Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
10/11/2016, 2:18 am
5 வருடங்களுக்குப் பிறகு மளிகைக் கடையில் ஒரு குண்டக்க மண்டக்க (கற்பனை)

:: எல்லா பொருட்களுக்கும் சேர்த்து எவ்வளவு ஆச்சு?

: மொத்தம் 450 ரூபாய் ஆச்சு.

:: இந்தா 500 ரூபாய். மீதம் 50 ரூபாய் குடு. (இது புதிய 500 ரூபாய்)

: இந்த நோட்டு கிழிஞ்சிருக்குபா. வேற நோட்டு குடு.

:: என்கிட்டே ரெண்டு 500 ரூபாய் நோட்டு இருக்கு. அதுல எது வேணும்?

: இது என்னப்பா கேள்வி? ரெண்டும் 500 ரூபாய் நோட்டுதானே?... கிழியாம இருந்தா எதையாவது குடு. எனக்கு வேற நோட்டு வேணும் அவ்வளவுதான்.

:: சரி இந்தா 500 ரூபாய்... மீதம் 50 ரூபாய் குடு. (இது பழைய 500 ரூபாய் நோட்டு)

: யோவ்!... என்னய்யா இது? வேற 500 ரூபாய் நோட்டைக் குடுக்குறே?...

:: நீதானே வேற நோட்டு கேட்டே.... அதான் குடுத்தேன்....

: வேற நோட்டு கேட்டேன்தான். ஆனா நீ, நோட்டே வேறயா குடுக்குறியே?...

:: வேற நோட்டு கேட்டா, வேற நோட்டுதானே கொடுக்க முடியும்? நான் கிளியராத்தான் இருக்கேன்.. தப்பு உன் பக்கம்தான்! என்னன்னு செக் பண்ணு...

: தம்பி! இது பழைய நோட்டுப்பா. இப்ப இது செல்லாது... வேற நோட்டு குடுப்பா.

:: சரி... ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு இருக்கு வேணுமா?

: என்னாது.... ஆயிரம் ரூபாவும் ரெண்டு இருக்கா?

:: ரெண்டு தனித்தனி ஆயிரம் இல்லையா, ஒரே நோட்டா ரெண்டாயிரம் ரூபாய் இருக்கு. வேணுமா?

: உன்கிட்ட இருக்குப்பா. ஆனா, என்கிட்டே சில்லறை இல்லையே... இன்னைக்கு நீதான் முதல் போனி.

:: சரி, அப்போ அஞ்சாயிரம் ரூபாய் நோட்டு தரவா?

: அஞ்சாயிரம் ரூபாவா?

:: இல்லேன்னா இந்தா பத்தாயிரம் ரூபாய்!

: பத்தாயிரம் ரூபாயா? என்னப்பா கலர் காலரா ரூபாய் நோட்டா நீட்டுற? இதையெல்லா யாருப்பா உன்கிட்ட குடுத்தனுப்புறது?

:: இந்த 500 , 2000 ல்லாம் மோடி கொடுத்தது. இதோ ஜிங்குச்சா! ஜிங்குச்சா!-னு இருக்குற 5,000 , 10,௦௦௦ நோட்டெல்லாம் 'டாடி' கொடுத்தது.

: 'டாடி'ன்னா? உங்க அப்பா வா?

:: கோ டாடி!

: 'கோ டாடி'ன்னா?

:: கூகுள்ல சர்ச் பண்ணி எடுத்தேன்யா...

: ஏன்பா.... கவர்மெண்டு அடிச்ச நோட்டு எதுவுமே உன்கிட்ட இல்லையா?

:: இதெல்லாமே கவர்மெண்டு அடிச்ச நோட்டுதான்... ஆனா இப்ப தடை பண்ணிட்டாங்க.

: தடை பண்ண நோட்டையெல்லாம் வச்சிக்கிட்டு ஏன்பா இப்படி என் கடை வியாபாரத்தை கெடுக்குறே?

:: நாட்டுல என்னென்ன நடந்திருக்குதுன்னு ஒரு PK தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்குத்தான்.

: அது என்ன PK?

:: பொது நாலெட்ஜ்!

: (MIND VOICE) ஆஹா.... இது அவனேதான்! ஜெனரல் நாலேஜ்ங்கறதை, பொது நாலேஜ்ன்னு ஏன் இப்படி இங்கிலீசையும், தமிழையும் கலந்தடிக்கிறேன்னு கேக்கணும்னுதான் தோணுது. ஆனா கேட்டா..... குண்டங்க மண்டக்க நாமளே மாட்டிக்க வேண்டியதுதான். அதனால கேக்க வேண்டாம்....

