டெல்லி: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்..இருப்பினும் பிற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரை நடத்தக் கூடாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் மகாராஜா ஹரிசிங்கின் மகன் கரண்சிங். மகாராஜா ஹரிசிங்தான் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைத்தவர். அதைத் தொடர்ந்துதான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370வது அரசியல் சாசனப் பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்த பிரிவின்படி ஜம்மு காஷ்மீரின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் கரண்சிங். தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் கரண்சிங், 370வது பிரிவு நீக்கம் தொடர்பான சர்ச்சை குறித்து கூறியுள்ளதாவது:
அரசியல் சாசனப் பிரிவு 370வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் கவலை அளிக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சிக்கலாக்கிவிடக் கூடாது. இந்த விவகாரத்தை கவனமாகத்தான் கையாள வேண்டும்.
பாகிஸ்தான் ஆதரவு பழங்குடிகளின் படையெடுப்பைத் தொடர்ந்துதான் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் என் தந்தை மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார். அதேபோல் பிற சமஸ்தானங்களும் கூட இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்தன.
அதே நேரத்தில் பிற சமஸ்தானங்கள் மாநிலங்களாக இணைந்தது போல் இல்லாமல் ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 1957ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசனத்தில் நான் தான் கையெழுத்திட்டேன். அது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது உறுதியான ஒன்றுதான். அதே நேரத்தில் பிற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரை நடத்தலாம் என்பதும் அர்த்தம் அல்ல.
உலகின் பல பகுதிகளில் இப்படி சிறப்பு அந்தஸ்து பெற்ற பிரதேசங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஹாங்காங் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பினும் அதற்கென சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் மகாராஜா ஹரிசிங்கின் மகன் கரண்சிங். மகாராஜா ஹரிசிங்தான் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைத்தவர். அதைத் தொடர்ந்துதான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370வது அரசியல் சாசனப் பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்த பிரிவின்படி ஜம்மு காஷ்மீரின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் கரண்சிங். தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் கரண்சிங், 370வது பிரிவு நீக்கம் தொடர்பான சர்ச்சை குறித்து கூறியுள்ளதாவது:
அரசியல் சாசனப் பிரிவு 370வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் கவலை அளிக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சிக்கலாக்கிவிடக் கூடாது. இந்த விவகாரத்தை கவனமாகத்தான் கையாள வேண்டும்.
பாகிஸ்தான் ஆதரவு பழங்குடிகளின் படையெடுப்பைத் தொடர்ந்துதான் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் என் தந்தை மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார். அதேபோல் பிற சமஸ்தானங்களும் கூட இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்தன.
அதே நேரத்தில் பிற சமஸ்தானங்கள் மாநிலங்களாக இணைந்தது போல் இல்லாமல் ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 1957ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசனத்தில் நான் தான் கையெழுத்திட்டேன். அது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது உறுதியான ஒன்றுதான். அதே நேரத்தில் பிற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரை நடத்தலாம் என்பதும் அர்த்தம் அல்ல.
உலகின் பல பகுதிகளில் இப்படி சிறப்பு அந்தஸ்து பெற்ற பிரதேசங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஹாங்காங் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பினும் அதற்கென சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.