ஹாசரிபாக்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்வாரிய அதிகாரியை கட்டிப்போட சொன்ன வழக்கில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹாசரிபாக் பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரி யஷ்வந்த் சின்ஹா தலைமையில் பாஜகவின் 300 பேர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, மின்சார வாரிய அதிகாரிகளின் கைகளை கயிற்றால் கட்டிப் போடுமாறு பாஜக பெண் தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.. ஏனெனில் அவர்களது குழந்தைகள்தான் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர் என்று கூறியிருந்தார்.
இதன் பின்னர் பாஜகவினரும் மின்வாரிய அதிகாரியை கட்டிப்போட்டு அவரது அறையில் வைத்து பூட்டினர். பின்னர் போலீசார் தலையிட்டு அவரை விடுவித்தனர்.
இதைத் தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹா மற்றும் 300 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டோர் இன்று ஹாசரிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பாஜகவினரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹாசரிபாக் பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரி யஷ்வந்த் சின்ஹா தலைமையில் பாஜகவின் 300 பேர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, மின்சார வாரிய அதிகாரிகளின் கைகளை கயிற்றால் கட்டிப் போடுமாறு பாஜக பெண் தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.. ஏனெனில் அவர்களது குழந்தைகள்தான் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர் என்று கூறியிருந்தார்.
இதன் பின்னர் பாஜகவினரும் மின்வாரிய அதிகாரியை கட்டிப்போட்டு அவரது அறையில் வைத்து பூட்டினர். பின்னர் போலீசார் தலையிட்டு அவரை விடுவித்தனர்.
இதைத் தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹா மற்றும் 300 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டோர் இன்று ஹாசரிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பாஜகவினரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.