சென்னை:தமிழகத்தில் தொடரும் பள்ளி வாகன விபத்திற்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்காமல், விபத்து நடந்த பின்னரே விழித்துக் கொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை முடிச்சூர் அருகே, பள்ளி பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி, மாணவி ஸ்ருதி, 7, உடல் நசுங்கி பலியானாள். தமிழகத்தில், கடந்த மூன்றாண்டுகளில், 10க்கும் மேற்பட்ட பெரிய விபத்துகள் நடந்துள்ளன. இதுபோன்று பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது மட்டுமே அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் விழித்துக் கொள்கின்றன; மற்ற நேரங்களில் தொடர் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என, சமூக ஆர்வலர்களும், பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.பள்ளி வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட், பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கட்டாயம்
இருப்பினும் நடைமுறையில் பெரும்பாலான பள்ளிகள், இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. அதேபோல், பள்ளி பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறுவது கட்டாயம் எனவும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், பள்ளி வாகனத்திற்கு தகுதிச் சான்று அளிக்கும் அதிகாரிகள், அந்த வாகனத்தை முறையாக ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்குவதில்லை என்பதை, மாணவி ஸ்ருதியின் இறப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மாணவி பயணம் செய்த பேருந்து, பயணத்திற்கு தகுதியானது என, கடந்த 15 நாட்களுக்கு முன் தான், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக இயக்க ஊர்தி ஆய்வாளர் நிலை-1 ராஜசேகரன், தகுதிச் சான்று அளித்துள்ளார்.தகுதிச் சான்று புதுப்பிக்கும்போது, வாகனத்தை முழுமையாக ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்க வேண்டும் என, நடைமுறை இருந்தும் அதை சரிவர அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. பெரும்பாலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், தொழில்நுட்பப் பணியாளர்களை நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதுபோன்று, நிர்வாகப் பணிகளில் தொழில்நுட்பப் பணியாளர்களை நியமனம் செய்வது கூடாது என, அமைச்சு பணியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிர்வாகப் பணிகளில் தொழில்நுட்பப் பணியாளர்களேநியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இனி வரும் காலத்தில் நிர்வாகப் பணிகளில், தொழில்நுட்பப் பணியாளர்களை நியமனம் செய்யக்கூடாது. மேலும், ஓட்டுனர் உரிமம், தகுதிச் சான்று புதுப்பிப்பு, வாகனப் பதிவு, வாகனத் தணிக்கை ஆகியவற்றை முறைப்படுத்தி, மோட்டார் வாகனச் சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவது, அதிகாரிகள் சட்டத்தைப் பின்பற்றுகின்றனரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஒருவருக்கு நான்கு பதவியா?
விபத்துக்குள்ளான பள்ளி பேருந்திற்கு தகுதிச் சான்று வழங்கிய, தாம்பரம் போக்குவரத்து அலுவலகம், தெற்கு சரக இணை போக்குவரத்து கமிஷனர் பன்னீர்செல்வம் என்ற அதிகாரியின்
கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இணை போக்குவரத்து கமிஷனர் (வடக்கு சரகம்), துணை போக்குவரத்து கமிஷனர் - நிர்வாகம் (பொறுப்பு), இணை போக்குவரத்து கமிஷனர் - நிர்வாகம் (பொறுப்பு) மற்றும் இணை போக்குவரத்து கமிஷனர் (தெற்கு சரகம்) ஆகிய நான்கு பதவிகளை வகிக்கிறார்.அலுவலக அதிகார வரம்பு படி, இவருக்கு அயனாவரத்தில் உள்ள வடக்கு சரக இணை போக்குவரத்து கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், மூன்று பொறுப்புகளை உடன் வைத்திருப்பதால், தனக்குரிய பணியை கவனிக்காமல் நிர்வாகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், வாகனத் தணிக்கை போன்ற முக்கிய பணியை மேற்கொள்ளாமல் உள்ளார்என, அமைச்சுப் பணியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
விசாரணை அதிகாரிக்கு எதிர்ப்பு?
