மும்பை: இந்திய அணியில் மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு(2011) நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய இவர், தொடர் நாயகன் விருது பெற்றார். அதன்பிறகு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.
தற்போது குணமடைந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வரும் யுவராஜ் சிங், நேற்று மும்பையில் நடைபெற்ற இந்திய அணியின் புதிய டுவென்டி20 சீருடை அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இந்திய அணியில் மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.
இந்திய அணியில் விளையாட எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், முதல் போட்டியில் பங்கேற்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. எனது மனதில் சற்று பயம் உள்ளது என்றார். விழாவில் புதிய சீருடையை அறிமுகப்படுத்திய இந்திய கேப்டன் டோணி, அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ் சிங்கை வாழ்த்தி பேசினார்.
இது குறித்து கேப்டன் டோணி கூறியதாவது,
இந்திய அணியில் யுவராஜ் சிங் இல்லாத போது, அவரது பணியை விராத் கோஹ்லி கவனித்து வந்தார். இந்திய வீரர்களின் அறையில் யுவராஜ் சிங் என்ற நபரை இழந்து தவித்தோம். அவரது பேட்டிங் திறமையை காட்டிலும் அவர் அணி வீரர்கள் அறையில் இருந்தாலே கலகலப்பாக இருந்தது. யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு(2011) நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய இவர், தொடர் நாயகன் விருது பெற்றார். அதன்பிறகு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.
தற்போது குணமடைந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வரும் யுவராஜ் சிங், நேற்று மும்பையில் நடைபெற்ற இந்திய அணியின் புதிய டுவென்டி20 சீருடை அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இந்திய அணியில் மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.
இந்திய அணியில் விளையாட எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், முதல் போட்டியில் பங்கேற்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. எனது மனதில் சற்று பயம் உள்ளது என்றார். விழாவில் புதிய சீருடையை அறிமுகப்படுத்திய இந்திய கேப்டன் டோணி, அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ் சிங்கை வாழ்த்தி பேசினார்.
இது குறித்து கேப்டன் டோணி கூறியதாவது,
இந்திய அணியில் யுவராஜ் சிங் இல்லாத போது, அவரது பணியை விராத் கோஹ்லி கவனித்து வந்தார். இந்திய வீரர்களின் அறையில் யுவராஜ் சிங் என்ற நபரை இழந்து தவித்தோம். அவரது பேட்டிங் திறமையை காட்டிலும் அவர் அணி வீரர்கள் அறையில் இருந்தாலே கலகலப்பாக இருந்தது. யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.