கேள்வி: பொது இடம் என்றால் என்ன?
பதில்: அறிமுகம் இல்லாத இரண்டு நபர்கள் சந்தித்துக் கொள்ளக் கூடிய அனைத்து இடமும் பொது இடம் தான்.
கேள்வி: அப்ப நம்ம வீட்டு சமையல் அறையும், படுக்கை அறையும் மட்டும் தானே பொது இடம் இல்ல?
பதில்: ஆமா.
கேள்வி: அப்ப பொது இடங்களில் பிச்சை எடுக்க தடை போட்டா என்ன அர்த்தம்?
பதில்: ஒன்னு, பிச்சைக் காரங்ககிட்டையும் கையேந்தப் போறாங்கன்னு அர்த்தம்! இன்னொன்னு, ரோட்டுல இருக்குற பிச்சைக்காரங்களை எல்லாம் நம்ம வீட்டுக்குள்ள வர சொல்லுறாங்கன்னு அர்த்தம்!
கேள்வி: ஏன் இப்படி எல்லாம் பண்ணுறாங்க?
பதில்: அறியாமைதான்!
கேள்வி: அறியாமைன்னா?
பதில்: என்ன பண்ணுறதுன்னு புரியாம லூசுத்தனமா எதையாவது செய்யிறதுக்குப் பேருதான் அறியாமை!
கேள்வி: இன்னும் கொஞ்சம் எளிமையா.....
பதில்: அதாவது, நாம சிகரெட்டை தடை பண்ணனும்னு பிரச்சாரம் பண்ணினா, அவங்க பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம்னு சட்டம் போடுவாங்க!
நாம ஒய்ன் ஷாப்பை மூடணும்னு போராட்டம் பண்ணினால், அவங்க பொது இடங்களில் மது அருந்தினால் அபராதம்னு சட்டம் போடுவாங்க!
கொய்யால... எதையுமே முழுசா பண்ண தெரியாது. பிச்சை எடுக்குறதே தப்புன்னு சொல்ல துப்பு இல்ல இதெல்லாம் நாட்டை என்ன பண்ணப் போகுதுங்களோ....
போற போக்குல பொது இடங்களில் மட்டும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்யக் கூடாதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க போல இருக்கு!
கேள்வி: ஒரு சந்தேகம்... அப்படின்னா பேஸ் புக் பொது இடமா இல்லையா?
பதில்: இல்லை!
கேள்வி: எப்படி சொல்லுறீங்க?
பதில்: பேஸ் புக்கை தூக்கிட்டுப் போயி, பஸ் டாண்டுலேயோ, ரயில்வே ஸ்டேஷன்லையோ, சினிமா தியேட்டரிலேயோ வச்சா மட்டும்தான் பொது இடம். அதுவரைக்கும் இது பொது இடம் இல்லை! அப்படின்னு நான் சொல்லல, சட்டப்படி அப்படித்தான் வருது!...
கடவுளே..... என்னை ஏன் ரொம்ப சிந்திக்க வைக்கிறே...?
-எழுத்ததிகாரன்
பதில்: அறிமுகம் இல்லாத இரண்டு நபர்கள் சந்தித்துக் கொள்ளக் கூடிய அனைத்து இடமும் பொது இடம் தான்.
கேள்வி: அப்ப நம்ம வீட்டு சமையல் அறையும், படுக்கை அறையும் மட்டும் தானே பொது இடம் இல்ல?
பதில்: ஆமா.
கேள்வி: அப்ப பொது இடங்களில் பிச்சை எடுக்க தடை போட்டா என்ன அர்த்தம்?
பதில்: ஒன்னு, பிச்சைக் காரங்ககிட்டையும் கையேந்தப் போறாங்கன்னு அர்த்தம்! இன்னொன்னு, ரோட்டுல இருக்குற பிச்சைக்காரங்களை எல்லாம் நம்ம வீட்டுக்குள்ள வர சொல்லுறாங்கன்னு அர்த்தம்!
கேள்வி: ஏன் இப்படி எல்லாம் பண்ணுறாங்க?
பதில்: அறியாமைதான்!
கேள்வி: அறியாமைன்னா?
பதில்: என்ன பண்ணுறதுன்னு புரியாம லூசுத்தனமா எதையாவது செய்யிறதுக்குப் பேருதான் அறியாமை!
கேள்வி: இன்னும் கொஞ்சம் எளிமையா.....
பதில்: அதாவது, நாம சிகரெட்டை தடை பண்ணனும்னு பிரச்சாரம் பண்ணினா, அவங்க பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம்னு சட்டம் போடுவாங்க!
நாம ஒய்ன் ஷாப்பை மூடணும்னு போராட்டம் பண்ணினால், அவங்க பொது இடங்களில் மது அருந்தினால் அபராதம்னு சட்டம் போடுவாங்க!
கொய்யால... எதையுமே முழுசா பண்ண தெரியாது. பிச்சை எடுக்குறதே தப்புன்னு சொல்ல துப்பு இல்ல இதெல்லாம் நாட்டை என்ன பண்ணப் போகுதுங்களோ....
போற போக்குல பொது இடங்களில் மட்டும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்யக் கூடாதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க போல இருக்கு!
கேள்வி: ஒரு சந்தேகம்... அப்படின்னா பேஸ் புக் பொது இடமா இல்லையா?
பதில்: இல்லை!
கேள்வி: எப்படி சொல்லுறீங்க?
பதில்: பேஸ் புக்கை தூக்கிட்டுப் போயி, பஸ் டாண்டுலேயோ, ரயில்வே ஸ்டேஷன்லையோ, சினிமா தியேட்டரிலேயோ வச்சா மட்டும்தான் பொது இடம். அதுவரைக்கும் இது பொது இடம் இல்லை! அப்படின்னு நான் சொல்லல, சட்டப்படி அப்படித்தான் வருது!...
கடவுளே..... என்னை ஏன் ரொம்ப சிந்திக்க வைக்கிறே...?
-எழுத்ததிகாரன்