பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட டி-கோட்டாம்பட்டி பகுதியில் வசிக்கும் மக்களில் ஒரு பிரிவினருக்கு 20 ஆண்டுகளாக மின் இணைப்பு கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது மின்வாரியம். இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம் என்று கூறுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது டி-கோட்டாம்பட்டி இப்பகுதி நகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும். இங்கு வாழும் பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என்று அனைவருமே அன்றாடம் இருட்டிலேயே தங்களது வாழ்க்கையை நகர்த்த வேண்டியுள்ளது. ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் மின் இணைப்பு கொடுப்பதற்கு மின்வாரிய அதிகாரிகள் முன்வருவதில்லை என்று புகார் சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமுக்கு டி.கோட்டாம்பட்டியிலுள்ள அண்ணாநகர் மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும்; சப் கலெக்டர் குணசேகரனை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அண்ணா நகரில் வசிக்கிறோம். 20 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். வீட்டு மனைப்பட்டா கேட்டு பல முறை மனுச்செய்துவிட்டோம். ஆனால் மனைப்பட்டா எங்களுக்கு இது வரை வழங்கப்படவில்லை. நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்துக்கு நடையாய் நடக்கிறோம். ஆனால் இனியும் எங்களுக்கு மின் இணைப்பு கொடுத்த பாடில்லை. புறம்போக்கு இடத்தில் இருப்பதால் எங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளோ பட்டா வழங்கமுடியாது என்று சொல்கின்றனர். இதனால் எங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. எங்களது குழந்தைகள் பாடம் படிக்க முடிவதில்லை. இரவு நேரத்தில் பாம்பு, பல்லி போன்ற ஊர்வன ஜந்துக்கள் குழந்தைகளையும் பெரியவர்களையும் தீண்டிவிடுகிறது.
இரவு நேரத்தில் மக்கள் பயத்திலேயே உறங்க வேண்டியுள்ளது. மின் இணைப்பு இல்லாததால் எந்த மின்சாதனங்களையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளை கடந்த நிலையில் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதியைக்கூட நாங்கள் பெற முடியாத சூழலில் இருக்கிறோம். அதனால் எங்களுக்கு மிக அத்யாவசிய தேவையான மின் வசதியை எப்படியாவது பெற்றுத்தர வேண்டுமென்று மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறியிருக்கின்றனர். இது குறித்து மனு கொடுக்க வந்த கணபதி கூறுகையில், "" 20 ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு நடையாய் நடந்து வருகிறோம். இது வரை எங்களுக்கு தீர்வு காணப்படவில்லை. இப்பிரச்னையை சாதாரணமாக நினைத்து விட்டுவிட்டால் நாங்கள் போராட்டத்தில் குதிக்கவும் தயங்க மாட்டோம்,'' என்றார்.
பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது டி-கோட்டாம்பட்டி இப்பகுதி நகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும். இங்கு வாழும் பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என்று அனைவருமே அன்றாடம் இருட்டிலேயே தங்களது வாழ்க்கையை நகர்த்த வேண்டியுள்ளது. ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் மின் இணைப்பு கொடுப்பதற்கு மின்வாரிய அதிகாரிகள் முன்வருவதில்லை என்று புகார் சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமுக்கு டி.கோட்டாம்பட்டியிலுள்ள அண்ணாநகர் மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும்; சப் கலெக்டர் குணசேகரனை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அண்ணா நகரில் வசிக்கிறோம். 20 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். வீட்டு மனைப்பட்டா கேட்டு பல முறை மனுச்செய்துவிட்டோம். ஆனால் மனைப்பட்டா எங்களுக்கு இது வரை வழங்கப்படவில்லை. நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்துக்கு நடையாய் நடக்கிறோம். ஆனால் இனியும் எங்களுக்கு மின் இணைப்பு கொடுத்த பாடில்லை. புறம்போக்கு இடத்தில் இருப்பதால் எங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளோ பட்டா வழங்கமுடியாது என்று சொல்கின்றனர். இதனால் எங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. எங்களது குழந்தைகள் பாடம் படிக்க முடிவதில்லை. இரவு நேரத்தில் பாம்பு, பல்லி போன்ற ஊர்வன ஜந்துக்கள் குழந்தைகளையும் பெரியவர்களையும் தீண்டிவிடுகிறது.
இரவு நேரத்தில் மக்கள் பயத்திலேயே உறங்க வேண்டியுள்ளது. மின் இணைப்பு இல்லாததால் எந்த மின்சாதனங்களையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளை கடந்த நிலையில் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதியைக்கூட நாங்கள் பெற முடியாத சூழலில் இருக்கிறோம். அதனால் எங்களுக்கு மிக அத்யாவசிய தேவையான மின் வசதியை எப்படியாவது பெற்றுத்தர வேண்டுமென்று மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறியிருக்கின்றனர். இது குறித்து மனு கொடுக்க வந்த கணபதி கூறுகையில், "" 20 ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு நடையாய் நடந்து வருகிறோம். இது வரை எங்களுக்கு தீர்வு காணப்படவில்லை. இப்பிரச்னையை சாதாரணமாக நினைத்து விட்டுவிட்டால் நாங்கள் போராட்டத்தில் குதிக்கவும் தயங்க மாட்டோம்,'' என்றார்.