Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
19/9/2012, 4:44 pm
ஒயின்ஸ் with லைசென்ஸ்

இரண்டு வாலிபர்கள் டூ-வீலரில் வருகின்றனர். அப்போது ஓட்டுபவருக்கு போன் அழைப்பு வருகிறது. அந்த நபர் போனை எடுத்து பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுகிறார். மேலும் அவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை. இதைக் கவனித்த ஒரு டிராஃபிக் போலீஸ் அவர்களை துரத்திச் சென்று மறிக்கின்றார்.

"ஏய்! ட்ரைவிங்-ல போன் பேசக்கூடாதுன்னு விதிமுறை இருக்குதில்ல... அதையும் மீறி ஏண்டா போன் பேசிகிட்டு வண்டி ஓட்டுறே?" என்று கேட்க,

"சாரி சார் ஒரு அவசரமான Call... அதான் பேச வேண்டியதா போயிடுச்சு". -என்று அந்த வாலிபர் கூறுகிறார்.

"சரி, ஹெல்மெட் எங்கேடா?" என்று கேட்க,

"அதான் சொன்னேனே சார்... அவசரமா போயிகிட்டு இருக்கேன்... இந்த நேரத்துல 'கேள்'மெட்டெல்லாம் கூட்டிகிட்டா போக முடியும்" என்று அந்த வாலிபர் கூறுகிறார்.

"ஏண்டா இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கறீங்க? நாங்க என்ன எங்களுக்காகவா இதை கடைபிடிக்க சொல்லுறோம்? உங்க உயிரைப் பாதுகாக்க தானேடா சொல்லுறோம்... அதை ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க." -என்று போலீஸ் சொன்னதும், அந்த வாலிபர் வண்டியை விட்டு இறங்கிக் கொண்டே...

"என்ன சொன்னீங்க சார்? இ..ன்..னொ..ரு..... மு..றை... சொல்...லுங்.க...!" என்று பாடுவதுபோல கேட்கிறார்.

அதற்கு அந்த போலீஸ், "என்னடா கிண்டல் பண்றியா? பக்கத்துல நின்னுதானே சொன்னேன்... இது கேக்கலையா உனக்கு?"

"சத்தியமா கேக்கல சார். பக்கத்துல ஒருத்தர் ஹெல்மெட் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போனாரா... அதான் சரியா கேக்கலை. இப்ப சொல்லுங்க..." என்றான்.

"ஏண்டா.... பக்கத்துல போறவன் ஹெல்மெட் போட்டா உனக்கு காது கேக்காதா?... நீங்க எல்லாம் சினிமா பாத்து ரொம்ப கெட்டுப் போயிடீங்கடா. முதல்ல ஃபெயினைக் கட்டு! அப்பத்தான் உனக்கெல்லாம் புத்தி வரும்." என்று சொல்ல,

"பெயினைக் கட்டுறேன்... ஆனா, இப்ப ஏதோ சொன்னீங்களே அதை திரும்ப சொல்லுங்க."

"உங்களோட உயிருக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தானேடா கவர்மெண்டு இதையெல்லாம் சட்டமா போட்டு வச்சி கடைபிடிக்க சொல்லுது. அதை ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க?." என்று மீண்டும் அந்த போலீஸ் சொல்கிறார்.

"So, மக்கள் உயிர் மேல உங்க கவர்மெண்டுக்கு ரொம்ப அக்கறை... அப்படி தானே? சரி... இதை கவர்மென்ட் சொல்லுதா? இல்ல நீங்க சொல்றீங்களா?"

"கவர்மெண்டு வேற, நாங்க வேற இல்லை. நாங்களும் கவர்மெண்டுல ஒரு பகுதிதான்"

"பகுதியா இருந்தாலும் சரி, விகுதியா இருந்தாலும் சரி. ஆனா, விகாரமா ஆகிடாமப் பாத்துக்கோங்க சார்..."

"சரி, லைசென்ஸ் எடு!"

"லைசென்சுன்னா?..."

"ஓ... லைசென்சுன்னா என்னன்னே தெரியாமத்தான் டபுள்ஸ் ஒட்டுரியா?"

