மத்தூர்: போச்சம்பள்ளியில், பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளி அருகே அங்கம்பட்டி இந்திரபுரியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வெங்கடேசன். இவரது மகள் யாத்ரா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இதே பள்ளியில் ஊத்தங்கரை துரிச்சிப்பட்டியைச் சேர்ந்த மோகன், 35, என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் பள்ளியில் இளம் வயது தடுப்பு விழிப்புணர்வு குறும்படம், பள்ளி மாணவியருக்கு காட்டப்பட்டுள்ளது.
அப்போது, ஒன்பதாம் வகுப்பு மாணவியர் சிலர் அந்த குறும்படத்தை பார்க்கச் செல்லாமல் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். அங்கு வந்த ஆசிரியர் மோகன், யாத்ராவை தனியாக அழைத்து அவரிடம் பேசுவது போல் சில்மிஷம் செய்துள்ளார். மாணவி கூச்சல் போட்டதால் அதிர்ச்சியடைந்த மோகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். வீட்டிற்கு அழுதபடி சென்ற மாணவி, ஆசிரியர் சில்மிஷம் செய்தது பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரித்து, மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மோகனை கைது செய்தனர்.
போச்சம்பள்ளி அருகே அங்கம்பட்டி இந்திரபுரியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வெங்கடேசன். இவரது மகள் யாத்ரா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இதே பள்ளியில் ஊத்தங்கரை துரிச்சிப்பட்டியைச் சேர்ந்த மோகன், 35, என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் பள்ளியில் இளம் வயது தடுப்பு விழிப்புணர்வு குறும்படம், பள்ளி மாணவியருக்கு காட்டப்பட்டுள்ளது.
அப்போது, ஒன்பதாம் வகுப்பு மாணவியர் சிலர் அந்த குறும்படத்தை பார்க்கச் செல்லாமல் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். அங்கு வந்த ஆசிரியர் மோகன், யாத்ராவை தனியாக அழைத்து அவரிடம் பேசுவது போல் சில்மிஷம் செய்துள்ளார். மாணவி கூச்சல் போட்டதால் அதிர்ச்சியடைந்த மோகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். வீட்டிற்கு அழுதபடி சென்ற மாணவி, ஆசிரியர் சில்மிஷம் செய்தது பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரித்து, மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மோகனை கைது செய்தனர்.