பேருந்து விபத்து குறித்து, விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக, துணை போக்குவரத்து கமிஷனர் விஜயராஜ் என்பவரை, தமிழக அரசு நியமித்துள்ளது. உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் ராஜசேகரன், ஒரு தொழில்நுட்பப் பணியாளர். இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து, தொழில்நுட்பப் பணியாளராக இருந்து பதவி உயர்வு பெற்ற துணை போக்குவரத்து கமிஷனர் விஜயராஜ், விசாரணை நடத்தினால் நியாயமாக இருக்காது என, அமைச்சுப் பணியாளர்கள் கூறுகின்றனர்.விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமானால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையிலான ஒரு குழு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் மீது, ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்திருப்பது சரியானது அல்ல என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சென்னை முடிச்சூர் அருகே, பள்ளி பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி, மாணவி ஸ்ருதி, 7, உடல் நசுங்கி பலியானாள். தமிழகத்தில், கடந்த மூன்றாண்டுகளில், 10க்கும் மேற்பட்ட பெரிய விபத்துகள் நடந்துள்ளன. இதுபோன்று பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது மட்டுமே அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் விழித்துக் கொள்கின்றன; மற்ற நேரங்களில் தொடர் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என, சமூக ஆர்வலர்களும், பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.பள்ளி வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட், பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கட்டாயம்
இருப்பினும் நடைமுறையில் பெரும்பாலான பள்ளிகள், இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. அதேபோல், பள்ளி பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறுவது கட்டாயம் எனவும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், பள்ளி வாகனத்திற்கு தகுதிச் சான்று அளிக்கும் அதிகாரிகள், அந்த வாகனத்தை முறையாக ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்குவதில்லை என்பதை, மாணவி ஸ்ருதியின் இறப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மாணவி பயணம் செய்த பேருந்து, பயணத்திற்கு தகுதியானது என, கடந்த 15 நாட்களுக்கு முன் தான், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக இயக்க ஊர்தி ஆய்வாளர் நிலை-1 ராஜசேகரன், தகுதிச் சான்று அளித்துள்ளார்.தகுதிச் சான்று புதுப்பிக்கும்போது, வாகனத்தை முழுமையாக ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்க வேண்டும் என, நடைமுறை இருந்தும் அதை சரிவர அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. பெரும்பாலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், தொழில்நுட்பப் பணியாளர்களை நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதுபோன்று, நிர்வாகப் பணிகளில் தொழில்நுட்பப் பணியாளர்களை நியமனம் செய்வது கூடாது என, அமைச்சு பணியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிர்வாகப் பணிகளில் தொழில்நுட்பப் பணியாளர்களேநியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இனி வரும் காலத்தில் நிர்வாகப் பணிகளில், தொழில்நுட்பப் பணியாளர்களை நியமனம் செய்யக்கூடாது. மேலும், ஓட்டுனர் உரிமம், தகுதிச் சான்று புதுப்பிப்பு, வாகனப் பதிவு, வாகனத் தணிக்கை ஆகியவற்றை முறைப்படுத்தி, மோட்டார் வாகனச் சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவது, அதிகாரிகள் சட்டத்தைப் பின்பற்றுகின்றனரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஒருவருக்கு நான்கு பதவியா?
விபத்துக்குள்ளான பள்ளி பேருந்திற்கு தகுதிச் சான்று வழங்கிய, தாம்பரம் போக்குவரத்து அலுவலகம், தெற்கு சரக இணை போக்குவரத்து கமிஷனர் பன்னீர்செல்வம் என்ற அதிகாரியின்
கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இணை போக்குவரத்து கமிஷனர் (வடக்கு சரகம்), துணை போக்குவரத்து கமிஷனர் - நிர்வாகம் (பொறுப்பு), இணை போக்குவரத்து கமிஷனர் - நிர்வாகம் (பொறுப்பு) மற்றும் இணை போக்குவரத்து கமிஷனர் (தெற்கு சரகம்) ஆகிய நான்கு பதவிகளை வகிக்கிறார்.அலுவலக அதிகார வரம்பு படி, இவருக்கு அயனாவரத்தில் உள்ள வடக்கு சரக இணை போக்குவரத்து கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், மூன்று பொறுப்புகளை உடன் வைத்திருப்பதால், தனக்குரிய பணியை கவனிக்காமல் நிர்வாகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், வாகனத் தணிக்கை போன்ற முக்கிய பணியை மேற்கொள்ளாமல் உள்ளார்என, அமைச்சுப் பணியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
விசாரணை அதிகாரிக்கு எதிர்ப்பு?
பேருந்து விபத்து குறித்து, விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக, துணை போக்குவரத்து கமிஷனர் விஜயராஜ் என்பவரை, தமிழக அரசு நியமித்துள்ளது. உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் ராஜசேகரன், ஒரு தொழில்நுட்பப் பணியாளர். இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து, தொழில்நுட்பப் பணியாளராக இருந்து பதவி உயர்வு பெற்ற துணை போக்குவரத்து கமிஷனர் விஜயராஜ், விசாரணை நடத்தினால் நியாயமாக இருக்காது என, அமைச்சுப் பணியாளர்கள் கூறுகின்றனர்.விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமானால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையிலான ஒரு குழு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் மீது, ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்திருப்பது சரியானது அல்ல என்றும் அவர்கள் கூறுகின்றனர்.