Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
26/7/2012, 3:52 pm
ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?

”இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று “


திருவள்ளுவரின் இந்தத் திருக்குறளை, ஒரு முறைக்கு பலமுறை படித்துவிட்டு கதையைத் தொடருங்கள். சின்னப் பசங்களை வைத்து மிகப்பெரிய விஷயம்!!

பிறந்த பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு பிஞ்சு நெஞ்சிலும் ஜாதி (வெறி)வேறுபாடு (நினை)வூட்டப்பட்டு கட்டாயமாக்கப்படுகிறது! பதிமூன்று வயது என்பதை TEEN AGE என்று கூறுவார்கள். “TEEN” என்பதற்கு “கேடு” என்றும் ஒரு பொருள் உண்டு. அந்த வயதில் அறிந்து கொள்ளும் “பல” விஷயங்கள் வெறியைத்தான் தூண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருவேளை தெரிந்துதான் புகுட்டுகிறார்களோ?

அரசு வேலைக்கு செல்லவேண்டும் என்று ஆசைப்படுவோர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்புப் படித்திருக்க வேண்டுமாம்! ஏன் இந்த 8-ம் வகுப்பு? அப்படி என்னதான் இருக்கிறது இந்த 8-ம் வகுப்பில்?

இதோ….

ஹர்ஜன் - சிறுகதை
Written By Sn.Kuyilan | Master of Philosophy
ஹர்ஜன் - சிறுகதை Harjan_classroom
ஞ்சக்காடு கிராமம்!

அமைதியான, ஒற்றுமையான, பண்பான மக்கள் வாழும் ஒரு சிறிய ஊர். ஜாதி என்னும் புற்றுநோய் அங்கேயும் இருந்தது பல வருடங்களுக்கு முன்பு வரையில்! ஆனால், பெற்ற பிள்ளைகளை படிக்க வைக்கக்கூட வசதியில்லாத நிலையில், இந்த ஜாதி இருந்து என்ன செய்யப்போகிறது? என்பதை உணர்ந்த மக்கள் “ரத்தக்களரிகளை” மறந்து இன்று எல்லோரும் ஒற்றுமை உறவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ள்ளி விடுமுறை காலம்! ஊருக்கருகில் 3 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சத்யா என்ற சிறுமி தனது நண்பர்களிடம் கேட்கிறாள், ” டேய், நம்ம ஹர்ஜன் எங்கடா? ஆளையே காணோம்?

”உனக்குத் தெரியாதா? அவனுக்கு ஜுரம். அதனாலதான் அவன் வரல” என்று சொன்னான் சங்கர் என்ற சிறுவன்.

“என்னது ஹர்ஜனுக்கு ஜுரமா? அப்படின்னா வாங்க எல்லாரும் போய் பார்த்துட்டு வருவோம்” என்று பிரவீன் என்ற சிறுவன் சொன்னதும், மூன்று பேரும் எழுந்து செல்கின்றனர்...

இந்தச் சிறுவர்கள் சந்திக்கப்போகும் அந்த ஹர்ஜன் தான் நம்ம கதையின் ஹீரோ! 8-ம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன்தான் ஜாதியை (அதாவது வேறுபாட்டை) ஒழிக்கப் போகிறான்! கதையைத் தொடர்ந்து படியுங்கள்...

சத்யா, சங்கர், பிரவீன், ஹர்ஜன் இந்த 4 சிறுவர்களில் ஹர்ஜன் யார்? என்பது அவனுடைய பெயரிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்! இந்த ஊரிலேயே பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இவர்கள் மட்டும்தான். அதுவும் இலவசக் கல்வி என்பதால்தான். பள்ளிக்கூடம் 10 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டும் என்பதால், மற்றவர்களுக்கு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப (பயணச்செலவு) போதிய வசதி இல்லை!

