மரபை மீறும் சினிமாவும் - மாற்றத்தை தேடும் அரசியலும்!!
- எழுத்ததிகாரன்.
ஆழமானது - அதே நேரத்தில் சாதாரணமானது. தெளிவானது - அதே நேரத்தில் கேலிக்கூத்தையும் கொண்டது. உணர்ச்சி மிக்க பல்வேறு கோணங்களில் அரசியல் ஆய்வு, இவைகளையெல்லாம் ஒருங்கே கொண்டதுதான் திரைப்படக்கலை. சினிமாவின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். லூமியரும், ஜியார்ஜ் மீலேவும் அங்குதான் தோன்றினார்கள். ஆனால் இதை ஒரு வெகுஜன பொழுது போக்காக மாற்ற வேண்டும் என்ற தேவை அமெரிக்காவில்தான் உணரப்பட்டது. உலகெங்குமுள்ள ரசிகர்களுக்கு எல்லாவித பொழுது போக்கையும் தரும் பெரிய தொழில்துறையாக இந்த சினிமா அமெரிக்காவில் வளர்ந்தது.
வெள்ளித்திரையில் தோன்றிய இந்த மாயையை ரசிகர்களும் விரும்பிப் பார்த்தார்கள். ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் முற்றிலும் புதிய சினிமாவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த அடிப்படையில் முதலில் செயல்பட்டது இத்தாலியர்கள்தான். வாழ்க்கையைப் பற்றி நவீன யதார்த்தவாத நோக்கிலான படங்களை எடுத்தார்கள். இவர்களின் முயற்சிகள் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதே நேரத்தில் பிரெஞ்சுக்காரர்களும் அமெரிக்காவின் அதிவேக விறுவிறுப்பு படங்களுக்கு மாற்றாக தங்கள் படங்கள் அமைய வேண்டுமென விரும்பினார்கள். நவீன சினிமாவின் மேதை என்று கருதப்படும் "ஆந்த்ரே பாஸன்" (Andre Bazin) அப்போது "காஹியெ து சினிமா" என்ற தீவிர சினிமா பத்திரிக்கையைத் துவக்கினார். இந்தப் பத்திரிக்கையை மையமாகக் கொண்டு சினிமாவில் அதீத ஆர்வம் கொண்ட ஐந்து இளைஞர்கள் ஒரு குழுவாக உருவானார்கள். பிரான்சுவா ட்ரூபோ, ழான் லுக் கோதார், க்ளோத் ஷப்ரோல், எரிக் ரோமர், ழாக் ரிவெத் ஆகியவர்கள்தான் அந்த ஐவர்கள்.
இவர்கள் சினிமாவைப் பார்ப்பதிலும், ஆய்வு செய்வதிலும், புதிய பிரெஞ்சு சினிமாவுக்கான உத்திகளை திட்டமிடுவதிலும் பல ஆண்டுகளைக் கழித்தனர். ஒரு எதிர்க் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவர்கள் சிற்பிகளாக திகழ்ந்தனர். இது போன்ற ஒன்று இதுவரையில் உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. எனவே அதுபோன்ற ஒரு ஐவர் குழுவை இந்திய சினிமாவிலும் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து பல வருடங்களை உதிர்த்து வருகிறோம்.... இந்த ஐவர் குழுவில் மிக முக்கியமாகவும், மூலையாகவும் செயல்படுபவர் யார்? என்பது இந்தக் கட்டுரையை விரும்பிப் படிக்கும் பலருக்கும் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள். கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட் செயல்பட்டு வருகிறது என்பது பலருக்குத் தெரியாது!!
ஆரம்பம் முதல் இன்றுவரையிலான எல்லா காலங்களிலும் சினிமா என்பது மக்களிடம் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசியல் தலைவர்கள் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஏனென்றால் சினிமா என்பது அரசியல் சித்து வேலைகளை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதை தனது இயல்பாகக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் தங்களுடைய சுயத்தை உணரத் தொடங்கினார்கள். இன்று சமூக இணையதளங்களில் பொதுமக்கள் பலரும் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள் என்றால் அதற்கு சினிமா மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தனை பலம்பொருந்திய இந்த சினிமா அரசியல் சூழ்ச்சியால் கொள்ளைக்காரர்கள், வீரர்கள், பூதங்கள், சொகுசுக்காரிகள், பாடல்கள், வசனங்கள் என்று அழுகையிலும், களியாட்டத்திலும் மூழ்கடிக்கப்பட்டது.
உயர்ந்த பாராட்டுக்களையும், தவறான விமர்சனங்களையும் சரி சமமாக பெற்று வளர்ந்துகொண்டிருக்கும் இந்த சினிமா ஏன் தவறாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது? என்பதில் அதிக கவனம் செலுத்தியபோதுதான் இந்த சினிமாவின் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கெட்ட பெயரை உடனே சம்பாதித்துவிட முடியும். ஆனால் நல்ல பெயரை சம்பாதிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதிலும் நூறு ஆண்டுகளாக மக்களிடையே மதிப்பிழந்து நிற்கும் சினிமாவால் தன்னை எப்படி நிரூபிக்க முடியும்? தன்னால் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை மக்களிடம் எப்படி புரிய வைக்க முடியும்?...
அதன் விளைவாக உருவானதுதான் ஊழலற்ற அரசியல்! என்ற டிஜிட்டல் இந்தியாவுக்கான சினிமாக்காரனின் திட்டம்!! இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்றாலும் இது ஒரு சினிமாக்காரனின் சிந்தனை என்பதை வரலாறு சொல்லும்!!
*** சினிமா என்பது வெறும் நுகரப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக அனைவரும் ஈடுபட வேண்டிய ஒன்று. ***
தொடரும்....
