சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்களை கண்டித்த பேராசிரியருக்கு அடி-உதை விழுந்தது. இதை கண்டித்து மற்ற பேராசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சிலர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ஒருவர், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேராசிரியரை மிரட்டியுள்ளனர். மேலும் பேராசிரியரை அடித்து, உதைத்துள்ளனர். இதில் அவர் காயம் அடைந்தார். இந்த நிலையில் மாணவர்களின் அத்துமீறிய செயலை கண்டித்து, சேலம் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வகுப்புகள் பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேலத்தை அடுத்த ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி போராசியர்களில் 3 பேரை வெளியாட்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கல்லூரியின் பெண் பேராசிரியர்களை வெளியாட்கள் சிலர் கேலி கிண்டல் செய்வதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சிலர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ஒருவர், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேராசிரியரை மிரட்டியுள்ளனர். மேலும் பேராசிரியரை அடித்து, உதைத்துள்ளனர். இதில் அவர் காயம் அடைந்தார். இந்த நிலையில் மாணவர்களின் அத்துமீறிய செயலை கண்டித்து, சேலம் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வகுப்புகள் பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேலத்தை அடுத்த ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி போராசியர்களில் 3 பேரை வெளியாட்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கல்லூரியின் பெண் பேராசிரியர்களை வெளியாட்கள் சிலர் கேலி கிண்டல் செய்வதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.