னது நண்பர்களைப் பார்த்ததும் ஹர்ஜன் எழுந்திரிக்க முயன்றான்…

“ஆ..ங்… வேண்டாம்! வேண்டாம்! பரவால்ல ஹர்ஜன் நீ படுத்துக்கோ” என்று பெரிய மனிதர்களைப் போல் சொல்லிவிட்டு, தாங்கள் வாங்கிவந்த பிஸ்கட் பாக்கெட்டை ஹர்ஜனிடம் கொடுத்தாள் சத்யா. சங்கரும், ப்ரவீனும் ஹர்ஜனுக்கு பிஸ்கெட்டை ஊட்டி விட்டனர். பின்பு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இங்கு நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஜனின் அம்மா, தன் மகன் மீது அவர்கள் வைத்திருக்கும் பாசத்தையும், நட்பையும் நினைத்து பெருமை பட்டுக்கொண்டாள். அப்போது, 10 வருடங்களுக்கு முன்பு நடந்த “ரத்தக்களறி” அவள் நினைவில் வந்து போனது!

நாட்கள் கடந்தன…

ருநாள், ஊருக்குள் அம்பேத்கர் பிறந்த நாளன்று, கொடியேற்றி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தனர். அப்போது ஹர்ஜனிடம், அவனது நண்பர்கள் கேட்டனர் “அம்பேத்கார்-னா யாருடா?”

“உங்களுக்கு தெரியாதா? அங்க பாரு, பொட்டு வச்சி மாலை எல்லாம் போட்டு இருக்காங்கல்ல… அம்பேத்கார்-னா சாமிடா!”

“ஓ.. அப்படியா?" என்று சொல்லிவிட்டு, "சாமி!... எங்களுக்கு நல்ல படிப்பை குடு சாமி…” என்று அம்பேத்கரின் போடோவைப் பார்த்து அனைவரும் கும்பிட்டனர்.

நாட்கள் மாதங்களாகக் கடந்தது...

ஒரு நாள், பள்ளி வகுப்பாசிரியர் சுற்றறிக்கை வாசித்தார், “பசங்களா, இலவச பாடப் புத்தகம் வந்திருக்கு, SC/ST மாணவர்களுக்கு மட்டும்தான் அது கிடைக்கும். நான் இப்போ பெயர் படிக்கிறேன், அவங்க மட்டும் வரிசையில போய் புத்தகங்களை வாங்கிட்டு வாங்க. சரியா?” என்று கேட்டுவிட்டு பெயர்களை வாசிக்கத் தொடங்கினார்...

ர்ஜன் வாங்கி வந்த புத்தகத்தை, அவனது நண்பர்களான சத்யா, சங்கர், மற்றும் பிரவீன் ஆகிய மூவரும் ஆசையோடு வாங்கிப் பார்த்தனர்,

“நல்ல வாசமா இருக்குதுல டா? சரி... ஏன்டா எங்களுக்கெல்லாம் புத்தகம் தரல?” என்று ஹரிஜனிடம் கேட்டனர்.

“தெரியலப்பா, உங்களுக்கெல்லாம் அப்பறமா வரும் போலருக்கு” என்று கூறிவிட்டு தனது புத்தகங்களை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஜன்!

றுநாள் ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்... அவரைப் பார்த்தாலே இந்த கூட்டத்திற்கு சிரிப்புதான் வரும். காரணம், ஒருநாள் பக்கத்து வகுப்பு மாணவியின் தந்தை தலைமை ஆசிரியரிடம், ஆங்கில ஆசிரியரைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருந்தார்...

”என்னாங்க சார்?... உங்க வாத்தியாரு என் பொண்ண பார்த்து, உனக்கு “கிளாமரே” தெரியலைன்னு சொல்லியிருக்காரு, கொஞ்சம் என்னான்னு கேட்டு சொல்லுங்க! நாங்க படிக்க அனுப்புறோமா? இல்லை "கிளாமர் காட்ட" அனுப்புறோமா? இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியனும்.” என்று கோபத்தோடு கேட்டார்.

