திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே லாரி அதிபர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.துரிஞ்சாபுரம் ஒன்றியம் பூதமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மதுரா ஆனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி, 53. இவர் சொந்தமாக லாரி வைத்து கரும்பு லோடு ஓட்டி வந்தார். இது தவிர அப்பகுதியில் டீக்கடையும் நடத்தி வந்தார்.இதே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பூபதி. இவரது நிலத்தில் நேற்று முன்தினம் கரும்பு வெட்டினார். அப்போது வழக்கமாக லாரி லோடுக்கான டிரைவர் மாமூல் 600 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை முனுசாமிக்கு கொடுத்துள்ளார்.
இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் மாலை முனுசாமி டீக்கடையில் இருந்தபோது பூபதி அங்கு சென்று டீக்கடையை சூறையாடி, முனுசாமியை தாக்கினர். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த முனுசாமி பலத்த காயமடைந்து சம்வ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
முனுசாமிக்கு முத்து என்ற மனைவியும், இரண்டு மகன், இரண்டு மகள் உள்ளனர். மங்கலம் போலீஸார் விசாரித்து, பூபதியை கைது செய்தனர்.
இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் மாலை முனுசாமி டீக்கடையில் இருந்தபோது பூபதி அங்கு சென்று டீக்கடையை சூறையாடி, முனுசாமியை தாக்கினர். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த முனுசாமி பலத்த காயமடைந்து சம்வ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
முனுசாமிக்கு முத்து என்ற மனைவியும், இரண்டு மகன், இரண்டு மகள் உள்ளனர். மங்கலம் போலீஸார் விசாரித்து, பூபதியை கைது செய்தனர்.