"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது" என்பதைப் போல, "போட்டியின்றி பிரச்சாரமின்றி ஒருவர் முதல்வராகி வருகிறார்". அவர்தான் திரு. ஓ.பன்னீர்செல்வம். அதாவது, ஜெயலலிதாவால் 2 முறை முதல்வர் பொறுப்பில் அமர்த்தப்பட்ட இவர் தற்போது சசிகலாவுக்கு தன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க நினைப்பதன் காரணம் மரியாதையோ, விசுவாசமோ இல்லை, அதிகமுறை முதல்வரானவர் என்ற வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதுதான் நோக்கம்!
ஜெயலலிதாவுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் இவரைத்தான் முதல்வராக்கினார். அதேபோல் சசிகலாவுக்கு பிரச்சினை வந்தாலும் (கண்டிப்பாக வரும்) தன்னையே முதல்வராக நியமிப்பார் என்ற பேராசையில் இருக்கிறார். எனவே OPS அவர்களுக்கு திறமை இருந்தால் தேர்தலை சந்தித்து முதல்வராகலாமே தவிர சந்துல சிந்து பாடும் வேலையெல்லாம் இனிமேல் வேண்டாம்.
ஜெயலலிதாவுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் இவரைத்தான் முதல்வராக்கினார். அதேபோல் சசிகலாவுக்கு பிரச்சினை வந்தாலும் (கண்டிப்பாக வரும்) தன்னையே முதல்வராக நியமிப்பார் என்ற பேராசையில் இருக்கிறார். எனவே OPS அவர்களுக்கு திறமை இருந்தால் தேர்தலை சந்தித்து முதல்வராகலாமே தவிர சந்துல சிந்து பாடும் வேலையெல்லாம் இனிமேல் வேண்டாம்.