“என்னையா இது? ஏன் அப்படி கேட்டே? என்று தலைமை ஆசிரியர் கேட்க,

“இல்லை சார், நான் ஆங்கிலத்துல “கிராமர்” தெரியலைன்னு தான் சொன்னேன் அவரு தப்பா புரிஞ்சிகிட்டாரு….” என்று பாவமாக கூற,

“படிக்கத் தெரியாதவன்-னு ஏதேதோ சொல்லி ஏமாத்தப் பாக்குறியா…? என்று மாணவியின் தந்தை கேட்டார்,

“படிக்கத் தெரியலன்னு சொல்றீங்க, “கிளாமர்” மட்டும் எப்படி தெரிந்தது? என்று ஆங்கில ஆசிரியர் கேட்க,

“அது எப்படியோ தெரிந்தது, அதெல்லாம் இருக்கட்டும்... நீ எப்படி என் பொண்ணப் பார்த்து அப்படி கேட்கலாம்?” என்று மீண்டும் ஆரம்பிக்க, ஆங்கில ஆசிரியர் தடுமாறிப் போனார். அந்த சம்பவத்தை நினைத்து மாணவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“என்னடா அங்க சிரிப்பு?” ஆசிரியர் சத்தம் போட,

“………………………..” மாணவர்கள் அமைதியானார்கள்.

“நீங்க ஒன்னா சேர்ந்தாலே இப்படித்தான்டா சிரிக்கிறீங்க, முதல்ல உங்க 4 போரையும் தனித்தனியா பிரிச்சு உட்கார வைக்கணும்” என்றார் ஆசிரியர்.

“எங்களை யாராலையும் பிரிக்க முடியாது சார்!” என்று கூறினான் பிரவீன்.

ருநாள், மதிய சாப்பாட்டின் போது…

ஹர்ஜன் கொண்டுவந்த “சாம்பார்” சாதத்தை அவனது நண்பர்கள் முழுவதுமாக சாப்பிட்டுவிட, ஹர்ஜன் ஓ...வென அழுதான். பின்பு அவனது நண்பர்கள், தங்களது சாப்பாட்டை ஹர்ஜனுக்குக் கொடுத்தனர்.

“இத பாரு ஹர்ஜன், உங்க அம்மா செய்யிற சாம்பார் சாதம் ரொம்ப நல்லா இருந்தது. அதனாலதான் நாங்க சாப்டுட்டோம், இனிமேல் நீ சாப்பாடு எடுத்து வரும்போது கொஞ்சம் அதிகமாவே எடுத்துகிட்டு வா. சரியா?…”

“ம்ம்… சரி!” என்று சொன்னதோடு தினமும் அவர்களுக்காகவே தனியாக ஒரு சாப்பாட்டு டாப்பாவில் சாப்பாடு எடுத்து வந்தான் ஹர்ஜன்.

மாதங்கள் வருடங்களாக கடந்தது…

8-ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வந்தனர்……

தமிழ் ஆசிரியர் பாடம் நடத்திவிட்டு,

“எல்லோரும் வீட்டுல நல்லா படிச்சிட்டு வாங்க, நாளைக்கு இந்தப் பாடத்திலருந்து கேள்வி கேட்பேன், நாளைக்கு அடுத்தப் பாடத்துக்குப் போகலாம். சரியா?”

“சரி ” என்று எல்லா மாணவர்களும் கூறினார்கள்.

பிரவீனிடம் தமிழ் புத்தகம் இல்லாததால், ஹர்ஜனிடம் புத்தகம் கேட்டான்,

“ஐயோ! நான் தரமாட்டேன்பா, படிச்சிட்டு வரலனா நாளைக்கு தமிழ் வாத்தியாரு அடிப்பாரு. நீ வேணும்னா எங்க வீட்டுக்கு வா ரெண்டு பேரும் ஒன்னா படிப்போம்” என்றான் ஹர்ஜன்.

ப்ரவீனும் சரி என்று சொல்லிச் சென்றான்… ஆனால், நாளை இவர்களது நட்பே முறியப் போகிறது என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை!!

மறுநாள்… ஆசிரியர் கேள்விகளை கேட்டுவிட்டு அடுத்தப் பாடத்திற்குச் சென்றார்.

அவர் ஆரம்பித்தப் பாடம்... 8ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ள...

அண்ணல் அம்பேத்கர்!

