மும்பை: சர்வதேச அளவிலான டுவென்டி20 போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய அணிக்கான புதிய சீருடை நேற்று மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் டோணி, யுவராஜ் சிங், ஷேவாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் அடுத்த மாதம் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் இந்திய அணி வீரர்கள் புது பொலிவுடன் தோன்றும் வகையில், டுவென்டி20 போட்டிக்கான இந்திய அணிக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. நைக் நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த புதிய சீருடையை நேற்று மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் அவருடன் துவக்க வீரர் ஷேவாக், யுவராஜ் சிங், விராத் கோஹ்லி, இர்பான் பதான், ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய வீரர்கள் அனைவரும் புதிய சீருடையை அணிந்து வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் டோணி கூறியதாவது,
இந்திய அணி தற்போது மனதளவிலும், உடல் அளவிலும் பலமாக உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, ஒன்றரை மாதம் ஓய்வு கிடைத்ததால் வீரர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு போட்டிகளுக்கும் இடைவெளி கிடைத்ததால், இந்திய வீரர்களுக்கு ஓய்வு கிடைத்தது. எனவே அடுத்து வரும் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக ஆட தயாராக உள்ளோம்.
அடுத்த வரும் டெஸ்ட் போட்டிகளிலும், டுவென்டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாட தயாராகி வருகிறோம். யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது வீரர்களின் அறையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. யுவராஜ் சிங் அணியில் இல்லாத நிலையில், விராத் கோஹ்லி பொறுப்பேற்று ஆட வேண்டிய நிலை இருந்தது. யுவராஜ் சிங் இல்லாமல் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது என்றார்.
இந்திய அணி அடுத்ததாக நியுசிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் மற்றும் இரண்டு டுவென்டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா, நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இலங்கையில் அடுத்த மாதம் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் இந்திய அணி வீரர்கள் புது பொலிவுடன் தோன்றும் வகையில், டுவென்டி20 போட்டிக்கான இந்திய அணிக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. நைக் நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த புதிய சீருடையை நேற்று மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் அவருடன் துவக்க வீரர் ஷேவாக், யுவராஜ் சிங், விராத் கோஹ்லி, இர்பான் பதான், ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய வீரர்கள் அனைவரும் புதிய சீருடையை அணிந்து வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் டோணி கூறியதாவது,
இந்திய அணி தற்போது மனதளவிலும், உடல் அளவிலும் பலமாக உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, ஒன்றரை மாதம் ஓய்வு கிடைத்ததால் வீரர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு போட்டிகளுக்கும் இடைவெளி கிடைத்ததால், இந்திய வீரர்களுக்கு ஓய்வு கிடைத்தது. எனவே அடுத்து வரும் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக ஆட தயாராக உள்ளோம்.
அடுத்த வரும் டெஸ்ட் போட்டிகளிலும், டுவென்டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாட தயாராகி வருகிறோம். யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது வீரர்களின் அறையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. யுவராஜ் சிங் அணியில் இல்லாத நிலையில், விராத் கோஹ்லி பொறுப்பேற்று ஆட வேண்டிய நிலை இருந்தது. யுவராஜ் சிங் இல்லாமல் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது என்றார்.
இந்திய அணி அடுத்ததாக நியுசிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் மற்றும் இரண்டு டுவென்டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா, நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.