மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்ஷுல் மிஸ்ராவின் தலைமையில் மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிரானைட்க குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாலும், விசாரணைப் பிடி இறுகி வருவதாலும் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் பெரும் பீதியில் மூழ்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம், செம்மினிப்பட்டி வட்டாரத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும், பாசனக் கண்மாய்கள், வண்டிப்பாதை, கால்வாய்களையும் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக ஏராளமான அளவில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
18 குழுக்கள் தொடர்ந்து ஆய்வு
இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையிலான 18 குழுக்கள் கிரானைட் குவாரிகளில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் அடுக்கடுக்காகப் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனால் கிரானைட் குவாரிகள் மீதான விசாரணை பல்வேறு கோணங்களில் தீவிரமாகி வருகிறது.
கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட விவரங்கள் சேகரிப்பு பணி ஏறத்தாழ முடியும் நிலையில் இருக்கிறது. அதேபோல, கிரானைட் குவாரிகளின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த கனிமவளம், வருவாய்த் துறை அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் விசாரணைக்காக அதிகாரிகள் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
22 இடங்களில் சோதனைகள்
கிரானைட் தொழிலதிபர்கள் 1990-ம் ஆண்டு முதல் வாங்கிய சொத்துக்கள் விவரங்களைத் திரட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து கிரானைட் அதிபர்கள், பங்குதாரர்கள் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 22 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளது. சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பத்திரங்கள், பட்டாக்கள் இருந்தன.
பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றம்
கிரானைட் நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இதனால் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிஆர்பி பஸ்கள் பறிமுதல்
இதன் தொடர்ச்சியாக பிஆர்பி நிறுவன பஸ்களை பறிமுதல் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. மதுரையை சுற்றிலும் பல்வேறு ஊர்களுக்கு 15க்கும் மேற்பட்ட பஸ்களை பிஆர்பி நிறுவனம் இயக்கி வருகிறது.
மேலும் தொழிற்சாலைகளுக்காக 30க்கும் மேற்பட்ட பஸ்களையும் இயக்கி வருகிறது. இன்று காலை 6.15 மணிக்கு பொன்னமராவதியிலிருந்து மதுரை வந்த பஸ்சை மேலூர் பஸ்நிலையத்தில் போலீசார் மறித்து நிறுத்தி பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். கிரானைட் குவாரி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால் கிரானைட் குவாரி அதிபர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம், செம்மினிப்பட்டி வட்டாரத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும், பாசனக் கண்மாய்கள், வண்டிப்பாதை, கால்வாய்களையும் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக ஏராளமான அளவில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
18 குழுக்கள் தொடர்ந்து ஆய்வு
இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையிலான 18 குழுக்கள் கிரானைட் குவாரிகளில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் அடுக்கடுக்காகப் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனால் கிரானைட் குவாரிகள் மீதான விசாரணை பல்வேறு கோணங்களில் தீவிரமாகி வருகிறது.
கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட விவரங்கள் சேகரிப்பு பணி ஏறத்தாழ முடியும் நிலையில் இருக்கிறது. அதேபோல, கிரானைட் குவாரிகளின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த கனிமவளம், வருவாய்த் துறை அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் விசாரணைக்காக அதிகாரிகள் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
22 இடங்களில் சோதனைகள்
கிரானைட் தொழிலதிபர்கள் 1990-ம் ஆண்டு முதல் வாங்கிய சொத்துக்கள் விவரங்களைத் திரட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து கிரானைட் அதிபர்கள், பங்குதாரர்கள் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 22 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளது. சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பத்திரங்கள், பட்டாக்கள் இருந்தன.
பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றம்
கிரானைட் நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இதனால் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிஆர்பி பஸ்கள் பறிமுதல்
இதன் தொடர்ச்சியாக பிஆர்பி நிறுவன பஸ்களை பறிமுதல் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. மதுரையை சுற்றிலும் பல்வேறு ஊர்களுக்கு 15க்கும் மேற்பட்ட பஸ்களை பிஆர்பி நிறுவனம் இயக்கி வருகிறது.
மேலும் தொழிற்சாலைகளுக்காக 30க்கும் மேற்பட்ட பஸ்களையும் இயக்கி வருகிறது. இன்று காலை 6.15 மணிக்கு பொன்னமராவதியிலிருந்து மதுரை வந்த பஸ்சை மேலூர் பஸ்நிலையத்தில் போலீசார் மறித்து நிறுத்தி பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். கிரானைட் குவாரி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால் கிரானைட் குவாரி அதிபர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.