அந்தவனத்துக்கே ஒரு
நந்தவனப்பெருமையுண்டு..
குரங்குகளும் கோகிலங்களும்
கூடிக்களித்திருந்த வனம்..
சொந்தங்கள் எல்லாம் கூடிப்பரிமளித்து
வந்தவரை எல்லாம் வாழவைக்கும் வனம்..
அப்படியொருவனத்தில்
அடர்ந்ததோர் ஆலமரத்தில்
ஆலையில்லாஊருக்கு இலுப்பையாயும்
சேலையில்லா மகளுக்கு தாவணியாயும்
இன்னிசை விருந்தளிக்க
பண்ணுடன் இசைத்தது
ஒரு கரகரப்பிரியைத் தவளை..!
விடியலில் தொடங்கி இரவின்
முடியல் வரை அதன் இசைப்
படையல் தொடர்ந்தது..
ஆனந்த ராகம் இசைப்பதாய் எண்ணி
அடிக்குரலில் துடிக்கவைத்தது..
மற்ற உயிரினங்களின் உயிர்கள்
ஊசலாடின என்றாலும்
அடங்கா மருமகளை அடக்கவியலா
அத்தையவளைப்போலவே
அத்தவளையை அடக்க
எத்தகு வழியுமின்றி
மொத்தமாய் விழித்தன..
அமைதியானவரின் அடக்கம் கண்டு
ஆட்டம் போடும்
குடிகாரனைப்போலவே
உற்சாகம் பெற்றே
வனங்களின் இனங்களை
வதைத்தது அத்தவளை..!!
-கலைவேந்தன்
தொடரும்...
நந்தவனப்பெருமையுண்டு..
குரங்குகளும் கோகிலங்களும்
கூடிக்களித்திருந்த வனம்..
சொந்தங்கள் எல்லாம் கூடிப்பரிமளித்து
வந்தவரை எல்லாம் வாழவைக்கும் வனம்..
அப்படியொருவனத்தில்
அடர்ந்ததோர் ஆலமரத்தில்
ஆலையில்லாஊருக்கு இலுப்பையாயும்
சேலையில்லா மகளுக்கு தாவணியாயும்
இன்னிசை விருந்தளிக்க
பண்ணுடன் இசைத்தது
ஒரு கரகரப்பிரியைத் தவளை..!
விடியலில் தொடங்கி இரவின்
முடியல் வரை அதன் இசைப்
படையல் தொடர்ந்தது..
ஆனந்த ராகம் இசைப்பதாய் எண்ணி
அடிக்குரலில் துடிக்கவைத்தது..
மற்ற உயிரினங்களின் உயிர்கள்
ஊசலாடின என்றாலும்
அடங்கா மருமகளை அடக்கவியலா
அத்தையவளைப்போலவே
அத்தவளையை அடக்க
எத்தகு வழியுமின்றி
மொத்தமாய் விழித்தன..
அமைதியானவரின் அடக்கம் கண்டு
ஆட்டம் போடும்
குடிகாரனைப்போலவே
உற்சாகம் பெற்றே
வனங்களின் இனங்களை
வதைத்தது அத்தவளை..!!
-கலைவேந்தன்
தொடரும்...