மும்பை, ஜூலை. 29 -
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை விமான நிலையத்திற்கு ஒருநாளைக்கு 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் விமான நிலையத்தில் ஒருபகுதியில் இயங்கும் சரக்கு பெட்டகத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது. மளமளவென பரவிய தீ சரக்கு பெட்டகம் முழுமையும் பரவியது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த நான்கு தீயணைப்பு வண்டிகள் அந்த தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றன.
இந்த விபத்து எப்படி நடந்தது என்பதற்கான காரணம் இதுவரை சரியாக தெரியாத நிலையில் மின்கசிவு காரணமாக இது நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை விமான நிலையத்திற்கு ஒருநாளைக்கு 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் விமான நிலையத்தில் ஒருபகுதியில் இயங்கும் சரக்கு பெட்டகத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது. மளமளவென பரவிய தீ சரக்கு பெட்டகம் முழுமையும் பரவியது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த நான்கு தீயணைப்பு வண்டிகள் அந்த தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றன.
இந்த விபத்து எப்படி நடந்தது என்பதற்கான காரணம் இதுவரை சரியாக தெரியாத நிலையில் மின்கசிவு காரணமாக இது நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.