ஹைதராபாத்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள நியூசிலாந்து அணி இன்று இந்தியாவுக்கு வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் டுவென்டி20 தொடர்களில் நியூசிலாந்து அணி பங்கேற்க உள்ளது. இதற்கான நியூசிலாந்து அணி, இன்று இந்தியாவுக்கு வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளதால், நியூசிலாந்து அணியினர் ஹைதராபாத் சென்று நாளை முதல் பயிற்சி மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியினர் வரும் 19ம் தேதி முதல் ஹைதராபாத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை வரும் 19ம் தேதி முதல் துவங்கும் என்று ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் எம்.வி.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா பிரச்சனை இருப்பதால், ஹைதராபாத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த எம்.வி.ஸ்ரீதர், இது ஒரு சர்வதேச அளவிலான போட்டி. இதற்கு நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் விருப்பம், விருப்பமின்மை குறித்து ஆலோசிக்க தேவையில்லை. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக நடத்தப்பட உள்ள டெஸ்ட் போட்டியில், இரு சர்வதேச அணிகள் பங்கேற்க உள்ளது. எனவே எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 23 முதல் 27ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் டுவென்டி20 தொடர்களில் நியூசிலாந்து அணி பங்கேற்க உள்ளது. இதற்கான நியூசிலாந்து அணி, இன்று இந்தியாவுக்கு வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளதால், நியூசிலாந்து அணியினர் ஹைதராபாத் சென்று நாளை முதல் பயிற்சி மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியினர் வரும் 19ம் தேதி முதல் ஹைதராபாத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை வரும் 19ம் தேதி முதல் துவங்கும் என்று ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் எம்.வி.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா பிரச்சனை இருப்பதால், ஹைதராபாத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த எம்.வி.ஸ்ரீதர், இது ஒரு சர்வதேச அளவிலான போட்டி. இதற்கு நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் விருப்பம், விருப்பமின்மை குறித்து ஆலோசிக்க தேவையில்லை. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக நடத்தப்பட உள்ள டெஸ்ட் போட்டியில், இரு சர்வதேச அணிகள் பங்கேற்க உள்ளது. எனவே எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 23 முதல் 27ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.