"முதல்ல லைசென்சுன்னா என்னன்னு சொல்லிட்டு... அப்புறமா அடுத்த கேள்வியைக் கேளுங்க!"

"லைசென்சுன்னா..., உனக்கு இந்த டூ-வீலரை ஓட்டத் தெரியும்னு R.T.O ஆபீசருங்க ஒரு சர்டிபிகேட் கொடுப்பாங்க.... அதுதான் லைசென்சு!"

"ஓ.. அப்படியா? சரி, எனக்கு டூ-வீலர் ஓட்டத்தெரியுமா, தெரியாதான்னு R.T.O ஆபீசருங்களுக்கு எப்படி சார் தெரியும்?"

"ஆங்... நீ அவங்ககிட்ட ஒட்டிக்காட்டினா... அவங்களுக்குத் தெரியும்!"

"ஏன் சார்? டூ-வீலர் ஓட்டத் தெரியாமத்தான் இவ்வளவு தூரம் டபுல்ஸ்ல வந்தேனா?... ஃபோன் பேசிக்கிட்டே எவ்வளவு சூப்பரா வந்தேன்னு நீங்க தான் பார்த்தீங்கள்ள... நீங்களே ஒரு சர்டிபிகேட் போட்டுக் கொடுத்துடுங்க சார்..."

"அதெல்லாம் நான் கொடுக்க முடியாதுடா... R.T.O ஆபீசருங்கதான் கொடுக்கணும்."

"என்ன சார் நீங்க?... எங்கேயோ இருக்குற R.T.O ஆபீசருங்க சொல்லுறதை நம்புறீங்க... உங்களுக்கு உங்க மேலையே நம்பிக்கை இல்லையா? உங்ககிட்ட ஒட்டிக் காட்டுனா பத்தாதா? லைசென்சை வாங்கிட்டு வந்து உங்ககிட்ட காட்டுரதுக்குப் பதிலா.... லைவா ஒட்டியே காட்டலாம்னு தான் சார் இதுவரைக்கும் லைசென்ஸ் எடுக்கல..."

"எல்லாத்துக்கும் ரெடியா ஒரு பதிலோ, கேள்வியோ வச்சிருக்கியே எப்படிடா?"

"எழுத்ததிகாரன் னா சும்மாவா?"

"யாருடா எழுத்ததிகாரன்? எகத்தாளம் பேசுறவன் எல்லாம் எழுத்ததிகாரனா ஆகிட முடியுமா?"

"எது சார் எகத்தாளம்?... நான் எகத்தாளம் பேசுறேனா? சரி, இதுக்கு நீங்களே பதில் சொல்லுங்க... இப்போ உதாரணமா 5 வருஷம்-னு லைசென்சு போட்டுக் குடுக்குறீங்க... ஆனா, அஞ்சு வருசத்துக்கு அப்பறம் அதை ரினியூவல் பண்ணாம இருந்தா லபக்குன்னு புடிச்சி ஃபெயின் போடுறீங்களே... அஞ்சு வருஷம் டூ-வீலர் ஒட்டுனவனுக்கு டிரைவிங்-ல எக்ஸ்பீரியன்ஸ் வருமா? இல்ல டிரைவிங் மறந்து போயிடுமா? எதுக்காக சார் பெயின் போடுறீங்க?

"............................"

"சொல்லுங்க சார்? எதுக்காக பெயின் போடுறீங்க?... அப்புறம் எதுக்காக ரெனியூவல் வேற பண்ண சொல்றீங்க?"

"................................"

"டூ வீலர் ஓட்டத்தெரியும்னு காட்டத்தானே லைசென்சு எடுக்க சொல்றீங்க? அதான் ஓட்டத் தெரியுதுன்னு நீங்க லைசென்சு கொடுத்துட்டீங்களே.... அப்பறம் எதுக்கு அதை ரெனியூவல் பண்ணனும்?.... அடிக்கடி மறந்து போறதுக்கு நாங்க என்ன கஜினி சூர்யாவா?... சினிமா பாத்துக் கெட்டுப் போறது நாங்க இல்ல சார், நீங்க தான்!"

"..........................."