தீண்டாமைக்கொடுமை” என்ற தலைப்பில், ஆரம்பித்து, அம்பேத்கர் அனுபவித்த எல்லா விதமான கொடுமைகளையும் படம் பிடித்துக் காட்டுவது போல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பிஞ்சுகளின் காதுகளில் போட்ட நஞ்சு விதை, காது, மூக்கு, தொண்டை வழியே நெஞ்சுக்குள் இறங்கியது! விதை போட்டவுடனேயே வேர்விட்டு பூத்துக் குளுங்கவும் செய்தது!

நண்பர்களது பார்வை, ஹர்ஜன் பக்கம் திரும்பியது! பாடத்தை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ஹர்ஜன். மெதுவாக ஹர்ஜனிடம் இருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தான் பிரவீன்!

சத்யா, பிரவீனிடம் ரகசியமாகக் கேட்டாள் ”தாழ்த்தப்பட்டவன்"-னா, தொட்டுப் பேசக்கூடாதா டா? நம்ம ஹர்ஜன் தாழ்த்தப்பட்டவன் தானே? அன்னைக்கு புத்தகம் குடுக்கும்போது சார் சொன்னார்ல… அப்போ நம்ம ஹர்ஜன் தீண்டத்தகாதவனா?”

“இதபாரு சத்யா… அவனை இனிமேல நம்ம ஹர்ஜன்-னு சொல்லாதே!” என்றான் சங்கர்.

“ஏன்டா இப்படி செல்றே, அவன் பாவம் தானே?”

“இதபார், உனக்கு ஒன்னும் தெரியாது! பேசாம இரு” என்று ஆத்திரப்பட்டான் பிரவீன்.

பள்ளி நேரம் முடிந்துவிட, “பாடத்தை நாளை தொடர்கிறேன்..!” என்று சொல்லி முடித்தார் ஆசிரியர். மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குக் கிளம்பினர். அப்போது ஹர்ஜன் பிரவீனிடம் வந்து,

“டேய் பிரவீன்... இன்னிக்கும் எங்க வீட்டுக்கு வந்துடு, நாம ரெண்டுபேரும் ஒன்னா படிப்போம்” என்றான்.

“இத பாரு ஹர்ஜன், இனிமேலே நீ என் பெயரை சொல்லிக் கூப்பிடாதே” என்றான் பிரவீன்!

“ஆமாடா, என்னையும் பேர் சொல்லி கூப்பிடாதே.” என்றான் சங்கர்!

“என்னடா ஆச்சு உங்களுக்கு? ஏன் ஒரு மாதிரியா பேசுறீங்க?” என்று பரிதாபமாக கேட்டான் ஹர்ஜன்!

“இனிமே வாடா, போடான்னும் பேசாதே”

“வேற எப்படிடா பேசுறது?”

“நீ ஒன்னும் இனிமேல் எங்களோட பேசத் தேவையில்லை”

“ஏண்டா இப்படி செல்றே? புத்தகம் குடுக்கலைன்னு கோபமா?”

“உன் புத்தகமும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம், பேசாதேன்னா பேசாதே!” என்று சொல்லிவிட்டு நிற்காமல் சென்றனர்.

ஓடிப்போய் அவர்களை மறித்தான் ஹர்ஜன், “டேய்… நான் வேற யாருகிட்டடா பேசுவேன்?..  இவ்வளவு நாளா நாம எல்லாம் ஒன்னா தானேடா இருந்தோம்” என்று பரிதாபமாக கேட்டான் ஹர்ஜன்!

“இவ்வளவு நாளா எங்களுக்கு இது தெரியாம இருந்துச்சு![/color] ஆனா இன்னைக்கு பாடம் படிச்சியா? உன்னை எல்லாம் அப்படித்தான் நடத்தனுமாம்! நீ சாமின்னு சொன்னியே, அந்த அம்பேத்கரை கூட அப்படித்தான் நடத்திருக்காங்க, நீயெல்லாம் என்ன பெரிய…. போடா!”

“அப்படி சொல்லாதீங்கடா, நாமல்லாம் ஒண்ணுடா.. என்னோட பேசுங்கடா…” என்று சொல்லிக் கொண்டு பிரவீன் கையை பிடித்தான் ஹர்ஜன்!

பிரவீன் முகம் கோபத்தில் சிவந்தது…

“யாரு கையடா பிடிக்கிற….” என்று ஆத்திரத்தில் ஹர்ஜன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான் பிரவீன்!

