எதிர்ப்பார்க்காத பல விஷயங்கள் ‘விஸ்வரூபம்’ விவகாரத்தில் நடந்து வருவதில் ரொம்பவே அப்செட்டில் இருக்கும் கமல். ரிலீஸ் தேதியை தள்ளிவைத்திருக்கிறார். அந்த தேதியை பலருடன் கலந்து முடிவு செய்து நான்தான் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
:-
அதன்பிறகு 4 நாட்கள் கழித்து டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்துகொள்ள அனுமதி கிடைத்து விட்டதாக தகவல்கள் வந்திருக்கிறது. ஆனால் ஒரே நாளில் தியேட்டரிலும், டி.டிஹெச்சிலும் ரிலீஸ் செய்ய கமல் முயற்சி செய்துகொண்டிருப்பதாய் தெரிகிறது.
:-
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து இதுவரை நடந்த விஷயங்கள் எல்லாமே இப்போது வெளியில் வர ஆரம்பித்திருக்கிறது. அதில் தியேட்டர் ஓனர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக டி.டி.ஹெச்சில் படத்தை ரிலீஸ் செய்தால் நாங்கள் கண்டிப்பாக எங்கள் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்ற முடிவில் கடைசிவரை உறுதியாக இருந்ததாக தெரிகிறது.
:-
இந்த விவகாரம் குறித்தான முதற்கட்ட பேச்சுவார்த்தைகடந்த 6-ஆம் தேதி ஒரு கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனத்தின் செயலதிகாரி மற்றும் தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் சார்பில் ஒரு முக்கியமான ஒருவரும் கமல் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார்களாம்.
:-
இந்த சந்திப்பில் கமல் தரப்பில் நாங்கள் முதலில் 10-ஆம் தேதி காலையில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து விடுகிறோம் என்றும் அதன் பிறகு அன்று இரவு திட்டமிட்டபடி 9:30 மணிக்கு டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்கிறோம் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இதை தியேட்டர் ஓனர்களில் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் அந்தப்பேச்சுவார்த்தை அப்படியே நின்று விட்டது.
:-
பிறகு மறுநாள் காலை 7-ஆம் தேதி தியேட்டர் அதிபர்களில் சார்பில் சென்னையில் மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களை நிர்வகித்துவரும் இரண்டு தியேட்டர் அதிபர்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு மீண்டும் கமல் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
:-
ஆனால் அதில் ஒரு தியேட்டர்அதிபர் “ நீங்கள் டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்று உத்திரவாதம் தந்தால் பேச்சு வார்த்தைக்கு வருகிறேன் இல்லையென்றால் வேண்டாம்” என்று கூறிவிட்டார். உடனே கமல் தரப்பில் நீங்கள் சொன்னது போலவே செய்கிறோம் என்று கூறியதால் அவரும் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்.
:-
இந்த சந்திப்பு அண்ணாசாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மாலை 7 மணிக்கு தொடங்கியிருக்கிறது. அந்தப்பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும்போது ‘விஸ்வரூபம்’ படத்தின் ப்ரிண்டுகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது, க்யூப்.பி.ஹெ.சி.டி,யூ.எப்.ஓ என தியேட்டர்களுக்கு நேரடியாக படத்தை லோடு செய்வது, டி.டி.ஹெச்சில் ஒளிபரப்ப ஆயத்தமாவது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் நிறுத்தியிருக்கிறார்கள்.
:-
தொடர்ந்து நள்ளிரவு வரை நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முதலில் ‘விஸ்வரூபம்’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்றும், பிறகு ஒருவாரம் கழித்து டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
:-
மறுநாள் கமலை நேரடியாக சந்தித்து இந்த உடன்பாடு எட்டப்பட்டு ஒருவழியாக கமலும் முதலில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஒப்புகொண்டிருக்கிறார். அதன்படி கமல் சார்பில் எல்லா டி.டி.ஹெச்சுகளுக்கும் முறைப்படி படத்தை ஒளிபரப்புவது குறித்தான வியாபார ஒப்பந்தத்தை கேன்சல் செய்யும் மெயில் அனுப்பப்பட்டிருக்கிறது.
