இன்று ஒரு கம்ப்யூட்டர் வாங்க சென்றபோது ATM-ல் பணம் வரவில்லை. எனவே, இருப்புத் தொகையை மட்டும் பிரிண்ட் எடுத்து வந்து, வங்கியில் பணமெடுத்தவுடன் தருகிறேன் என்று, 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்துவிட்டு தேவையான பொருட்களை வாங்கினேன். அப்போது "பணவியல் பொருளாதாரம்" என்ற புத்தகத்தை காட்டி ஆரம்ப காலத்தில் நடந்த பரிவர்த்தனை முறை பற்றி விளக்கினேன். உடனே மற்றவர்களும் இதேபோல தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். நாளை காய்கறி மார்க்கெட்டிலும், மீன் மார்க்கெட்டிலும் இதை மார்க்கெட்டிங் செய்ய இருக்கிறேன்! வெறும் காகிதத்தை நம்பும் கடைகாரர்கள், ரத்தமும் சதையுமாக பழகிய நம்மை நம்பமாட்டார்களா என்ன?
மத்திய அரசு தனது அடுத்த அறிவிப்பாக "பணமில்லா பரிவர்த்தனை" திட்டத்தை உடனே வெளியிடும் பாருங்கள்!!
- எழுத்ததிகாரன்
மத்திய அரசு தனது அடுத்த அறிவிப்பாக "பணமில்லா பரிவர்த்தனை" திட்டத்தை உடனே வெளியிடும் பாருங்கள்!!
- எழுத்ததிகாரன்