"பணத்தை நாங்கல்லாம் உழைச்சு சம்பாதிக்கிறோம் சார்!... நீங்க ஈசியா சம்பாதிக்கிற மாதிரியே எங்களையும் நினைச்சி இப்படிப் புடுங்காதீங்க."

"............................."

"உங்களுக்கு வேணும்னா பணம்ங்கறது லஞ்சமா இருக்கலாம்.... ஆனா, எங்களுக்கு அது ரத்தம் சார்!... நீங்க இப்படி பல வழியிலேயும் பணத்தைப் புடுங்குறது எங்களோட ரத்தத்தை உரிஞ்சுறதுக்கு சமம்!"

"............................."

"ஒருத்தனை உயிரோட நிக்க வச்சி ரத்தத்தை உறிஞ்சா எப்படி வலிக்கும்னு தெரியுமா?... அந்த நேரத்துல எவ்வளவு ஆத்திரம் வரும்னு தெரியுமா?... ஆனா, நாங்கல்லாம் ஏழைங்க சார்! எங்களுக்கு அதைத் தாங்குறதுக்கு சக்தியும் இல்ல... உங்களை மாதிரி அதிகாரத்துல உள்ளவங்கள எதிர்க்குறதுக்கு பலமும் இல்ல... எங்களை விட்டுடுங்க சார்!" என்று தன் மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டினான் அந்த இளைஞன்.

"இத பாருடா, இப்படி சென்டிமென்டா பேசியெல்லாம் சட்டத்தை சரிகட்ட முடியாது.. புரியுதா?. முதல்ல ஃபெயினைக் கட்டிட்டு கெளம்பு!"

"இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்... வண்டியில வேகமா போனா ஃபெயின் போடுறீங்க! சும்மா கெடக்குற ரோட்டுல சிக்னல போட்டு வச்சிக்கிட்டு.. அதுல நிக்காம போனாலும் ஃபெயின் கட்ட சொல்லுறீங்க...! இதுக்கு நடுவுல ஹெல்மெட் போடு, ரூம்மேட்டு போடுன்னு டார்ச்சர் வேற பன்றீங்க!.. சரி, மக்களோட உயிர்மேல அக்கறை இருந்தா டூ-வீலர் வச்சிருக்குற ஒவ்வொருத்தருக்கும் ஃப்ரீயா ஒரு ஹெல்மெட்டைக் குடுக்கவேண்டியது தானே உங்க கவருமெண்டு?"

"ஏய்... மக்களோட உயிரைக் காப்பாத்துற சாலை விதிகளை மதிக்காம இப்படி கிண்டல் பண்ணுறது நல்லதுக்கில்ல... மரியாதையாப் பேசு."

"பின்னே என்ன சார்?... மக்களோட அன்றாட வாழ்க்கையில எதை எல்லாம் மீறாம இருக்க முடியாதோ, அதை எல்லாம் சட்டமா போட்டு வச்சிக்கிட்டு நீங்க மிரட்டுவீங்க... நாங்க பயந்துகிட்டு ஃபெயின் கட்டிட்டே இருக்கனுமா? என்ன சார் நியாயம் இது?"

"இத பாருடா... சிங்கப்பூர் மாதரி நாட்டுல எல்லாம் மக்கள் கட்டுப்பாட்டோட நடந்துக்கராங்கன்னா... அதுக்குக் காரணம் இப்படி ஃபெயின் போடுறதாலதான்!.. புரியுதா?... நடு ரோட்டுல சாதத்தை கொட்டி சாப்பிடுற அளவுக்கு அவ்வளவு சுத்தமா இருக்கும் ரோடு... இதெல்லாம் தெரியுமா உனக்கு?"

"உங்களுக்கெல்லாம் தொப்பை எப்படி வளருதுன்னு இப்பதான் சார் புரியுது... சிங்கப்பூரு ரோட்டுலகூட சோத்தைத்தான் கொட்டி சாப்பிடத் தோனுதா உங்களுக்கு?... ஆனா, சிங்கப்பூரை எல்லாம் நீங்க உதாரணமா சொல்லாதீங்க. அவங்கல்லாம் அஞ்சுக்கும் பத்துக்கும் இப்படி கையேந்தி நிற்க மாட்டாங்க! அதுமட்டுமில்லாம, அங்கே அவ்வளவு அழகா ரோடு வச்சிருக்காங்க, அதனால அவங்க ஃபெயின் போடுறாங்க. ஆனா, இங்கே ரோடே இல்லாம பெயின் கட்டச் சொன்னா எப்...பூ...டி...?"