:-
இதில் ஏர்டெல் தவிர மற்ற 5 டி.டி.ஹெச் ஆபரேட்டர்களும் கமலின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டதாகவும் இந்த டி.டி.ஹெச் ஒளிபரப்பில் முதல் ஆளாக கமலிடம் பேச வந்த ஏர்டெல் மட்டும் உடன்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
:-
மேலும் இந்த வியாபார ஒப்பந்தத்தை நீங்கள் மீறினால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டதாம்.
ஆனால் கமல் “இதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று சொல்லிவிட்டாராம்.
:-
இதற்கிடையே தான் நேற்று இரவில் கமலின் அலுவலகத்தில் தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் சார்பில் பன்னீர்செல்வம் மற்றும் தயாரிப்பாளர் கேயார் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
:-
அதில் “முதலில் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள், ஒருவாரம் கழித்து டி.டி.ஹெச்சில் படத்தை ஒளிபரப்பு செய்து கொள்ளுங்கள் என்று தியேட்டர் ஓனர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் இதில் ஏர்டெல் தரப்பில் அட்லிஸ்ட் ஒரு 4 நாட்கள் கழித்தாவது டி.டி.ஹெச்சில் படத்தை ஒளிபரப்பிக்கொள்ள அனுமதி பெற்றுத்தாருங்கள் நாங்கள் இந்தப்பிரச்சனையைசமாளித்துகொள்வோம் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
:-
கமலும் அதன்படி தனது இக்கட்டான சூழ்நிலையை தியேட்டர் முதலாளிகளிடம் விளக்கிச் சொல்ல இப்போது தியேட்டர் ஓனர்கள் எல்லோரும் கமலுக்கு உதவி செய்யும் விதமாக விஸ்வரூபம் படத்தை மட்டும் 4 நாட்களுக்குப்பிறகு டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பிக் கொள்ள ஸ்பெஷல் அனுமதி கொடுக்கலாம் என்றும், இனி வரும் வேறு எந்தப்படத்துக்கும் இந்த அனுமதி இல்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து தமிழ்நாட்டிலுள்ள மற்ற எல்லா நிர்வாகிகளுடன் சேர்ந்து இறுதி முடிவு எடுக்க இன்று மாலை தியேட்டர் நிர்வாகிகளின் சார்பில் ஒரு சந்திப்பு நடைபெற இருக்கிறதாம்.
ஆக தியேட்டரில் ரிலீஸாகும் முன்பு டி.டி.ஹெச்சில் படம் ரிலீஸ்இல்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.
:-
Soundcameraaction.com
:-
அதன்பிறகு 4 நாட்கள் கழித்து டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்துகொள்ள அனுமதி கிடைத்து விட்டதாக தகவல்கள் வந்திருக்கிறது. ஆனால் ஒரே நாளில் தியேட்டரிலும், டி.டிஹெச்சிலும் ரிலீஸ் செய்ய கமல் முயற்சி செய்துகொண்டிருப்பதாய் தெரிகிறது.
:-
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து இதுவரை நடந்த விஷயங்கள் எல்லாமே இப்போது வெளியில் வர ஆரம்பித்திருக்கிறது. அதில் தியேட்டர் ஓனர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக டி.டி.ஹெச்சில் படத்தை ரிலீஸ் செய்தால் நாங்கள் கண்டிப்பாக எங்கள் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்ற முடிவில் கடைசிவரை உறுதியாக இருந்ததாக தெரிகிறது.
:-
இந்த விவகாரம் குறித்தான முதற்கட்ட பேச்சுவார்த்தைகடந்த 6-ஆம் தேதி ஒரு கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனத்தின் செயலதிகாரி மற்றும் தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் சார்பில் ஒரு முக்கியமான ஒருவரும் கமல் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார்களாம்.
:-
இந்த சந்திப்பில் கமல் தரப்பில் நாங்கள் முதலில் 10-ஆம் தேதி காலையில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து விடுகிறோம் என்றும் அதன் பிறகு அன்று இரவு திட்டமிட்டபடி 9:30 மணிக்கு டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்கிறோம் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இதை தியேட்டர் ஓனர்களில் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் அந்தப்பேச்சுவார்த்தை அப்படியே நின்று விட்டது.
