மும்பை: பெண்ணிடம் அத்துமீற முயன்ற தொழிலதிபரை தட்டிக்கேட்ட பப் மேனேஜரை சுட்டுவிட்டு அத்தொழிலதிபர் தப்பியோடிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் செயல்பட்டுவரும் பப் ஒன்றிற்கு தொழிலதிபர் விக்ரம் குமார் கரோடி என்பவர் இரவு சரக்கடித்துவிட்டு ஆடிப்பாட சென்றுள்ளார். அப்போது அங்கு வேலைபார்க்கும் இளம் பெண்ணிடம் விக்ரம் குமார் குசும்பு செய்ததாக கூறப்படுகிறது. இதை அப்பெண் எதிர்த்தார். இருப்பினும்விடாமல் அந்த பெண்ணையே விக்ரம் குமார் நோண்டிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து விக்ரம் குமாரை, அப்பெண் திட்டியுள்ளார். இதை அலட்சியப்படுத்திய விக்ரம்குமார், பப்புக்கு வேலைக்கு வந்துவிட்டு சகஜமாக இருக்காவிட்டால் எப்படி என்ற ரீதியில் பேசியுள்ளார். இதைப்பார்த்த பப் மேனேஜர் ஜிதேந்திரா ஷா, இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் நிலைமை மோசமானதால், விக்ரம்குமாரை வெளியே போகுமாறு ஜிதேந்தர் ஷா எச்சரித்துள்ளார்.
ஆத்திரமடைந்த விக்ரம்குமார், தான் கொண்டு வந்திருந்த கைத்துப்பாக்கியால் மேனேஜரை நோக்கி சுட்டார். இதில் மேனேஜர் காலில் குண்டு பாய்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியைடந்த பப் ஊழியர்கள் விக்ரம்குமாரை மடக்கிப்பிடித்தனர். மேலும், ஜிரேந்திரா ஷாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணிடம் தவறாக நடந்தது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தொழிலதிபரை கைது செய்துள்ளனர்.
மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் செயல்பட்டுவரும் பப் ஒன்றிற்கு தொழிலதிபர் விக்ரம் குமார் கரோடி என்பவர் இரவு சரக்கடித்துவிட்டு ஆடிப்பாட சென்றுள்ளார். அப்போது அங்கு வேலைபார்க்கும் இளம் பெண்ணிடம் விக்ரம் குமார் குசும்பு செய்ததாக கூறப்படுகிறது. இதை அப்பெண் எதிர்த்தார். இருப்பினும்விடாமல் அந்த பெண்ணையே விக்ரம் குமார் நோண்டிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து விக்ரம் குமாரை, அப்பெண் திட்டியுள்ளார். இதை அலட்சியப்படுத்திய விக்ரம்குமார், பப்புக்கு வேலைக்கு வந்துவிட்டு சகஜமாக இருக்காவிட்டால் எப்படி என்ற ரீதியில் பேசியுள்ளார். இதைப்பார்த்த பப் மேனேஜர் ஜிதேந்திரா ஷா, இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் நிலைமை மோசமானதால், விக்ரம்குமாரை வெளியே போகுமாறு ஜிதேந்தர் ஷா எச்சரித்துள்ளார்.
ஆத்திரமடைந்த விக்ரம்குமார், தான் கொண்டு வந்திருந்த கைத்துப்பாக்கியால் மேனேஜரை நோக்கி சுட்டார். இதில் மேனேஜர் காலில் குண்டு பாய்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியைடந்த பப் ஊழியர்கள் விக்ரம்குமாரை மடக்கிப்பிடித்தனர். மேலும், ஜிரேந்திரா ஷாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணிடம் தவறாக நடந்தது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தொழிலதிபரை கைது செய்துள்ளனர்.