"டேய் படிச்ச திமிருல பேசாம... ஃபெயினை கட்டிட்டு கெளம்புடா."

"சரி சார்..., இப்ப உங்ககிட்ட பெயினை கட்டிட்டு போனா மட்டும் நான் ஹெல்மெட் போட்டுகிட்டா போகப் போறேன்? இப்படியேதானே ஓட்டிகிட்டுப் போவேன்? மறுபடியும் போன் வந்தா பேசிக்கிட்டுதான் போவேன்.... அப்பல்லாம் எங்க உயிருக்கு ஆபத்து வராதா சார்?!!

"மறுபடியும் போன் வந்தா டிரைவிங் ல இருக்கும் போது பேசக் கூடாது... சட்டத்தை மதிச்சு நடந்துக்கனும்... சட்டத்தை மீறினா ஃபெயின் கட்டனும் அப்படிங்கற அறிவு உங்களுக்கும் இருக்கனும்டா.."

"சரி சார்... நான் ஃபெயின் கட்டிட்டே போறேன்னு வச்சுக்கோங்க... ஆனா அடுத்த சிக்னல்ல இன்னொரு டிராபிக் போலீஸ் மறிப்பாங்க. உங்ககிட்ட ஃபெயின் கட்டின ரசீதைக் காட்டின உடனே மறுபேச்சு பேசாம விட்டுடுறாங்க.... அப்படின்னா, நீங்க போடுற சட்டம் மக்களோட உயிரைக் காப்பாத்துறதுக்கா? இல்லை மக்கள்கிட்ட பணத்தைப் பறிக்கனுங்கறதுக்கா?..."

"சட்டம் புரியாம ஏன்டா இப்படி உயிர வாங்குறீங்க?"

"இல்ல சார்... இப்படி ஃபெயின் போடுறதுக்குப் பதிலா, லைசென்ஸ் இல்லாம வந்தாலோ, ஹெல்மெட் போடாம வந்தாலோ அந்த வண்டியை பார்ட் பார்ட்டா பிரிச்சி காயலாங்கடையில போடச்சொல்ல வேண்டியது தானே? அதுக்கு அப்புறம் எவனாவது இதுமாதிரி தப்பை எல்லாம் செய்வானா?"

"இதப் பாருடா..., பேசத் தெரியும்ங்கறதுக்காக எதை வேணா பேசலாம்னு நினைக்காதே... முதல்ல நடைமுறைக்கு தகுந்த மாதரி.. சட்டத்தைப் பரிஞ்சுகிட்டு... படிச்சவன் மாதிரி பேசு!"

"படிச்சவன் மாதிரி பேசனுமா?... சரி சார்! சரக்கு அடிக்கிறது மனுஷனுக்கு நல்லதா? கெட்டதா சார்?

"என்னது?..."

"சரக்கு...! சரக்கு...! சாயங்காலம் ஆனவுடனே ஒயின்ஷாப்புக்கு "PETROL" போடப் போவீங்களே... அந்த சரக்கு!"

"படிச்சவன் தானேடா நீ? அதான் ஒவ்வொரு பாட்டில்லேயும் பிரின்ட் பன்னிருக்கே... மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடுன்னு... அப்பறம் ஏன் என்கிட்ட வேற கேட்டுகிட்டு இருக்கே."

"இப்போ கெட்ட வார்த்தை யூஸ் பண்ணிப் பேசிக்கவா சார்?"

"டேய்!... நீ ரொம்பப் பேசுறே... உனக்கு டைம் சரியில்லேன்னு நினைக்கிறேன்..."

