சென்னை: நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானது தொடர்பான விவகாரத்தில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பத்மா சேஷாத்ரி பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி ரஞ்சன் என்ற மாணவன் உயிரிழந்தான். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சிறுமி ஸ்ருதி இறந்த வழக்கிலும் ஜேப்பியா கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரத்திலும் பள்ளி உரிமையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனால் பத்மா சேஷாத்ரி பள்ளி உரிமையாளரான திருமதி ஒய்.ஜி.பி. எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்ற நிலைமை இருந்தது.
இந்நிலையில் திடீரென பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரனை நேற்று இரவோடு இரவாக கைது செய்து நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி அங்கேயே ஜாமீன் வழங்கி விடுதலை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்மா சேஷாத்ரி பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி ரஞ்சன் என்ற மாணவன் உயிரிழந்தான். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சிறுமி ஸ்ருதி இறந்த வழக்கிலும் ஜேப்பியா கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரத்திலும் பள்ளி உரிமையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனால் பத்மா சேஷாத்ரி பள்ளி உரிமையாளரான திருமதி ஒய்.ஜி.பி. எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்ற நிலைமை இருந்தது.
இந்நிலையில் திடீரென பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரனை நேற்று இரவோடு இரவாக கைது செய்து நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி அங்கேயே ஜாமீன் வழங்கி விடுதலை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.