:: சும்மா கேட்டுத்தான் பாரேன்....

: என்னது?!.... நான் எதுவும் கேக்கலையேபா.

:: இப்போ மனசுக்குள்ள பேசுனியே அதைக் கேளு.

: நான் மனசுக்குள்ள நினைக்கிறது உனக்கு எப்படிப்பா தெரியுது?

:: ஹா.. ஹா.. ஹா... மனசுதான் உன்னோடது. ஆனா, அதுல ஓடுற நினைப்பு எல்லாம் என்னோடது. தட் ஈஸ் மீ!

: இல்லப்பா..., ஒன்னு தமிழ பேசணும், இல்லேன்னா இங்கிலீசுல பேசணும். ஏன் இப்படி கலப்படமா பேசுறேன்னு கேக்க நினைச்சேன். வேற ஒன்னும் இல்ல.

:: நான் கேட்டேனா?

: என்ன நான் கேட்டேனா?

:: உன்கிட்ட நான் கேட்டனா?

: அட என்னப்பா நீ கேட்டே?

:: உதயம் பருப்புன்னு பாக்கெட்டை தயாரிச்சு வச்சுக்கிட்டு, அதுல ரேஷன் பருப்பை கொட்டி விக்கிறியே அதை ஏன் கலப்படம் பண்ணுறேன்னு நான் உன்கிட்ட கேட்டனா?

: (SOLO VOICE) நான் சொல்லல... என் வாயைப் புடுங்கி என் வயித்துலயே அடிக்கிறான் பாருங்க. இவன் அவனேதான்!! போன்ல வந்தான், பத்திரிக்கையில் வந்தான், டிவியில வந்தான், இப்ப நேருலயே வந்துட்டான்...
ஐயா சாமி, நீ பார்த்திபனா இருந்துக்கோ. ஆனா, என்னை வடிவேலா ஆக்கிடாத... பருப்பு மேட்டரெல்லாம் வெளியில சொல்லி என் பொலப்புல நெருப்பு வச்சிடாதப்பா....

:: சரி இப்ப என்ன பண்ணலாம்?

: நீதான் யோசிச்சு வச்சிருப்பியே... சொல்லிட்டு கெளம்பு.

:: என்கிட்டே ரெண்டு 500 ரூபாய் நோட்டு இருக்கு!!

: மறுபடியும் முதல்லேருந்தா?... முடியாதுப்பா...

:: ஏன் இப்படி குறுக்க குறுக்க பேசுற? என்ன சொல்லுறேன்னு முழுசா கேக்க மாட்டியா நீ?

: சரி சொல்லு! இன்னைக்கு என் குடுத்தனம் உன் கூடத்தான்னு  இருக்கு.. நடத்தூ....

:: என்கிட்டே ரெண்டு 500 ரூபாய் நோட்டு இருக்கு!!

: அதான் ஊருக்கே தெரியுமே... அதுல ஒரு செல்லாத 500 ரூபாயும் வச்சிருக்கே. அதை விட்டுட்டு வேற ஏதாவது சொல்லேம்பா?...

:: ஆங்... அந்த 500 ரூபாய் செல்லாதுன்னு சொன்னியே அந்த பணத்தை இப்ப மாத்தணும்!

: 5 வருஷத்துக்கு முன்னாடி செல்லாதுன்னு கவர்மெண்டு சொன்னப்ப, கவர்மெண்டுகிட்டயே குடுத்து ஈஸியா மாத்தியிருக்கலாமே... அதை விட்டுட்டு இப்ப எப்படி மாத்த முடியும்?

:: இன்னொரு  தடவை செல்லாதுன்னு சொல்லும்போது மாத்திக்கலான்னுதான் மாத்தாம வச்சிருந்தேன்.

: ஏம்பா, லூசா நீ? ஒரு தடவை செல்லாதுன்னு சொன்ன பணத்தை இன்னொரு தடவையும் செல்லாதுன்னு யாராவது சொல்லுவாங்களா?

:: அது இருக்கட்டும்... இந்த நோட்டை ஏன் கவர்மெண்டுகிட்ட மாத்தியிருக்கலாமேன்னு சொன்னே?

: ஏன்னா, இந்த நோட்டு செல்லாதுன்னு கவர்மெண்டுதான் சொன்னிச்சு. யாரு செல்லாதுன்னு சொல்லுறாங்களோ அவங்கதானே மாத்திக் குடுக்கணும்...? அதானே நியாயம்? என்னப்பா வெவரம் புரியாத ஆளா இருக்கே நீ....

:: So, யாரு செல்லாதுன்னு சொல்லுறாங்களோ அவங்ககிட்டத்தான் மாத்திக்கணும். இல்லையா?