- எழுத்ததிகாரன்.
ஆழமானது - அதே நேரத்தில் சாதாரணமானது. தெளிவானது - அதே நேரத்தில் கேலிக்கூத்தையும் கொண்டது. உணர்ச்சி மிக்க பல்வேறு கோணங்களில் அரசியல் ஆய்வு, இவைகளையெல்லாம் ஒருங்கே கொண்டதுதான் திரைப்படக்கலை. சினிமாவின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். லூமியரும், ஜியார்ஜ் மீலேவும் அங்குதான் தோன்றினார்கள். ஆனால் இதை ஒரு வெகுஜன பொழுது போக்காக மாற்ற வேண்டும் என்ற தேவை அமெரிக்காவில்தான் உணரப்பட்டது. உலகெங்குமுள்ள ரசிகர்களுக்கு எல்லாவித பொழுது போக்கையும் தரும் பெரிய தொழில்துறையாக இந்த சினிமா அமெரிக்காவில் வளர்ந்தது.
வெள்ளித்திரையில் தோன்றிய இந்த மாயையை ரசிகர்களும் விரும்பிப் பார்த்தார்கள். ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் முற்றிலும் புதிய சினிமாவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த அடிப்படையில் முதலில் செயல்பட்டது இத்தாலியர்கள்தான். வாழ்க்கையைப் பற்றி நவீன யதார்த்தவாத நோக்கிலான படங்களை எடுத்தார்கள். இவர்களின் முயற்சிகள் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதே நேரத்தில் பிரெஞ்சுக்காரர்களும் அமெரிக்காவின் அதிவேக விறுவிறுப்பு படங்களுக்கு மாற்றாக தங்கள் படங்கள் அமைய வேண்டுமென விரும்பினார்கள். நவீன சினிமாவின் மேதை என்று கருதப்படும் "ஆந்த்ரே பாஸன்" (Andre Bazin) அப்போது "காஹியெ து சினிமா" என்ற தீவிர சினிமா பத்திரிக்கையைத் துவக்கினார். இந்தப் பத்திரிக்கையை மையமாகக் கொண்டு சினிமாவில் அதீத ஆர்வம் கொண்ட ஐந்து இளைஞர்கள் ஒரு குழுவாக உருவானார்கள். பிரான்சுவா ட்ரூபோ, ழான் லுக் கோதார், க்ளோத் ஷப்ரோல், எரிக் ரோமர், ழாக் ரிவெத் ஆகியவர்கள்தான் அந்த ஐவர்கள்.
இவர்கள் சினிமாவைப் பார்ப்பதிலும், ஆய்வு செய்வதிலும், புதிய பிரெஞ்சு சினிமாவுக்கான உத்திகளை திட்டமிடுவதிலும் பல ஆண்டுகளைக் கழித்தனர். ஒரு எதிர்க் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவர்கள் சிற்பிகளாக திகழ்ந்தனர். இது போன்ற ஒன்று இதுவரையில் உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. எனவே அதுபோன்ற ஒரு ஐவர் குழுவை இந்திய சினிமாவிலும் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து பல வருடங்களை உதிர்த்து வருகிறோம்.... இந்த ஐவர் குழுவில் மிக முக்கியமாகவும், மூலையாகவும் செயல்படுபவர் யார்? என்பது இந்தக் கட்டுரையை விரும்பிப் படிக்கும் பலருக்கும் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள். கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட் செயல்பட்டு வருகிறது என்பது பலருக்குத் தெரியாது!!
ஆரம்பம் முதல் இன்றுவரையிலான எல்லா காலங்களிலும் சினிமா என்பது மக்களிடம் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசியல் தலைவர்கள் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஏனென்றால் சினிமா என்பது அரசியல் சித்து வேலைகளை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதை தனது இயல்பாகக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் தங்களுடைய சுயத்தை உணரத் தொடங்கினார்கள். இன்று சமூக இணையதளங்களில் பொதுமக்கள் பலரும் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள் என்றால் அதற்கு சினிமா மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தனை பலம்பொருந்திய இந்த சினிமா அரசியல் சூழ்ச்சியால் கொள்ளைக்காரர்கள், வீரர்கள், பூதங்கள், சொகுசுக்காரிகள், பாடல்கள், வசனங்கள் என்று அழுகையிலும், களியாட்டத்திலும் மூழ்கடிக்கப்பட்டது.
உயர்ந்த பாராட்டுக்களையும், தவறான விமர்சனங்களையும் சரி சமமாக பெற்று வளர்ந்துகொண்டிருக்கும் இந்த சினிமா ஏன் தவறாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது? என்பதில் அதிக கவனம் செலுத்தியபோதுதான் இந்த சினிமாவின் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கெட்ட பெயரை உடனே சம்பாதித்துவிட முடியும். ஆனால் நல்ல பெயரை சம்பாதிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதிலும் நூறு ஆண்டுகளாக மக்களிடையே மதிப்பிழந்து நிற்கும் சினிமாவால் தன்னை எப்படி நிரூபிக்க முடியும்? தன்னால் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை மக்களிடம் எப்படி புரிய வைக்க முடியும்?...
அதன் விளைவாக உருவானதுதான் ஊழலற்ற அரசியல்! என்ற டிஜிட்டல் இந்தியாவுக்கான சினிமாக்காரனின் திட்டம்!! இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்றாலும் இது ஒரு சினிமாக்காரனின் சிந்தனை என்பதை வரலாறு சொல்லும்!!
*** சினிமா என்பது வெறும் நுகரப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக அனைவரும் ஈடுபட வேண்டிய ஒன்று. ***
தொடரும்....