"பின்னே என்ன சார்?... சரக்கு அடிச்சா மனுஷன் செத்துப் போவான்னு தெரிஞ்சே... அதை தெருவுக்கு தெரு வச்சி விக்கிற உங்க கவர்மெண்டு.... மக்களோட உயிரைக் காப்பாத்துறதுக்காக ஹெல்மெட் போடச் சொல்லுதா?... யாரு காதுல பூ சுத்துறீங்க? இந்த லட்சனத்துல பாட்டில்'லயே பிரின்ட் பன்னிருக்குன்னு வெக்கமே இல்லாம விளக்கம் வேற சொல்லுறீங்க... அப்புறம் குடிச்சுட்டு வண்டி ஓட்டுறான்னு அதுக்கும் ஒரு ஃபெயினைக் கட்டச்சொல்ல வேண்டியது!" மைன்ட் வாய்ஸ்: "குடிக்கிறதுக்கும் காசு வாங்குராய்ங்க... அப்பறம் ஏண்டா குடிச்சீங்கன்னும் காசு வாங்குராய்ங்க..."

"சரக்கடிச்சா கொஞ்சம் லேட்டா சாவாங்கடா... ஆனா ஹெல்மெட் போடாம போனா உடனே செத்துப் போயிருவாங்கடா... ஏன்டா புரியாம பேசுறே?"

"நீங்க வசனம் பேசி மக்களை ஏமாத்துன காலமெல்லாம் மலை ஏறிப்போயிடுச்சு சார்.... இப்போ மக்களே கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி டைரக்ஷனும் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க... இது மக்கள் ஆட்சி மட்டும் இல்ல! மக்களே நடத்த வச்சிக்கிட்டு இருக்குற ஆட்சி!... தப்பு எங்க நடந்தாலும் அதை தட்டிக் கேக்குறது மட்டுமில்ல, தீ வச்சி கொளுத்தவும் தயங்க மாட்டாங்க!... முடிச்சூர்ல பஸ்ஸைக் கொளுத்துன மாதரி, கொளுத்துனாத்தான் அடங்குவீங்களா?"

"இத பாருடா! நீ மக்கள் மனசுல தீவிரவாதத்தை தூண்டுறே... இதுக்கே உன்னைக் கைது செய்யலாம்... தெரியுமா?"

"அப்படியா...? இந்தாங்க... கைது செய்ங்க... ஆனா, நீங்க கைது செஞ்ச உடனே பயந்துபோயி தப்பு செஞ்சிட்டேன்னு ஒத்துகிட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க... அப்படி ஒரு நிலைமை வந்தா... அப்ப என்னமாதரி கேள்வி கேக்கனும்னும் எனக்குத் தெரியும்! ஆனா பதில் சொல்ல முடியாம சட்டப் புத்தகத்தைத் தேடவேண்டிய அவசியம் உங்களுக்குத்தான் வரும்! ஏன்னா? உங்களுக்கு சட்டத்தை படிக்க மட்டும்தான் தெரியும். ஆனா, எனக்கு.... சட்டத்தை புதுசா எழுதவும் தெரியும்! ஆனா, சட்டங்கறது உங்களை மாதரி சில பேரு மட்டும் இல்லை!"

"காவல்துறையோட பவரு தெரியாம சினிமா டயலாக் எல்லாம் பேசிகிட்டு இருக்கே... வீனா அழிஞ்சி போகப்போறே!"

"எனக்கு காவல்துறையோட பவரு தெரியாதுதான் ஒத்துக்கறேன்... ஆனா, காவல்துறை-ன்னா என்னான்னு உங்களுக்குத் தெரியுமா?" -என்று கேட்டுக்கொண்டே தனது நண்பனுக்கு ஜாடை காட்ட... அவன் டு-வீலரை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறான்...

"என்கிட்டேயே காவல்துறையைப் பத்தித் தெரியுமான்னு கேக்குறியா?.. டிராஃபிக்ல நிக்கிறேன்னு சாதாரணமா நினைச்சுடாதே டா... என்னோட சர்வீஸ்ல எத்தனை என்கவுண்டர் பண்ணிருக்கேன்னு தெரியுமா? எத்தனை குற்றவாளிகளை கண்டுபிடிச்சிக் கொடுத்திருக்கேன்னு தெரியுமா?"

"குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறதை எல்லாம் பெருமையா சொல்லிக்காதீங்க சார்! ஏன்னா, உங்களைவிட சிறப்பா அதை ஒரு நாய் கண்டுபிடிச்சுக் கொடுத்துடும்! ஆனா, காவல்துறைங்கறது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறதுக்காக இல்ல.... குற்றங்கள் நடக்காம தடுக்குறதுக்குத்தான் காவல்துறை! அதை நீங்க புரிஞ்சு நடந்துக்கோங்க..."

இதனால் போலீஸ் ஆத்திரம் அடைந்தார்....

"சட்டம் பேசுறியா?... உனக்கெல்லாம் ஃபெயின் போட்டாதான் புத்தி வரும். முதல்ல உன் வண்டி நம்பரை சொல்லு. நீ கோர்ட்டுல போயி சட்டம் பேசி, உன்னோட வண்டிய திரும்ப வாங்கிக்க. நம்பர் சொல்லு... நம்பர் சொல்லு..." என்று கோபத்துடன் போலீஸ் கேஸ் எழுத தொடங்கினார்...

"........................."

"என்கிட்டயே சட்டம் பேசுறியா? ஏண்டா இப்படி பேசினோம்னு நெனச்சி நெனச்சி நீ வேதனைப் படனும்... வண்டி நம்பர் சொல்லுடா? உன் பேர் என்ன? வீட்டு அட்ரஸ் சொல்லு..."

"..........................."

"என்னடா முழிக்கிற? வண்டி நம்பர் சொல்லு!" என்று மிரட்டினார் போலீஸ். உடனே அந்த இளைஞன் நம்பர் சொல்லத் தொடங்கினான். அவன் சொல்லச் சொல்ல போலீசும் திரும்ப சொல்லிக்கொண்டே எழுதத் தொடங்கினார்...

"TN 22"

"T... N... 22...?"

"J..."

"J...?"

"8..."

"என்னடா இழுக்குறே... மொத்தமா சொல்லு...!"

"TN 22 J-8615 சார்.. "

"அப்படி சொல்லு... டி என் டபுள்டூ... எய்ட்...சிக்ஸ்... ஒன்... பைவ்... என்னாது 8615-யா?.... டேய்!.. இது என்னோட வண்டி நம்பருடா!"

"ஆமா... நீங்க தானே வண்டி நம்பர் சொல்லுன்னு கேட்டீங்க?... அதான் சொன்னேன்!

"அடேய்! நான் கேட்டது உன்னோட வண்டி நம்பர்!"

"நான் எப்போ சார் வண்டியில வந்தேன்?"

"என்னாது? நீ வண்டியில வரலையா?... அப்போ இது யாரோட வண்டி?..." என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்க்கின்றார்.... அங்கே டூ-வீலரைக் காணவில்லை...!

"எந்த வண்டியை சார் தேடுறீங்க?" என்று மீண்டும் கிண்டல் செய்தான் அந்த இளைஞன்.

"ஓஹோ... உன் ஃபிரண்டு டூ-வீலரை எடுத்துகிட்டு ஓடிட்டானா?... செம்மையா மாட்டிகிட்டீங்கடா... சும்மா மிரட்டிட்டு ஐம்பதோ, நூறோ வாங்கிட்டு விடலாம்னு தான் நினைச்சேன்... ஆனா, இனிமே உங்களை சும்மா விடமாட்டேன்..."

"சும்மா விடாம?... ஜீன்ஸ், டி-சர்ட் எல்லாம் போட்டுவிடப் போறீங்களா சார்?..."

"நக்கலா?... நீ முதல்ல டூ-வீலர் நம்பரை சொல்லுடா..."

"லூசா சார் நீங்க?... நான் டூ-வீலர்லேயே வரலேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்... நீங்க என்னடான்னா வண்டி நம்பர் சொல்லு, வண்டி நம்பர் சொல்லுன்னு, தேஞ்ச ரெக்கார்டு மாதரி அதையே கேட்டுகிட்டு இருக்கீங்க..."

"அப்படியா... சரி வா கோர்ட்டுக்கு போகலாம்... அங்கே வந்து டூ-வீலர்ல வரலேன்னு சொல்லு பார்ப்போம்..."