தடுமாறிப்போய் கீழே விழுந்தான் ஹர்ஜன்! அவனது பாடப் புத்தகங்கள் சிதறின… இதுவரை பிரவீனிடம் அப்படி ஒரு கோபத்தை யாருமே பார்த்ததில்லை.

“இத பார்றா... இதுதான் உனக்கு கடைசி. இனிமே எங்ககூட பேசணும்னு வந்தே….கொன்னே போட்டுடுவேன்!” என்ற எச்சரிக்கை செய்துவிட்டு சென்றான் பிரவீன்.

மற்றவர்களும் அவனோடு சென்றனர். சத்யா மட்டும் ஹர்ஜன் மீது பரிதாபப் பார்வையோடு சென்றாள்.

கீழே விழுந்த ஹர்ஜன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அப்படியே கிடந்தான்... பக்கத்தில் சிதறிக் கிடந்த தமிழ் புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருந்த அம்பேத்கர் போட்டோவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…

ரவு முழுதும் ஹர்ஜனுக்கு தூக்கமே வரவில்லை! தனது நண்பர்களோடு விளையாடியது…. தனது சாப்பாட்டை அவர்கள் சாப்பிட்டது… பிரவீன் அடித்தது… ஒவ்வொன்றாக மாறி மாறி அவன் கண் முன்னே வந்து கொண்டிருந்தது. “இது வரைக்கும் எங்களுக்கு தெரியாது, இன்னைக்கு பாடம் படிச்சியா?… உன்னை எல்லாம் அப்படிதான் நடத்தனுமாம்….” என்று பிரவீன் பேசிய வார்த்தைகள் அவன் காதில் அடிக்கடி எதிரொலித்தது! தூக்கம் இல்லாமல் யோசித்துக் கொண்டிருந்த ஹர்ஜன், திடீரென எழுந்தான்... புத்தகப் பையைத் திறந்து தமிழ் புத்தகத்தை எடுத்தான்... பிறகு அண்ணல் அம்பேத்கர் என்ற பாடத்தை புரட்டினான்….

விடிந்தது!

ஹர்ஜன் முகத்தில் ஒருவிதப் புத்துணர்ச்சி தெரிந்தது! எப்போதும் இல்லாமல் வேகமாக பள்ளிக்கூடம் கிளம்பினான்... தனது நண்பர்கள் அருகில் சென்றான்... ஹர்ஜனைப் பார்த்ததும் கோபத்தோடு எழுந்தான் பிரவீன்! அவனுக்கு முன், தமிழ் புத்தகத்தை நீட்டி,

"இந்தா... அம்பேத்கர் வரலாறை இப்போ படி" என்று சொன்னான் ஹர்ஜன்! அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்த பிரவீன், சங்கர், சத்யா அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்!!

சற்று நேரம் அமைதி…!

சிறிது நேரத்திற்கு பிறகு, பிரவீன் தனது தவறை உணர்ந்து, ஹர்ஜனை கட்டிப்பிடித்துக் கொண்டு "SORRY டா" என்று மன்னிப்புக் கேட்டான்... சங்கரும் மன்னிப்பு கேட்டான்... சத்யா புன்னகை செய்தாள்.. இப்போது அவர்களும் தங்களது தமிழ் புத்தகத்தை எடுத்தனர்...

குப்பறை!

ஆசிரியர், எப்போதும்போல் நேற்று நடத்திய பகுதியிலிருந்து கேள்விகளை கேட்கத் தொடங்கினார்….

“பசங்களா... அம்பேத்கரைப் பற்றி நீங்க என்ன தெரிஞ்சுகிட்டீங்க? ஒவ்வொருத்தரா சொல்லுங்க பார்ப்போம்?”

பிரவீன் எழுந்தான், “அம்பேத்கார் ஒரு சட்ட மாமேதை!”

”ம்… அப்பறம்?"

சங்கர் எழுந்தான் “அம்பேத்கார் சாமி?” என்றான்.

