Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
15/8/2012, 7:08 am
புதுமை!
ஆரம்ப காலம் முதலே மனிதன் புதுமையை ஏற்றுக்கொள்ள முன்வந்ததில்லை! உலகம் அறிந்த ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டுமானால், விஞ்ஞானி கலீலியோவை சொல்லலாம். நான் பல கட்டுரை எழுதும் போதெல்லாம் உலக உருண்டையைப் பற்றி அடிக்கடி பேசுவதுண்டு. ஏனென்றால், ஒட்டுமொத்த உலக மக்களும் பூமி தட்டையானது என்று சொல்லிக்கொண்டும், நம்பிக்கொண்டும் இருந்தபோது புதிதாக ஒருவர் பூமி தட்டையானதில்லை "உருண்டையானது" என்று சொன்னார். விளைவு? அவரைப் "பைத்தியம்" என்று சொல்லி கேலி செய்தார்கள்!

மனிதன் காலம் காலமாக பிறர் சொல்வதையும், சொல்லி வைத்ததையும் பின்பற்றியே வாழ்கிறான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை மேலும் சிந்திக்கவிடாமல் கட்டிப்போடுமேயானால் அதுவரையில் அதுதான் நமக்கெல்லாம் வேதம்! ஆனால், யாராவது ஒருவர் முன்வந்து அதைப்பற்றி மேலும் சிந்திக்கத் தொடங்கினால் நமக்கு மேலும் பல புதிய சிந்தனைகளும், புதிய தகவல்களும் கிடைக்கும். (நான் சொல்வது புதிதாக சிந்திப்பதைப் பற்றி. யாரும் விதண்டாவாதத்தைக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்! ஏனென்றால்? வாதம் என்பது தனது திறமையை நிரூபிப்பது! விதண்டாவாதம் என்பது மற்றவர்களின் திறமையை நிராகரிப்பது!)

புதுமையை ஏன் உடனே ஏற்றுக்கொள்வதில்லை? ஏனென்றால் மனிதன் எப்போதுமே பிறர் சொல்வதை மட்டுமே ஏற்றுக்கொள்ளவும், கடைபிடிக்கவும் நினைக்கின்றானே தவிர, தானாக எதையாவது சிந்திப்போம், உருவாக்குவோம் என்று முயற்சிப்பதே இல்லை. அதிலும் முக்கியமாக பலர் சேர்ந்து சொல்வதைத்தான் உடனே ஏற்றுக் கொள்கின்றான். அந்தப் பலர் என்பது பணம் படைத்தவர்களையும், பதவியில் இருப்பவர்களையுமே குறிக்கிறது. அதனால்தான் "ஏழை சொல் அம்பலம் ஏறாது" என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

மேலும் புதுமை என்பது, யாரோ ஒரு தனி நபரால் கண்டுபிடிக்கப்படுவதாக இருக்கும் அல்லது உருவாக்கப்படுவதாக இருக்கும். அதனால்தான் புதுமையை உடனே யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதிலும் குறிப்பாக புதுமை என்பது, யாருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கும். அல்லது ஏற்கெனவே உள்ள ஒன்றை முறியடிப்பதாக இருக்கும்! யாருக்கும் தெரியாததாக இருந்தால் நாளடைவில் அதை ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால், ஏதாவது ஒன்றை முறிடியடிப்பதாக இருந்தால் அதனால் லாபம் அடைபவர்கள் அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றே முயற்சிப்பார்கள். இந்த அடிப்படையில்தான் உலகம் தட்டையானது என்று சொல்லி தாங்கள்தான் விஞ்சானிகள் என்று லாபம் அடைந்தவர்கள் மத்தியில் உலகம் உருண்டை என்று சொன்ன கலீலியோவை பைத்தியமாக்கினார்கள்!!

ஒரு மனிதன் ஏதாவது ஒன்றின் தரத்தை குறைத்து மதிப்பிடுகிறான் என்றால், அவன் அதனால் லாபம் அடைகிறான் என்பது பொருள். உதாரணமாக தங்கமும் பித்தளையும்(கவரிங்) பழகியவர்களுக்கு பார்த்தவுடன் தெரிந்துவிடும். கவரிங் வேண்டுமானால் தங்கத்தைப் போல இருக்கலாம் ஆனால் தங்கம் ஒருநாளும் கவரிங்கைப் போல இருக்காது. ஆனால், கவரிங் நகைகளை யாரும் உரசிப் பார்ப்பதில்லை. தங்கத்தைத்தான் உரசிப் பார்ப்பார்கள். ஏனென்றால்? அதன் மூலம் அவர்கள் கொஞ்சம் சுரண்டிக் கொள்கிறார்கள். மேலும் முதல் நாளில் வாங்கிய தங்க நகையை மறு நாளே கொண்டு விற்கப் போனால் அதை பழைய நகையாகத்தான் மதிப்பிடுவார்கள். ஏனென்றால் அதன் மூலம் அவர்கள் லாபம் அடைய முயற்சிக்கிறார்கள்! எனவே, லாபம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே சிலர் புதுமையை ஏற்றுக்கொள்ள விடாமல் சூழ்ச்சியும் செய்கிறார்கள்!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தேடுவதும், எதிர்பார்ப்பதும் புதுமையைத்தான்! அதே நேரத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் இந்தப் புதுமையைத்தான்.

I am always updated!!

-எழுத்ததிகாரன்.

"I can’t understand why people are frightened of new ideas. I’m frightened of the old ones"

-John Gage

Message reputation : 89% (9 votes)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

புதுமையை ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன்? -புதுசு கண்ணா புதுசு!

From எழுத்ததிகாரன்

Topic ID: 172

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...