ஷில்லாங்: வட கிழக்கு மாநிலங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அஸ்ஸாம் பற்றி எரிந்து வரும் நிலையில் இன்று பிற்பகலில் மிதமான நிலநடுக்கம் அந்த மாநிலங்களை அதிர வைத்தது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வட கிழக்கு இந்தியாவை உலுக்கியது. இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த விவரம் தெரியவில்லை.
இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அஸ்ஸாமின் தேஸ்பூரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் பிற வட கிழக்கு மாநிலங்களில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலகிலேயே நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் 6வது முக்கிய மையமாக வட கிழக்கு திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வட கிழக்கு இந்தியாவை உலுக்கியது. இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த விவரம் தெரியவில்லை.
இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அஸ்ஸாமின் தேஸ்பூரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் பிற வட கிழக்கு மாநிலங்களில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலகிலேயே நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் 6வது முக்கிய மையமாக வட கிழக்கு திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.