சென்னை: திமுகவில் களை எடுப்பு கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக 33 நிர்வாகிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டாலும் மேலும் ஒரு பட்டியல் விரைவில் வெளியாகும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து கட்சியை சீரமைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 150 பக்க பரிந்துரையை அளித்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டன. திமுகவில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிக் கொண்டிருக்கும் மாவட்ட செயலர்களுக்கு இது பயங்கர அதிர்ச்சியைக் கொடுத்தது.
அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்ட செயலராக இருந்த பழனி மாணிக்கம், தருமபுரி மாவட்ட பெருந்தலைகளான முல்லைவேந்தன், இன்பசேகரன், சேலம் பாப்பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 33 நிர்வாகிகளை அதிரடியாக திமுக தலைமை சஸ்பென்ட் செய்தது.
அத்துடன் அழகிரி அணிக்குப் போன கே.பி. ராமலிங்கம் எம்.பி., விருதுநகர் போஸ் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டனர்.
அதே நேரத்தில் இந்த பட்டியலே பாரபட்சமானது என்ற புகாரும் எழத் தொடங்கியுள்ளது. தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் ஸ்டாலின் எதிர் அணியினர்தான்; ஸ்டாலின் அணியைச் சேர்ந்த ஒருவரைக் கூட ஏன் நீக்கவில்லை என்பது எதிர்ப்பாளர்களின் கேள்வி.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் ஏன் இந்த களையெடுப்பு நடைபெறவில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
மேலும் வேலூரில் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எதிராக பகிரங்கமாக வேலை பார்த்த திமுக துணைப் பொதுச்செயலர் துரைமுருகன் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் கிளைக் கழகங்கள் வரையிலுமே களை எடுப்பு நடைபெற்றால்தான் கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு கிலி ஏற்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருக்கும் ஸ்டாலின் ஆதரவு 'தலைகள்" சிலரை உள்ளடக்கிய இன்னொரு சஸ்பென்ட் பட்டியலும் விரைவில் வெளிவர இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து கட்சியை சீரமைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 150 பக்க பரிந்துரையை அளித்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டன. திமுகவில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிக் கொண்டிருக்கும் மாவட்ட செயலர்களுக்கு இது பயங்கர அதிர்ச்சியைக் கொடுத்தது.
அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்ட செயலராக இருந்த பழனி மாணிக்கம், தருமபுரி மாவட்ட பெருந்தலைகளான முல்லைவேந்தன், இன்பசேகரன், சேலம் பாப்பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 33 நிர்வாகிகளை அதிரடியாக திமுக தலைமை சஸ்பென்ட் செய்தது.
அத்துடன் அழகிரி அணிக்குப் போன கே.பி. ராமலிங்கம் எம்.பி., விருதுநகர் போஸ் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டனர்.
அதே நேரத்தில் இந்த பட்டியலே பாரபட்சமானது என்ற புகாரும் எழத் தொடங்கியுள்ளது. தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் ஸ்டாலின் எதிர் அணியினர்தான்; ஸ்டாலின் அணியைச் சேர்ந்த ஒருவரைக் கூட ஏன் நீக்கவில்லை என்பது எதிர்ப்பாளர்களின் கேள்வி.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் ஏன் இந்த களையெடுப்பு நடைபெறவில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
மேலும் வேலூரில் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எதிராக பகிரங்கமாக வேலை பார்த்த திமுக துணைப் பொதுச்செயலர் துரைமுருகன் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் கிளைக் கழகங்கள் வரையிலுமே களை எடுப்பு நடைபெற்றால்தான் கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு கிலி ஏற்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருக்கும் ஸ்டாலின் ஆதரவு 'தலைகள்" சிலரை உள்ளடக்கிய இன்னொரு சஸ்பென்ட் பட்டியலும் விரைவில் வெளிவர இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.