:-
பிறகு மறுநாள் காலை 7-ஆம் தேதி தியேட்டர் அதிபர்களில் சார்பில் சென்னையில் மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களை நிர்வகித்துவரும் இரண்டு தியேட்டர் அதிபர்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு மீண்டும் கமல் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
:-
ஆனால் அதில் ஒரு தியேட்டர்அதிபர் “ நீங்கள் டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்று உத்திரவாதம் தந்தால் பேச்சு வார்த்தைக்கு வருகிறேன் இல்லையென்றால் வேண்டாம்” என்று கூறிவிட்டார். உடனே கமல் தரப்பில் நீங்கள் சொன்னது போலவே செய்கிறோம் என்று கூறியதால் அவரும் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்.
:-
இந்த சந்திப்பு அண்ணாசாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மாலை 7 மணிக்கு தொடங்கியிருக்கிறது. அந்தப்பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும்போது ‘விஸ்வரூபம்’ படத்தின் ப்ரிண்டுகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது, க்யூப்.பி.ஹெ.சி.டி,யூ.எப்.ஓ என தியேட்டர்களுக்கு நேரடியாக படத்தை லோடு செய்வது, டி.டி.ஹெச்சில் ஒளிபரப்ப ஆயத்தமாவது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் நிறுத்தியிருக்கிறார்கள்.
:-
தொடர்ந்து நள்ளிரவு வரை நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முதலில் ‘விஸ்வரூபம்’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்றும், பிறகு ஒருவாரம் கழித்து டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
:-
மறுநாள் கமலை நேரடியாக சந்தித்து இந்த உடன்பாடு எட்டப்பட்டு ஒருவழியாக கமலும் முதலில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஒப்புகொண்டிருக்கிறார். அதன்படி கமல் சார்பில் எல்லா டி.டி.ஹெச்சுகளுக்கும் முறைப்படி படத்தை ஒளிபரப்புவது குறித்தான வியாபார ஒப்பந்தத்தை கேன்சல் செய்யும் மெயில் அனுப்பப்பட்டிருக்கிறது.
:-
இதில் ஏர்டெல் தவிர மற்ற 5 டி.டி.ஹெச் ஆபரேட்டர்களும் கமலின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டதாகவும் இந்த டி.டி.ஹெச் ஒளிபரப்பில் முதல் ஆளாக கமலிடம் பேச வந்த ஏர்டெல் மட்டும் உடன்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
:-
மேலும் இந்த வியாபார ஒப்பந்தத்தை நீங்கள் மீறினால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டதாம்.
ஆனால் கமல் “இதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று சொல்லிவிட்டாராம்.
:-
இதற்கிடையே தான் நேற்று இரவில் கமலின் அலுவலகத்தில் தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் சார்பில் பன்னீர்செல்வம் மற்றும் தயாரிப்பாளர் கேயார் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
:-
அதில் “முதலில் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள், ஒருவாரம் கழித்து டி.டி.ஹெச்சில் படத்தை ஒளிபரப்பு செய்து கொள்ளுங்கள் என்று தியேட்டர் ஓனர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் இதில் ஏர்டெல் தரப்பில் அட்லிஸ்ட் ஒரு 4 நாட்கள் கழித்தாவது டி.டி.ஹெச்சில் படத்தை ஒளிபரப்பிக்கொள்ள அனுமதி பெற்றுத்தாருங்கள் நாங்கள் இந்தப்பிரச்சனையைசமாளித்துகொள்வோம் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
:-
கமலும் அதன்படி தனது இக்கட்டான சூழ்நிலையை தியேட்டர் முதலாளிகளிடம் விளக்கிச் சொல்ல இப்போது தியேட்டர் ஓனர்கள் எல்லோரும் கமலுக்கு உதவி செய்யும் விதமாக விஸ்வரூபம் படத்தை மட்டும் 4 நாட்களுக்குப்பிறகு டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பிக் கொள்ள ஸ்பெஷல் அனுமதி கொடுக்கலாம் என்றும், இனி வரும் வேறு எந்தப்படத்துக்கும் இந்த அனுமதி இல்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து தமிழ்நாட்டிலுள்ள மற்ற எல்லா நிர்வாகிகளுடன் சேர்ந்து இறுதி முடிவு எடுக்க இன்று மாலை தியேட்டர் நிர்வாகிகளின் சார்பில் ஒரு சந்திப்பு நடைபெற இருக்கிறதாம்.
ஆக தியேட்டரில் ரிலீஸாகும் முன்பு டி.டி.ஹெச்சில் படம் ரிலீஸ்இல்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.
:-
Soundcameraaction.com