“என்னது.. சாமியா? ஓ..அவர் சாமிக்கிட்ட போய்ட்டாருன்னு சொல்லுரியா? அது இல்லப்பா, அம்பேத்கர் தன்னோட இளமைப் பருவத்தில் அனுபவித்த கொடுமைகள் என்னென்ன…? இந்தக் கேள்வி தேர்வில் கண்டிப்பா வரும்!

ஹர்ஜன் எழுந்தான், “அம்பேத்கர் ஒரு பட்டதாரி! அம்பேத்கர் சாமி!”

“என்னடா..., வீட்டுல பாடம் படிக்கலையா?” கோபமாகக் கேட்டார் ஆசிரியர்!

“நான் நல்லா படிச்சிருக்கேன் சார்! நான் சொல்றேன்” என்று சத்யா கூறினாள்!

“வெரிகுட்..! எங்கே சொல்லு பார்ப்போம்?”

“அம்பேத்கார் ஒரு பட்டதாரி! அம்பேத்கர் சாமி!”

ஆசிரியர் கோபமாக கேட்டார், “என்னடா… கிண்டல் பண்ணுறீங்களா?"

“இல்ல சார், நாங்க படிச்சதைத்தான் சொல்றோம்!”

“நல்லா படிச்சி கிழிச்சிங்க… இப்படி படிச்சிங்கன்னா, அடுத்த வருஷமும் இதே வகுப்புலதான் இருக்கணும். பாடத்துல அப்படியா போட்டுருக்கு? கொண்டாங்கடா புத்தகத்தை”

சங்கர் எழுந்து சென்று ஆசிரியரிடம் புத்தகத்தை கொடுத்தான்.

புத்தகத்தை வாங்கிப் பார்த்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்!!

எதையோ சாதித்துவிட்டோம் என்ற இறுமாப்பு மாணவர்களின் பார்வையில் தெரிந்தது!

புத்தகத்தை பக்கம் பக்கமாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்!

“எங்கடா, உன் புத்தகத்தைக் கொண்டா…” என்று அனைவரது புத்தகத்தையும் வாங்கிப் பார்த்துவிட்டு அதிர்ச்சி தாங்க முடியாமல் கேட்டார்...

“எங்கடா அம்பேத்கர் பாடம்…!?!?!?”

“கிழிச்சிட்டோம் சார்!” என்று எல்லோரும் ஒரே குரலில் கூறினார்கள்.

“கிழிச்சிட்டீங்களா?!? ஏண்டா கிழிச்சிங்க?”

“அந்தப் பாடம் எங்களுக்குத் தேவையில்லை!”

“அடப்பாவிங்களா… இந்தச் சின்ன வயசிலயே ஜாதிப் பிரச்சினையை தூண்டுறீங்களாடா? நீ எந்த ஜாதிக்காரன்டா? நீ எந்த ஜாதிக்காரன்டா?” என்று கேட்டு, அடிக்க கையை ஓங்கினார்…

உடனே ஹர்ஜன் எழுந்து, “நிறுத்துங்க சார்!” என்று சத்தமாகக் கூறினான்!

ஆசிரியர் அப்படியே நின்றுபோனார் அதிர்ச்சியில்!

“யாரு சார் ஜாதிப் பிரச்சினையை தூண்டுறது? நாங்களா தூண்டுறோம்? நீங்கதான் சார் தூண்டுறீங்க. நேத்து வரைக்கும் நாங்க எவ்வளவு ஒற்றுமையா இருந்தோம் தெரியுமா? நாங்கல்லாம் என்னென்ன ஜாதினு எங்களுக்கு ஏற்கனவே தெரியும் சார்! ஆனா, இந்த ஜாதிக்காரணை இப்படித்தான் நடத்தனும்னு, அம்பேத்கர் வரலாறை படிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டோம்! அம்பேத்கர்-னா சாமின்னு மட்டும்தான் நாங்கல்லாம் நினைச்சிருந்தோம், ஆனா அவர் இந்த ஜாதியில பொறந்தவர்னும், இப்படியெல்லாம் கொடுமையை அனுபவிச்சார்னு இப்பதான் தெரிஞ்சிக்கிட்டோம்!"

"...................................." ஆசிரியர், மௌனமானார்.

