம்ப்யூட்டரில், ரைட் கிளிக் செஞ்சு டெலீட் அழுத்தினால் ஒரு பைல் நீக்கப்பட்டுவிடும். இதை தெரிந்துகொள்ள கணினி அறிவு அவசியம் இல்லை. காதுகேட்கும் திறன் இருந்தால் போதும். அதாவது சொல்லிக் கொடுத்தால் யாராலும் எதையும் செய்ய முடியும்.
கேள்வி: படிக்கவில்லை என்றால் DELETE என்பதை ஒருவன் எப்படி தெரிந்து கொள்வது?
பதில்: நான் பள்ளிக் கூடம்தான் தேவை இல்லைன்னு சொன்னேனே தவிர, படிக்கவே கூடாதுன்னு சொல்லலியே....
ஆனா......,
"ஹலோ.... டெலீட்-னா, ரைட் கிளிக் செஞ்சதும் கீழே இருந்து மூணாவது இருக்குறது தானே?"
"ஆமா.."
"ஓகே சார், டெலீட்!"
----------------------------------
"சார்... சிகப்பா இண்ட் (X) போட்டு என்னமோ சொல்லுதே. அப்படின்னா எர்ரர் தானே?"
"ஆமா..."
"ஓகே சார், ரீஸ்டார்ட்!"
"சார், நீங்க சொல்லிக் குடுத்த கூகுள் Translate ரொம்ப யூஸ் புல்லா இருக்கு. கஸ்டமர் கெல்லாம் English-ல தான் மெசேஜ் அனுப்புறேன்......
---------------------------------
அப்படின்னு போன்ல கேட்டுகிட்டு மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கும் சிலரை நான் உருவாக்கியிருக்கின்றேன்!
So, கல்வி என்பது பள்ளிக்கூடத்தில் மட்டும் இல்லை. வேலை வாய்ப்பு என்பது கல்வியால் மட்டும் வருவதில்லை. திறமையும், தன்னம்பிக்கையும், துணிவும் மட்டுமே இருந்தால் போதும். யாராலும், எதையும் செய்ய முடியும்!
"To a brave heart, Nothing is impossible!"
-எழுத்ததிகாரன்.