திருவண்ணாமலை : "கைலாய யாத்திரையில் ரஞ்சிதா உடன் வந்தாரா' என, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, நேரடியாக பதில் தராமல், நித்யானந்தா நழுவினார். ஜூலை 25ம் தேதி, கைலாய மலைக்குச் சென்ற நித்யானந்தா, நேற்று முன்தினம் மாலை, திருவண்ணாமலை வந்தார். நேற்று காலை, 6 மணிக்கு, தன் சீடர்களுடன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த நித்யானந்தா, கைலாய மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு அபிஷேகம் செய்து, சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், கோவிலை வலம் வந்து, கைலாய புனித நீரை, பக்தர்கள் மீது தெளித்தார்.நித்யானந்தா அளித்த பேட்டி:திருவண்ணாமலையைத் தொடர்ந்து, மதுரை சொக்கநாதருக்கு அபிஷேகம் செய்கிறேன். அதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம், காசி சென்று, புனித நீரை கொண்டு அபிஷேகம் செய்ய உள்ளேன். மதுரை ஆதீனத்துக்கும், எனக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை.
கைலாய யாத்திரைக்குச் சென்றபோது, என் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது. அப்படி பறிமுதல் செய்திருந்தால், கைலாயத்தில் இருந்து, என்னால் எப்படி திரும்பி இருக்க முடியும். என்னிடம் மருத்துவப் பரிசோதனை நடத்த, கர்நாடக நீதிமன்றத்தில் இருந்து தடை வாங்கியுள்ளோம். மருத்துவப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால், அதற்கு நான் தலைவணங்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். "கைலாய யாத்திரைக்கு, உங்களுடன் நடிகை ரஞ்சிதா வந்ததாக, செய்தி வெளியானதே' என, நிருபர்கள் கேட்ட போது, ""அது குறித்து எனக்கு தெரியாது,'' என, நித்யானந்தா பதில் அளித்தார்.
கைலாய யாத்திரைக்குச் சென்றபோது, என் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது. அப்படி பறிமுதல் செய்திருந்தால், கைலாயத்தில் இருந்து, என்னால் எப்படி திரும்பி இருக்க முடியும். என்னிடம் மருத்துவப் பரிசோதனை நடத்த, கர்நாடக நீதிமன்றத்தில் இருந்து தடை வாங்கியுள்ளோம். மருத்துவப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால், அதற்கு நான் தலைவணங்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். "கைலாய யாத்திரைக்கு, உங்களுடன் நடிகை ரஞ்சிதா வந்ததாக, செய்தி வெளியானதே' என, நிருபர்கள் கேட்ட போது, ""அது குறித்து எனக்கு தெரியாது,'' என, நித்யானந்தா பதில் அளித்தார்.