ஏன் சார்… அம்பேத்கர் வாழ்க்கையில இதைத் தவிர வேற எதுமே நடக்கலையா ? பாடம் முழுக்க கொடுமை, கொடுமைனு ஒரே விஷயத்தை சொல்லிருக்கீங்களே… இதைத் தவிர அவரோட வரலாறுல வேற எதையுமே பாடமா வைக்க முடியாதா சார்?”

"..........................." ஆசிரியர், பேச வார்த்தைகள் இல்லாமல் மௌனமானார்.

“ஆமா சார், இந்தப் பாடத்தை படிச்சதுக்கு அப்பறம்தான் என் மனசுல ஒரு பிசாசு உருவானுச்சு. அதை நெனச்சு நான் ரொம்ப வருத்தப்படுறேன்” என்று பிரவீன் கூறினான்.

“பசங்களா… ஜாதிக் கொடுமைங்கறது, அம்பேத்கருக்கு மட்டும் நடந்ததில்ல... அவர் காலத்துக்கு முன்னாடியே இருந்திருக்கு! அதனாலதான் அம்பேத்கருக்கு அந்த நிலைமை.

ஹர்ஜன் பேசத் தொடங்கினான்…

”அது எங்களுக்கும் தெரியும் சார்! நாங்க சொல்றது இன்னைக்கே மாறிடும்னு இல்லை. இந்தப் பாடத்தை மாத்திட்டா, இனிமேல் வரக்கூடிய சந்ததியினருக்கு, இப்படி ஒரு நிலமை இருந்ததுன்னு தெரிஞ்சிக்க வாய்ப்பே இருக்காதுன்னு சொல்லுறோம்."

".................................."

"பொதுவா, தாழ்த்தப்பட்டவன்னு சொன்னவுடனே எல்லோருக்கும் நினைவுக்கு வர்றது குறிப்பிட்ட ஒரு ஜாதி மட்டும்தான் சார், அதுக்கு காரணம் அம்பேத்கரோட இந்தப் பாடம்!

"....................................."

"அதனாலதான் இந்த பாடம் வேண்டாம்னு சொல்றோம். எங்களோட வயசுக்கே இவ்வளவு யோசிக்கிறோம், பல பட்டம் படிச்ச நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சா, இன்னிக்கே மாத்திடலாம் சார். அப்படி யோசிச்சிங்கன்னா, நாளைக்கு பிறக்கிற புது வருஷம், இந்தியா வல்லரசா ஆகுறதுக்கான முதல் படியா இருக்கும்! அப்படி இல்லேன்னா.... இன்னைக்கு இந்த பாடத்தை கிழிச்சோம்… இன்னும் 10 வருஷம் ஆனா, நாட்டுல இருக்கிற தேவை இல்லாத எல்லாத்தையும் கிழிப்போம்.!!!!!!(?)

ஆசிரியர் வாய்ஸ் ஓவர்: “ஆம்! இந்தச் சிறுவர்கள் அறியாத வயது என்பதால், பாடத்தையே கிழித்துவிட்டனர். ஆனால், வயதிலும், படிப்பிலும், அறிவிலும் பெரியவர்களாக இருக்கும் நாம், பாடத்தில் உள்ள தேவையில்லாத பகுதிகளை மட்டும் நீக்கினாலே போதும்... காலப்போக்கில் இந்த ஜாதி வேறுபாடுகள் மறைந்துவிடும். சரி செய்யவே முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்த இந்த நோய்க்கு மருந்து கிடைத்துவிட்டது! ஆனால், இதை யாரிடம் சொல்வது? யார் செயல்படுத்துவது?

மாணவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், யாரிடம் முடிவு கேட்பது என்பது புரியாமல், ஆசிரியர் சிலையாக நின்றார்!

பள்ளி நேரம் முடிந்து மணி ஒலிக்க… விடுதலை கிடைத்து விட்டதைப்போல், வேகமான நடையோடு, ஹர்ஜனுடன் புறப்பட்டனர் மாணவர்கள்!

ஹர்ஜன் - சிறுகதை Harjan

படைப்பு: Sn.Kuyilan | Writer & Director

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

ஹர்ஜன் - சிறுகதை

From எழுத்ததிகாரன்

Topic ID: 12

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...