சென்னை: குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் அதிர்ச்சி தெரிவிக்கிறது. குழந்தைகள் பிறந்து, முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதனால், கர்ப்பமடைவதற்கு முன் இருந்த மாதிரியே, வயிறு சுருங்குவது, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவது, அடுத்த கர்ப்பத்திற்கான கால இடைவெளி நீட்டிக்கப்படுவது என, தாய்க்கு பல நன்மைகள் உள்ளன. இதுபோல், நோய் தொற்றுகளை தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தாயுடனான பிணைப்பைக் கூட்டுவது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிப்பது என, குழந்தைக்கு பல நன்மைகள் உள்ளன. ஆனால், குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குனர் ஜெயா கூறியதாவது: இந்தியளவில், முதல் ஆறு மாதம், முழுமையாக தாய்ப்பால் ஊட்டும் விகிதம், தமிழகத்தில், 33.3 சதவீதமாக தான் உள்ளது. இது, தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம், ஒரு மாதத்தில், 1,000க்கு 18; இளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஒரு ஆண்டிற்கு, 24 ஆகவும் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் இந்த இறப்பு விகிதங்கள், முறையே, 39 மற்றும், 57ஆக உள்ளன. பல மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தால், தங்கள் அழகு கெட்டு விடும் என்ற, பெண்களின் பொதுவான மனநிலையே, அவர்கள் குழந்தைகளுக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்காததற்கு முக்கிய காரணம்.
இதுகுறித்து, இளம் தாய்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, எங்கள் மருத்துவமனையில் ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஜெயா கூறினார்.
இதனால், கர்ப்பமடைவதற்கு முன் இருந்த மாதிரியே, வயிறு சுருங்குவது, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவது, அடுத்த கர்ப்பத்திற்கான கால இடைவெளி நீட்டிக்கப்படுவது என, தாய்க்கு பல நன்மைகள் உள்ளன. இதுபோல், நோய் தொற்றுகளை தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தாயுடனான பிணைப்பைக் கூட்டுவது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிப்பது என, குழந்தைக்கு பல நன்மைகள் உள்ளன. ஆனால், குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குனர் ஜெயா கூறியதாவது: இந்தியளவில், முதல் ஆறு மாதம், முழுமையாக தாய்ப்பால் ஊட்டும் விகிதம், தமிழகத்தில், 33.3 சதவீதமாக தான் உள்ளது. இது, தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம், ஒரு மாதத்தில், 1,000க்கு 18; இளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஒரு ஆண்டிற்கு, 24 ஆகவும் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் இந்த இறப்பு விகிதங்கள், முறையே, 39 மற்றும், 57ஆக உள்ளன. பல மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தால், தங்கள் அழகு கெட்டு விடும் என்ற, பெண்களின் பொதுவான மனநிலையே, அவர்கள் குழந்தைகளுக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்காததற்கு முக்கிய காரணம்.
இதுகுறித்து, இளம் தாய்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, எங்கள் மருத்துவமனையில் ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஜெயா கூறினார்.
நன்றி
தினமலர்