கன்னட டர்ட்டி பிக்சர்ஸ் படப்பிடிப்புக்காக பெங்களூர் வந்திருந்த பாகிஸ்தான் கவர்ச்சி நடிகை வீணா மாலிக்கை ரசிகர்கள் மொய்த்துக் கொண்டதால் பரபரப்பானது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
கன்னடத்தில் தயாராகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் முக்கிய சாலைப் பகுதியில் படமாக்கப்பட்டது. அப்போது அங்கு ரசிகர்கள் படையெடுத்து வந்தனர். கவர்ச்சிகரமான வீணா மாலிக் தங்களது கைக்கு எட்டும் தூரத்தில் இருந்ததைப் பார்த்த அவர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. பாதுகாப்பு அரணையும் தாண்டி வீணாவை நோக்கி பாய்ந்தனர்.
அவர்களை அடக்க படப்பிடிப்புக் குழுவினரால் முடியவில்லை. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். அதற்குள் வீணாவை சுற்றிச் சூழ்ந்து விட்டனர் ரசிகர்கள். அவர்களில் சிலருக்கு வீணா மாலிக் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். ஆனால் அவராலும் முடியவில்லை, அத்தனைக் கூட்டம்.
இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டு படப்பிடிப்புக் குழுவினர் படு பத்திரமாக வீணாவை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டனர்.
ஏற்கனவே இப்படித்தான் ஆஸ்திரேலியாவின் பிஜி கடற்கரையிலும் வீணாவை ரசிகர்கள் மொய்த்தனர். இப்போது பெங்களூரிலும் மொய்த்துள்ளனர்.
கன்னடத்தில் தயாராகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் முக்கிய சாலைப் பகுதியில் படமாக்கப்பட்டது. அப்போது அங்கு ரசிகர்கள் படையெடுத்து வந்தனர். கவர்ச்சிகரமான வீணா மாலிக் தங்களது கைக்கு எட்டும் தூரத்தில் இருந்ததைப் பார்த்த அவர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. பாதுகாப்பு அரணையும் தாண்டி வீணாவை நோக்கி பாய்ந்தனர்.
அவர்களை அடக்க படப்பிடிப்புக் குழுவினரால் முடியவில்லை. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். அதற்குள் வீணாவை சுற்றிச் சூழ்ந்து விட்டனர் ரசிகர்கள். அவர்களில் சிலருக்கு வீணா மாலிக் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். ஆனால் அவராலும் முடியவில்லை, அத்தனைக் கூட்டம்.
இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டு படப்பிடிப்புக் குழுவினர் படு பத்திரமாக வீணாவை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டனர்.
ஏற்கனவே இப்படித்தான் ஆஸ்திரேலியாவின் பிஜி கடற்கரையிலும் வீணாவை ரசிகர்கள் மொய்த்தனர். இப்போது பெங்களூரிலும் மொய்த்துள்ளனர்.