: டெபனெட்லி..! டெபனெட்லி..!

:: அப்ப, நீ சொல்லுறதை வச்சி பாக்கும்போது இன்னைக்கு நிலவரப்படி இந்த நோட்டு செல்லாது?

: ஆமா!

:: ஆனா, இன்னொரு தடவை இந்த நோட்டு செல்லாதுன்னு இனிமே யாருமே சொல்ல மாட்டாங்க?

: அது எப்படிப்பா சொல்லுவாங்க? ஏற்கெனவே செல்லாதுன்னு சொன்ன இந்த நோட்டு, இன்னொருதடவை செல்லாதுன்னு எந்த முட்டாப்பயலும் சொல்ல மாட்டான்.

:: சரி, நான் உனக்கு எவ்வளவு குடுக்கணும்?

: 450 ரூபாய்!

:: இந்த 500 ரூபாய் நோட்டை நீ வச்சிக்கிட்டு மீதம் 50 ரூபாய் எனக்கு குடு!

: அட ஏய்... இது செல்லாதுன்னு சொல்லித்தானே இவ்வளவு நேரம் உனக்கு விளக்கி புரிய வச்சேன். மறுபடியும் அதே நோட்டை குடுத்தா அதுக்கு என்ன அர்த்தம்?

:: இந்த நோட்டு செல்லாதுன்னு இன்னொரு தடவை யாருமே சொல்ல மாட்டாங்கன்னு நீதானே சொன்னே? உன்னோட கணக்குப் படி, இதைத்தான் யாருமே செல்லாதுன்னு சொல்ல மாட்டாங்களே... அப்ப நீ இந்த நோட்டை வச்சிக்கலாமே...

: நான்தான் சொல்றேனப்பா... இந்த நோட்டு இப்ப செல்லாது.

:: அப்படின்னா, என்னோட கணக்குப் படி, ஏற்கெனவே செல்லாதுன்னு சொன்ன நோட்டை, இப்ப நீ மறுபடியும் செல்லாதுன்னு சொல்லியிருக்கே. அப்ப உன்கிட்டத்தானே இதை மாத்திக்க முடியும்...?

: ஏய் இரு... இரு.... இப்ப நீ என்ன சொன்னே? திருப்பி சொல்லு.

:: திருப்பி சொல்றதெல்லாம் ஓல்டு ஸ்டைல். இப்ப திருப்பி திருப்பி கேக்குறேன்.... இந்த நோட்டு செல்லுமா? செல்லாதா?. செல்லும்னா சில்லறை குடு, செல்லாதுன்னா வேற நோட்டு குடு!

: ஆஹா... இவ்வளவு நேரம், எனக்குத்தான் நான் ஆப்பு வச்சுக்கிட்டேனா?

:: டெபனெட்லி..!

: ஏம்பா, பணத்தை மாத்தணும்னு இப்படி படுத்துறியே... ஆனா, உன் குணத்தை மாத்த மாட்டேங்கறியே.......!!

:: அது கூடவே பொறந்தது. மாத்த முடியாது! மாத்திக்கவும் மாட்டேன்!

: நீ மாத்த வேண்டாம்ப்பா..... நான் மாரிக்கறேன். இந்தா மீதம் 50 ரூபாய். அந்த பழைய 500 ரூபாவை குடுத்துட்டு முதல்ல நீ கெளம்பு.

:: ஹா! ஹா! ஹா!

: ஏன்பா சிரிக்கிறே?

:: ஹா! ஹா! ஹா!

: அட ஏம்பா சிரிக்கிறே?

:: ஹா! ஹா! ஹா!

: ஹா! ஹா! ஹா ..... ஹா! ஹா! ஹா!

:: நீ ஏன்யா சிரிக்கிறே?

: நீ சிரிக்கிறே.... உன்னை பார்த்து ஊரே சிரிக்குது..... நான் சிரிக்கக் கூடாதா?

:: என்கிட்டே ரெண்டு கேரக்ட்டர் இருக்கு...

: இத பார்! கேரட்டு இருக்கு, பீட்ரூட்டு இருக்குன்னு ஏதாவது பேசினே... மவனே ஜுஸ் போட்டு குடிச்சுடுவேன். மரியாதையா ஓடிப்போயிடு!

** (நல்லா மனசு விட்டு சிரிங்க. சந்தோஷமா இருங்க. மக்களை காப்பாற்றுவதற்கு மோடி இருக்கிறார். மகிழ்ச்சி!)

எழுத்ததிகாரன்.

Message reputation : 95% (19 votes)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு!!

From எழுத்ததிகாரன்

Topic ID: 811

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...