"அய்யய்யோ கோர்ட்டுக்கெல்லாம் வேண்டாம் சார்... அப்பறம் பெரிய பிரச்சினையா போயிடும்..."

"பயமா இருக்குதில்லே....? அப்போ மரியாதையா டூ-வீலர் நம்பரை சொல்லிட்டு.... ஃபெயினைக் கட்டிட்டு ஓடிப் போயிடு..."

"ஹலோ சார்... நான் கோர்ட்டுக்குப் போக வேண்டாம்னு சொன்னது பயந்துகிட்டு இல்ல... உங்களோட நல்லதுக்குத்தான் வேண்டாம்னு சொன்னேன்..."

"என்னடா உளர்றே?"

"அதாவது சார்,... நீங்க என்னை கோர்டுக்கு அழைச்சிகிட்டுப் போவீங்களா?, `நீதிபதி என்ன பிரச்சினைன்னு கேப்பாங்களா?, நீங்க என்ன சொல்லுவீங்க...? நான் போன் பேசிகிட்டே டிரைவிங் பண்ணினேன், லைசென்ஸ் இல்லாம டபுள்ஸ் ஓட்டுனேன், ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுனேன் அப்படின்னு அடிக்கிகிட்டே போவீங்க...

ஆனா நான் என்ன சொல்லுவேன்...? நான் டூ-வீலர்லயே வரலேன்னு ஒரே வார்த்தையில பல்டி அடிச்சிடுவேன்.... உடனே, டூ-வீலர் எங்க? டூ-வீலர் நம்பர் என்ன?-ன்னு நீதிபதி உங்ககிட்ட கேப்பாங்க.... அதுக்கு நீங்க என்ன சொல்லுவீங்க?...

"................."

"சொல்லுங்க சார்... என்னானு சொல்லுவீங்க?... நீங்க தெரியாதுன்னு சொல்லுவீங்க... சரியா!

"ஆமா...."

"ஏன்யா?... ஒரு டூ-வீலரோட நம்பரைக் கூட நோட் பண்ணத்தெரியாத நீயெல்லாம் ஒரு டிராஃபிக் போலீசா?.' அப்படின்னு கேவலமா உங்களைத்தான் ஜட்ஜ் ஐயா திட்டுவாரு. இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?... போலீஸ் ஸ்டேஷன்ங்கற நாலு சுவத்துக்குள்ளதான் நீங்க என்கவுண்டர் பன்ன முடியும். ஆனா கோர்ட்டுக்கு போயிட்டா நான் ஃபுல் எண்டர்டெய்ன்மென்டே பன்னுவேன்... அதுக்காகத்தான் வேண்டாம்னு சொன்னேன். நீங்க விருப்பப்பட்டா எனக்கும் OK  தான்... போலாமா?..."

"என்னடா.... பேசியே ஜெயிச்சுடலாம்னு பாக்குறீயா?"

"சட்டம்ங்கறதே பேசி ஜெயிக்கறதுதானே சார்?!.. நம்மகிட்டல்லாம் யாரும் தொடர்ந்து பேசவே முடியாது. இந்த லட்சனத்துல எங்கேருந்து ஜெயிக்கிறது?... எந்த நேரத்துல எப்படி பேசுவேன்னு எனக்கே தெரியாது சார்... ஏன்னா?..."

"ஏன்னா... நீதான் எழுத்ததிகாரனாச்சே அப்படின்னு சொல்லுவே... அதானே...?"

"பரவால்லயே... என்னோடப் பேசிப்பேசி நீங்களும் நல்லாப் பேச ஆரம்பிச்சிடீங்களே..?"

"நீ இன்னொரு தடவை என்கிட்டே மாட்டாமலா போயிடுவே... அப்போ கவனிச்சுக்கறேன் இரு..."

"தாராளமா நீங்க எப்ப வேணாலும் கவனிச்சுக்கோங்க சார்... ஆனா, அங்க பாருங்க! எல்லா வண்டிகளும் எந்தப் பக்கமும் போக முடியாம திணறிப் போயி நிக்குது... செம்ம டிராஃபிக்! முதல்ல அந்த டிராஃபிக்கைக் கவனிச்சு கிளியர் பண்ணுங்க! செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு மத்த எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்குறதே உங்களுக்கு வேலையாப்போயிடுச்சு!

