தென் மாவட்டங்களில் இப்போதும் சில பழக்கங்கள் உண்டு.. வீட்டுக்கு கதவு வைத்தால் சாமி குத்தம்... படுக்க கட்டில் பயன்படுத்தினால் குற்றம்... இப்படி சில பழக்கங்கள்.
அதுபோல.. போட்டோ எடுத்துக் கொண்டால் மரணம் நேரும் என்றும் சில ஊர்களில் நம்பிக்கை உண்டு.
அந்த நம்பிக்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்துள்ளனர். அதுதான் முண்டாசுப்பட்டி.
இந்தப் படத்தில் விஷ்ணு நாயகனாவும் நந்திதா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ராம் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.
படம் குறித்து இயக்குநர் ராம் கூறுகையில், "முண்டாசுப்பட்டி என்னும் கற்பனையான கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தில் இருந்து அக்கிராம மக்கள் யாரும் புகைப்படம் எடுப்பதில்லை. அப்படி புகைப்படம் எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
புகைப்படக் கலைஞனாக இருக்கும் விஷ்ணு, தன் உதவியாளர் காளியுடன் அந்த கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள ஒருவரை புகைப்படம் எடுக்கிறான். அந்த புகைப்படத்தால் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக, நாயகனை அந்த கிராமத்திலேயே மக்கள் சிறை வைக்கிறார்கள். அதற்குப்பின் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு நாயகன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே முண்டாசுப்பட்டி படத்தின் கதை.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவைக்கு அருகில் மற்றும் சந்தியமங்கலம் பகுதிகளில் எடுத்தோம்.
இப்படத்தின் கதை 1980களில் நடப்பதால் அவ்வூரில் உள்ள வீடுகளை அதற்கு ஏற்றார்போல் மாற்றினோம். இப்படம் மூட நம்பிக்கையை சாடுகிற படமாக இருக்காது. மூட நம்பிக்கையால் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்லும்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியாகும்," என்றார்.
இந்தப் படமும் ஒரு குறும்படத்திலிருந்துதான் உருவாகியுள்ளது. நாளைய இயக்குநர்கள் போட்டிக்காக தான் எடுத்த 9 நிமிட படத்தைத்தான், இரண்டரை மணி நேரப் படமாக மாற்றியுள்ளார் ராம். இதற்கு முன் யாரிடமும் இவர் உதவியாளராகப் பணியாற்றியதில்லையாம்!
அதுபோல.. போட்டோ எடுத்துக் கொண்டால் மரணம் நேரும் என்றும் சில ஊர்களில் நம்பிக்கை உண்டு.
அந்த நம்பிக்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்துள்ளனர். அதுதான் முண்டாசுப்பட்டி.
இந்தப் படத்தில் விஷ்ணு நாயகனாவும் நந்திதா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ராம் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.
படம் குறித்து இயக்குநர் ராம் கூறுகையில், "முண்டாசுப்பட்டி என்னும் கற்பனையான கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தில் இருந்து அக்கிராம மக்கள் யாரும் புகைப்படம் எடுப்பதில்லை. அப்படி புகைப்படம் எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
புகைப்படக் கலைஞனாக இருக்கும் விஷ்ணு, தன் உதவியாளர் காளியுடன் அந்த கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள ஒருவரை புகைப்படம் எடுக்கிறான். அந்த புகைப்படத்தால் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக, நாயகனை அந்த கிராமத்திலேயே மக்கள் சிறை வைக்கிறார்கள். அதற்குப்பின் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு நாயகன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே முண்டாசுப்பட்டி படத்தின் கதை.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவைக்கு அருகில் மற்றும் சந்தியமங்கலம் பகுதிகளில் எடுத்தோம்.
இப்படத்தின் கதை 1980களில் நடப்பதால் அவ்வூரில் உள்ள வீடுகளை அதற்கு ஏற்றார்போல் மாற்றினோம். இப்படம் மூட நம்பிக்கையை சாடுகிற படமாக இருக்காது. மூட நம்பிக்கையால் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்லும்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியாகும்," என்றார்.
இந்தப் படமும் ஒரு குறும்படத்திலிருந்துதான் உருவாகியுள்ளது. நாளைய இயக்குநர்கள் போட்டிக்காக தான் எடுத்த 9 நிமிட படத்தைத்தான், இரண்டரை மணி நேரப் படமாக மாற்றியுள்ளார் ராம். இதற்கு முன் யாரிடமும் இவர் உதவியாளராகப் பணியாற்றியதில்லையாம்!