கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, மனைவியை கொலை செய்த சாஃப்ட்வேர் இன்ஜினியர், போலீஸ் விசாரணையின் போது, போலீஸ் ஸ்டேஷன் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக, எஸ்.ஐ., உள்ளிட்ட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி அடுத்த சின்ன பர்கூரை சேர்ந்தவர் மணிகண்டன், 25. சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கும் அச்சமங்கலத்தை சேர்ந்த ஆஷா, 22, என்பவருக்கும் மூன்றாண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் யாசிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.மணிகண்டன், சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து குடும்பத்துடன் அச்சமங்கலம் வந்தார்.காலையில் டிஃபன் சாப்பிட்டு விட்டு, பயண களைப்பில் மணிகண்டனும் அவரது மனைவியும் தனி அறையில் ஓய்வு எடுக்க சென்றுள்ளனர். அப்போது, ஆஷாவை ஆசைக்கு இணக்க மணிகண்டன் வற்புறுத்தியுள்ளார்.இரவு முழுவதும் பயணம் செய்தது களைப்பாக இருப்பதால், ஆசைக்கு இணங்க ஆஷா மறுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த மணிகண்டன், அறையில் இருந்த கட்டையால் மனைவி ஆஷாவை கடுமையாக தாக்கினார். இதில், தலை நசுங்கி ஆஷா சம்பவ இடத்தில் இறந்தார்.
அங்கிருந்து தப்பிய மணிகண்டன், கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார். பணியில் இருந்த எஸ்.ஐ., சந்திரன், ஏட்டுகள் பூபதி, தேவன் ஆகியோர், மணிகண்டனை போலீஸ் ஸ்டேஷன் முதல் மாடியில் வைத்து விசாரித்தனர்.நேற்று முன்தினம் மாலை, திடீரென மணிகண்டன் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், அவர் படுகாயமடைந்தார்.
அதிர்ச்சியடைந்த போலீஸார், மணிகண்டனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்øகாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவல் அறிந்த எஸ்.பி., அசோக்குமார், சம்பவம் குறித்து விசாரித்தார். கொலை குற்றவாளியிடம் விசாரணை நடத்திய போலீஸார், பணியில் அஜாக்கிரதையாக இருந்தது தெரிந்தது.இதையடுத்து, எஸ்.ஐ., சந்திரன், ஏட்டுகள் பூபதி, தேவன் ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., அசோக்குமார் உத்தரவிட்டார்.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் யாசிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.மணிகண்டன், சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து குடும்பத்துடன் அச்சமங்கலம் வந்தார்.காலையில் டிஃபன் சாப்பிட்டு விட்டு, பயண களைப்பில் மணிகண்டனும் அவரது மனைவியும் தனி அறையில் ஓய்வு எடுக்க சென்றுள்ளனர். அப்போது, ஆஷாவை ஆசைக்கு இணக்க மணிகண்டன் வற்புறுத்தியுள்ளார்.இரவு முழுவதும் பயணம் செய்தது களைப்பாக இருப்பதால், ஆசைக்கு இணங்க ஆஷா மறுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த மணிகண்டன், அறையில் இருந்த கட்டையால் மனைவி ஆஷாவை கடுமையாக தாக்கினார். இதில், தலை நசுங்கி ஆஷா சம்பவ இடத்தில் இறந்தார்.
அங்கிருந்து தப்பிய மணிகண்டன், கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார். பணியில் இருந்த எஸ்.ஐ., சந்திரன், ஏட்டுகள் பூபதி, தேவன் ஆகியோர், மணிகண்டனை போலீஸ் ஸ்டேஷன் முதல் மாடியில் வைத்து விசாரித்தனர்.நேற்று முன்தினம் மாலை, திடீரென மணிகண்டன் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், அவர் படுகாயமடைந்தார்.
அதிர்ச்சியடைந்த போலீஸார், மணிகண்டனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்øகாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவல் அறிந்த எஸ்.பி., அசோக்குமார், சம்பவம் குறித்து விசாரித்தார். கொலை குற்றவாளியிடம் விசாரணை நடத்திய போலீஸார், பணியில் அஜாக்கிரதையாக இருந்தது தெரிந்தது.இதையடுத்து, எஸ்.ஐ., சந்திரன், ஏட்டுகள் பூபதி, தேவன் ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., அசோக்குமார் உத்தரவிட்டார்.