வ்...வட்டாஹ்...?

- எழுத்ததிகாரன்

Message reputation : 100% (12 votes)
Permit Member•••2
avatar
Kavitha Banu
21/9/2012, 5:55 pm
சரியான பாடம் புகுட்டும் கதை. என்னைக்காவது டிராப்பிக்கல மாட்டிக்கப் போறீங்க அந்தப்பார்வை... ஜாக்கிரதை!

Message reputation : 100% (3 votes)
நடத்துனர்•••3
avatar
Sekaran Mathan
10/11/2012, 1:10 am
Kavitha Kutty wrote:சரியான பாடம் புகுட்டும் கதை. என்னைக்காவது டிராப்பிக்கல மாட்டிக்கப் போறீங்க அந்தப்பார்வை... ஜாக்கிரதை!

அவரு டிராப்பிக்குல மாட்டினபோது நடந்ததுதான் இது!

நடத்துனர்•••4
avatar
Sekaran Mathan
10/11/2012, 1:17 am
அதிகாரன் wrote:

"எல்லாத்துக்கும் ரெடியா ஒரு பதிலோ, கேள்வியோ வச்சிருக்கியே எப்படிடா?"

"எழுத்ததிகாரன்'னா சும்மாவா?"

"ஏடாம்பு பேசுறவன் எல்லாம் எழுத்ததிகாரனா ஆகிட முடியுமா?"

"எது சார் ஏடாம்பு?... நான் ஏடாம்பு பேசுறேனா? சரி, இதுக்கு நீங்களே பதில் சொல்லுங்க... இப்போ உதாரணமா 5 வருஷம்-னு லைசென்சு போட்டுக் குடுக்குறீங்க... ஆனா, அஞ்சு வருசத்துக்கு அப்பறம் அதை ரினியூவல் பண்ணாம ஒட்டுனா லபக்குன்னு புடிச்சி பெயின் போடுறீங்களே... அஞ்சு வருஷம் வண்டி ஒட்டுனவனுக்கு டிரைவிங்-ல எக்ஸ்பீரியன்ஸ் வருமா? இல்ல டிரைவிங் மறந்து போயிடுமா? எதுக்காக பெயின் போடுறீங்க?

"............................"

"சொல்லுங்க சார்? எதுக்காக பெயின் போடுறீங்க?... அப்புறம் எதுக்காக ரினியூவல் பண்ணச் சொல்றீங்க?..."

"................................"

"வண்டி ஓட்டத்தெரியும்னு காட்டத்தானே லைசென்சு எடுக்க சொல்றீங்க? அதான் ஓட்டத்தெரியுதுன்னு நீங்க லைசென்சு கொடுத்துட்டீங்களே.... அப்பறம் எதுக்கு அதை ரினியூவல் பண்ணனும்?.... அடிக்கடி மறந்து போறதுக்கு நாங்கல்லாம் என்ன கஜினி சூர்யாவா?... சினிமா பாத்துக் கெட்டுப் போறது நாங்க இல்ல சார், நீங்க தான்!"

"..........................."

"பணத்தை நாங்கல்லாம் உழைச்சு சம்பாதிக்கிறோம் சார்!... நீங்க ஈசியா சம்பாதிக்கிறமாதறியே
எங்களையும் நினைச்சி இப்படிப் புடுங்காதீங்க..."

"............................."

"உங்களுக்கு வேணும்னா பணம்ங்கறது லஞ்சமா இருக்கலாம்... ஆனா, எங்களுக்கு அது ரத்தம் சார்!... நீங்க இப்படி பல வழியிலயும் பணத்தைப் புடுங்குறது எங்களோட ரத்தத்தை உரிஞ்சுறதுக்கு சமம்!"


எழுத்ததிகாரனுக்காக...
-அந்தப்பார்வை!

Message reputation : 100% (5 votes)
•••5
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

டூ வீலர்! (செம டிராப்பிக்)

From எழுத்ததிகாரன்

Topic ID: 540

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...