புதுடில்லி: ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழுவினர், நேற்று முதல், டில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர். நேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பிரணாப் முகர்ஜி மீதும், ஹசாரே குழுவினர், குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
ஊழலை ஒழிக்கும் வகையில், பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், "ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, 15 மத்திய அமைச்சர்களுக்கு எதிராக, விசாரணை நடத்துவதற்காக, சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். எம்.பி.,க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க, விரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும்' என்ற, கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகிய மூன்று பேரும், டில்லி ஜந்தர் மந்தரில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவக்கினர்.
தர்ணா போராட்டம்: முன்னதாக, இவர்கள் மூவரும், அன்னா ஹசாரேயுடன், மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று, மரியாதை செலுத்தினர். உண்ணாவிரதம் இருக்கும் மூன்று பேருடன், நேற்று காலை மேடைக்கு வந்த அன்னா ஹசாரே, "இன்குலாப் ஜிந்தாபாத்; பாரத் மாதா கி ஜே' என, உரக்க கோஷமிட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்தவர்களும் கோஷமிட்டனர். ஹசாரே, உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல், தர்ணா போராட்டத்தில் மட்டும் பங்கேற்றார். "எங்களின் கோரிக்கைகளை, நான்கு நாட்களில் நிறைவேற்றாவிட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தில் நானும் பங்கேற்பேன்' என, ஹசாரே திட்டவட்டமாகக் கூறினார்.
பிரணாப் மீது குற்றச்சாட்டு: ஹசாரே குழுவினரால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட, பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சர்களின் புகைப்படங்கள், உண்ணாவிரத மேடையில் வைக்கப்பட்டிருந்தன. பிரணாப் முகர்ஜியின் படம், துணியால் மறைக்கப்பட்டிருந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""பிரணாப் முகர்ஜி மீது, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமருக்கும், காங்., தலைவர் சோனியாவுக்கும், கடிதங்கள் எழுதியிருந்தோம். ஆனாலும், இன்று (நேற்று) அவர், ஜனாதிபதி என்ற, மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், அவர் மீது, இனி எந்தவிதமான விசார ணையும் கோர முடியாத, சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கடுமையாகக் கண்டிக்கிறோம்,'' என்றார்.
அமளி: உண்ணாவிரதம் துவங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன், காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் (என்.எஸ்.யு.ஐ.,) சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், அங்கு வந்தனர். அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹசாரே ஆதரவாளர்களும், கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, மாணவர் அமைப்பினர், அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதுகுறித்து ஹசாரே ஆதரவாளர்கள், குற்றச்சாட்டுகளை கூறினர்.
மறுப்பு: இந்த விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ""காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது, ஹசாரே குழுவினர், அடிப்படை ஆதாரமற்ற புகாரை தெரிவித்துள்ளனர். இது போன்ற குற்றச்சாட்டை கூறுவதன் மூலம், மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி, ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளது. வன்முறையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்,'' என்றார்.
ஊழலை ஒழிக்கும் வகையில், பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், "ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, 15 மத்திய அமைச்சர்களுக்கு எதிராக, விசாரணை நடத்துவதற்காக, சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். எம்.பி.,க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க, விரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும்' என்ற, கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகிய மூன்று பேரும், டில்லி ஜந்தர் மந்தரில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவக்கினர்.
தர்ணா போராட்டம்: முன்னதாக, இவர்கள் மூவரும், அன்னா ஹசாரேயுடன், மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று, மரியாதை செலுத்தினர். உண்ணாவிரதம் இருக்கும் மூன்று பேருடன், நேற்று காலை மேடைக்கு வந்த அன்னா ஹசாரே, "இன்குலாப் ஜிந்தாபாத்; பாரத் மாதா கி ஜே' என, உரக்க கோஷமிட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்தவர்களும் கோஷமிட்டனர். ஹசாரே, உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல், தர்ணா போராட்டத்தில் மட்டும் பங்கேற்றார். "எங்களின் கோரிக்கைகளை, நான்கு நாட்களில் நிறைவேற்றாவிட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தில் நானும் பங்கேற்பேன்' என, ஹசாரே திட்டவட்டமாகக் கூறினார்.
பிரணாப் மீது குற்றச்சாட்டு: ஹசாரே குழுவினரால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட, பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சர்களின் புகைப்படங்கள், உண்ணாவிரத மேடையில் வைக்கப்பட்டிருந்தன. பிரணாப் முகர்ஜியின் படம், துணியால் மறைக்கப்பட்டிருந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""பிரணாப் முகர்ஜி மீது, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமருக்கும், காங்., தலைவர் சோனியாவுக்கும், கடிதங்கள் எழுதியிருந்தோம். ஆனாலும், இன்று (நேற்று) அவர், ஜனாதிபதி என்ற, மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், அவர் மீது, இனி எந்தவிதமான விசார ணையும் கோர முடியாத, சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கடுமையாகக் கண்டிக்கிறோம்,'' என்றார்.
அமளி: உண்ணாவிரதம் துவங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன், காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் (என்.எஸ்.யு.ஐ.,) சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், அங்கு வந்தனர். அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹசாரே ஆதரவாளர்களும், கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, மாணவர் அமைப்பினர், அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதுகுறித்து ஹசாரே ஆதரவாளர்கள், குற்றச்சாட்டுகளை கூறினர்.
மறுப்பு: இந்த விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ""காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது, ஹசாரே குழுவினர், அடிப்படை ஆதாரமற்ற புகாரை தெரிவித்துள்ளனர். இது போன்ற குற்றச்சாட்டை கூறுவதன் மூலம், மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி, ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளது. வன்முறையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்,'' என்றார்.